Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா மனித உ(எ)ரிமை அமைப்பு-தமிழ்ப்பொடியன்

Featured Replies

1975078_10152021492758002_1373723781_n.j

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 100 இக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய மனிதப்புதைகுழி!!!!!
தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்....(செய்தி)

1.கொலைசெய்து புதைத்தவனே அதை மீண்டும் தோண்டி எடுத்துக்காட்டும் வினோதம்...

2.மண்டை ஓடுகளில் "தமிழன்" என்று எழுதப்படவில்லை...

3.ஐ.நா என்ற ஒரு மனித உ(எ)ரிமை அமைப்புக்கு கண் தெரியாமல் போய் 5 வருடம்!!!!

4.இதில் யாரும் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர்களே தாங்களாக கிடங்கு கிண்டி தங்களை தாங்களாகவே புதைத்திருக்கலாம் என ஐ.நா நிபுணர் குழு(?) கண்டுபிடிப்பு.
புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்களா? இல்லை அவர்களாகவே புதைந்துபோனார்களா என்பது புரியாத புதிராக ஐ.நா மனித உ(எ)ருமை அமைப்புக்கு இருப்பதாக அதன் முக்கிய பேச்சாளர் தெரிவிப்பு.

5.இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது (?) மனித புதைகுழி என்பதால் ஐ.நா இது பற்றிய விளக்கத்தினை சிறிலங்கா அரசுக்கு வழங்கிவருகிறது.

6.புதைகுழிக்குள் மனிதர்கள் புதைக்கப்படும் போது மனிதநேயத்துடனும் யுத்த விதிகளுக்கு உட்பட்டுமே சிறிலங்கா அரசு தமிழர்களை புதைத்திருப்பதாக ஐ.நா வின் மனிதநேய பிரிவு தெளிவாக தெரிவித்துள்ளது.
இனிவரும் காலங்களில் மனிதபுதைகுழிக்குள் தமிழர்கள் புதைக்கப்படும்போது ஐ.நா வின் மனித நேய கண்காணிப்பாளர்களின் முன்பாக அவர்களின் அனுமதி பெற்று புதைக்கப்படவேண்டும் என அதன் செயலாளர் பான் கீன் மூன் அறிவிப்பு.

முள்ளிவாய்க்காலில் இப்படி ஆயிரக்கணக்கில் தமிழர்கள் மனித புதைகுழிக்குள் புதைக்கப்படும் போது ஐ.நா நேரடியாக கண்காணித்ததையும் ஆலோசனை வழங்கியதையும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

7.தமிழர்கள் புதைகுழிக்குள் புதைக்கப்படும் போது அவர்கள் எந்தவிதமான சித்திரவதைக்கும் உட்படுத்தப்படவில்லை எனவும், புதைக்கும் போது ஏற்பட்ட சிறு சிறு சிராய்ப்பு காயங்களைத்தவிர எந்தவிதமான அடிகாயங்களோ சித்திரவதை செய்ததற்கான அடையாளங்களோ இல்லை எனவும் ஐ.நா மருத்துவ நிபுணர் குழு அறிக்கை...!!!
கிண்டும் போது மண்வெட்டி படுவதால் மண்டைஓடுகளில் சிறு காயங்கள் ஏற்படும் எனவும் அதனால் அவர்கள் மண்வெட்டியால் அவர்களின் தலைகளில் அடித்து கொலை செய்ததாக தவறான முடிவுக்கு வரவேண்டாம் எனவும் ஐ.நா மேலும் வலியுறுத்தியுள்ளது.

8.எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்ற விபரம் அடங்கிய 
இறுவட்டு(CD) சிறிலங்கா காவல்துறைக்கு சட்டபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும்,தூரதிஸ்டவசமாம அந்த இறுவெட்டில்(CD) சிறு கிறுக்கல் (crack)ஏற்பட்டதால் அந்த விபரங்களை சரியாக வெளியிட முடியாமல் இருப்பதாகவும் சிறிலங்காவின் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

9.மேலும் இந்த படுகொலையை செய்தவர்கள் செவ்வாய் கிரக வாசிகள் என்பதால் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஐ.நா அமைப்பே சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க முடியும் என பூமியின் ஐ.நா சட்ட வல்லுநர் குழு தெரிவிப்பு.

10.இன்னுமாடா நம்புறீங்கள்... ஐ.நா ஒரு மனித உரிமை அமைப்பெண்டு??????

-தமிழ்ப்பொடியன்-

 

https://soundcloud.com/podiyan/koolaru1withsong

 

 

https://soundcloud.com/podiyan/koolaru1withsong

 

1922471_10152027585318002_620059349_n.jp

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.