Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இவர்கள் குற்றவாளிகள் இல்லையென்றால், கொலையாளிகள் யாரென்று கூறுவாரா வைகோ? – ஞானதேசிகன் கேள்வி. 
[Monday, 2014-02-24 19:32:40]
gnanadesigan-240214-150.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் குற்றவாளிகள் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கும் சில தலைவர்களை கேட்கிறேன், இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான குற்றவாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? அவர்களைப் பற்றி மக்கள் மத்தியில் பகிரங்கமாக சொல்லுங்கள்.

  

பாக்கியநாதன், பத்மா, நளினி ஆகியோர் ராயப்பேட்டையில் இருந்தார்கள். பேரறிவாளனும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். ஆனால் தமிழ்நாட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கும், ராஜீவ் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்களே அப்படியானால் ஏற்கனவே இவர்களைப் பற்றி வைகோ அறிந்து வைத்து இருக்கிறாரா?. பல நாடுகளில் பல தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாடுகளில் எல்லாம் கொலையாளிகளுக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுப்பது இல்லை. ஆனால் கொலையாளிகளுக்காக கண்ணீர் சிந்துகிற அவல நிலையை இங்கு தான் பார்க்க முடிகிறது.

கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கும் முன்பே தனது முடிவை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் நீங்கள் பெறுவீர்கள் என்று கூறினார்.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104337&category=IndianNews&language=tamil

இருபத்திரண்டு வருடமா வைத்து தாளித்த அரசியல் பொய்கள் வெளிவந்துவிடும் என்று துடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி வழக்கு -கருத்துக்கள்.. அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா.. ?

ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்று,

23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேர்களை

விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு எடுத்திருக்கும்

முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி பெருந்தலைகள்

சில கருத்து வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சட்ட அமைச்சர் கபில் சிபலின் 

பொறுப்பான (!) கருத்து -

“ராஜீவ் காந்தி கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வித 

சலுகையும் அளிக்கப்படக் கூடாது என்பதே அட்டர்னி 

ஜெனரலின் வாதமாக இருந்தது. ஆனால் தற்போது

நீதிமன்றம் ஒரு முடிவை எடுத்து தீர்ப்பை அறிவித்துள்ளது.

விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நீதிமன்ற தீர்ப்பை 

மதித்து நடந்தாக வேண்டும். எனவே மத்திய அரசு உச்ச

நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கும்.”

கபில் சிபல் அவசரப்பட்டு, ராகுல் காந்திக்கு முன்னதாக

தன் கருத்தைக் கூறி விட்டார். நாளையே

தன் கருத்துக்களை அவர் மாற்றிக் கொள்ள

வேண்டியிருக்கும். இல்லையேல் -

அவரே மாற்றப்படுவார்…!

தமிழக அரசின் முடிவு குறித்து கேட்டதற்கு, அவருக்குப் பின் 

கருத்து கூறிய காங்கிரஸ் 

துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறி இருப்பது -

rahul-latest.jpg?w=640

“முன்னாள் பிரதமரும், என்னுடைய தந்தையுமான

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளை 

விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவு, 

எனக்கு கவலை அளிக்கிறது.

பிரதமரைக் கொலை செய்த சில நபர்களே விடுதலை 

செய்யப்படுகிறார்கள் என்றால், சாமானிய மனிதர்களுக்கு 

எப்படி நீதி கிடைக்கும்?

இந்த நாட்டில், பிரதமருக்குக் கூட நீதி கிடைக்கவில்லை.

இது என் மனதின் குரல்.

நான் மரண தண்டனை மீது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

அது, என் தந்தையை மீண்டும் கொண்டுவந்து கொடுக்காது.

ஆனால், இது என் தந்தையோ அல்லது குடும்பமோ 

சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இது, ஒரு நாட்டின் 

விவகாரம்” .

முன்னுக்குப் பின் முரணான ஒரு அபத்தமான கருத்து இது.

காரணம் அறியாமையா அல்லது அயோக்கியத்தனமா

என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், அவர் தந்தை பிரதமர் அல்ல முன்னாள் பிரதமர்

என்பதை அவர் மறக்கக்கூடாது.

சாமானிய மனிதர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்

என்று கவலைப்படுகிறாரே - இவர் தந்தை காரணமாகவும்

தாய் காரணமாகவும் ஆயிரக்கணக்கான -

ஏன் லட்சக்கணக்கான தமிழர்கள் 

அநாதைகள் ஆயினரே – அவர்களுக்கு நியாயம் 

கிடைத்ததா என்று இவர் ஏன் கவலைப்படவில்லை ..?

இங்கு சில விஷயங்கள் விளக்கப்பட்டாக வேண்டும்.

வடக்கே மீடியாக்கள் கூட அலறுகின்றன -

“ராஜீவ் கொலைகாரர்கள் விடுதலை” என்று.

நாம் தெரிந்து கொண்ட அளவிற்கு புரிந்து கொள்ள

அவர்களுக்குப் பொறுமை இல்லை.

முதல் விஷயம் -

இவர்களில் யாரும் கொலைகாரர் கிடையாது.

தெரிந்தோ, தெரியாமலோ -

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு விட்டார்கள் -

அவ்வளவு தான். 8 ரூபாய்க்கு பேட்டரி செல் வாங்கிக்

கொடுத்தவர், பென்சில் வாங்கிக் கொடுத்தவர், ரப்பர்

வாங்கிக் கொடுத்தவர் எல்லாம் கூட இந்த வழக்கைப் 

பொறுத்த வரை கொலைகாரர் என்று கூறப்படுகிறார்கள்.

நேரடியாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் 

ஏற்கெனவே குண்டுவெடிப்பிலோ, போலீசால் சுடப்பட்டோ,

தற்கொலை செய்து கொண்டோ மரணமடைந்து விட்டார்கள்.

எனவே இங்கு கொலைகாரர்களை விடுவிப்பது என்கிற

பேச்சே வராது.

இரண்டாவது -

இவரது அப்பாவைக் கொன்றவர்கள் ஏதோ தண்டிக்கப்படாமல் 

விடுதலை செய்யப்படுவது போல் சித்தரிக்கிறார்.

அத்தனை பேரும் 23 வருடங்கள் தனிமைச் சிறையில் 

வெந்திருக்கிறார்கள் என்பதை சுகமாக இவர் மறைத்து

அல்லது மறந்து விடுகிறார்.யாரும் தண்டனையிலிருந்து

தப்பவில்லை -கொடும் தண்டனையை ஏற்கெனவே 

அனுபவித்து விட்டவர்கள் இவர்கள் அத்தனை பேரும்.

மூன்றாவது -

ஏதோ தமிழ்நாடு அரசு சட்ட விதிகளை மீறி இவர்களை 

விடுவிப்பது போல் இவர் கருத்து கூறுகிறார்.

Criminal Procedure Code-ல் கூறப்பட்டு இருக்கும்

சட்ட விதிமுறைகளின்படி தான் இவர்கள் விடுதலை 

செய்யப்படுகிறார்கள்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு,

14 ஆண்டுக்கால சிறைத்தண்டனையை அனுபவித்தவர்களை

விடுதலை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுக்கும்

சட்டப்பிரிவுகளின் கீழ் தான் இவர்கள் விடுதலை 

செய்யப்படுகிறார்கள்.

எனவே இதில் சட்டவிரோதம் எதுவுமே இல்லை.

நான்காவது -

உச்சநீதிமன்றமே தனது தீர்ப்பில், 

Criminal Procedure Code விதிகளைப் பின்பற்றி

இவர்களை விடுதலை செய்வது பற்றி மாநில அரசு 

முடிவெடுக்கலாம் என்று கூறி இருக்கிறது. எனவே

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தான் தமிழக அரசு இந்த

முடிவை எடுத்திருக்கிறது. இதில் சட்ட விரோதம்

எங்கிருந்து வந்தது ..?

உச்சநீதிமன்றம் இன்னமும் கூறுகிறது -

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும்

சிறையில் எவ்வித துன்பத்திற்கும், சித்ரவதைக்கும்

ஆளாகவில்லை என்றும், மகிழ்ச்சியாக ( ?)

இருந்தார்கள் என்றும் மத்திய அரசு தரப்பில்

கூறும் வாதத்தை ( எப்பேற்பட்ட அயோக்கியத்தனமான

வாதம் ..?) நாங்கள் ஏற்கவில்லை. 23 ஆண்டுகளாக

சிறையில் இருப்பவர்களின் மனம் எந்த அளவிற்கு 

வேதனைப்படும் என்பதும், அவர்களுக்கு ஏற்படும் 

துன்பமும் அனைவருக்கும் தெரியும்.

தங்கள் கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 

குடியரசுத் தலைவருக்கு மீண்டும் மீண்டும்,பல முறை 

கைதிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதிலிருந்தே அவர்கள் பட்ட 

வேதனை புரிகிறது.”

ஐந்தாவது -

மாநில அரசுக்கே அதிகாரம் உண்டென்றால் - மத்திய

அரசிடம் ஏன் அனுமதி கேட்க வேண்டும் என்று சிலர்

கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒன்றை இங்கு விளக்கியாக வேண்டும்.

Cr.P.C.section-435 ஒரு நடைமுறையை

வலியுறுத்துகிறது. மத்திய அரசின் புலன் விசாரணை

அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில், 

சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் தண்டனையை 

குறைப்பதாக இருந்தால், மாநில அரசு – மத்திய அரசை

கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று சட்ட விதி கூறுகிறது.

இந்த வழக்குகள் அந்தப் பிரிவின் கீழ் வருகின்றன.

எனவே இவற்றைப்பற்றி மத்திய அரசுடன் கலந்து 

ஆலோசிக்க வேண்டியது சட்டப்படி அவசியமாகிறது.

கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிற சட்டப்பிரிவு,

அதே சமயத்தில், மத்திய அரசு கூறுவதை மாநில அரசு

ஏற்று அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பதை

எங்கும் வலியுறுத்தவில்லை…!

கலந்தாலோசிக்க வேண்டும் அவ்வளவு தானே ?

“இன்ன மாதிரி முடிவெடுத்திருக்கிறோம்,

உங்களுக்கு இதைப்பற்றி எதாவது சொல்ல வேண்டி 

இருக்கிறதா ?”

- என்று கேட்டு தகவல் அனுப்பியாகி விட்டது.

“பதில் அனுப்பியாக வேண்டுமே என்கிற

கவலை கூட உங்களுக்கு வேண்டாம். 3 நாட்களில் 

உங்களிடமிருந்து பதிலேதும் வரவில்லையென்றால்,

உங்களுக்கு இதைப்பற்றி கூற ஏதுமில்லை என்று

எடுத்துக்கொண்டு, நாங்கள் மேற்கொண்டு

ஆக வேண்டியதைப் பார்க்கிறோம்” -

-என்றும் மத்திய அரசுக்கு சொல்லியாகி விட்டது.

இதில் எங்கே வருகிறது சட்டவிரோதம் …?

மத்திய அரசின் கருத்துக்கள் -

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று

மேலே போய்க்கொண்டே இருக்கலாம்

முதுகெலும்புள்ள மாநிலமாக இருந்தால்…!

அதைத்தான் முதலமைச்சர் சட்டமன்றத்தில் -

சொல்லில் காட்டி இருக்கிறார்.

சட்டம் ஒரு இருட்டறை. தெளிவான வாதங்கள்

தான் விளக்கு வெளிச்சம்.

இத்தகைய வாதங்களின் துணையோடு தான் தமிழக அரசு

மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ்

தலைவர்கள் யாராவது பேசினால் – அது அறியாமை என்று

எடுத்துக் கொள்ளலாம்..!

ஆனால் தெரிந்து கொண்டே யாராவது பேசினால், 

அது ….. அயோக்கியத்தனம் -

கண்டிக்கப்பட வேண்டும்.

http://vimarisanam.wordpress.com/2014/02/20/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.