Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது: - பழ. நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
அமெரிக்கா தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது: - பழ. நெடுமாறன் 
[Tuesday, 2014-03-04 21:08:37]
nedumaran-150seithy.jpg

அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும். மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது.

  

இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்திரமான நம்பகத்தன்மையுள்ள சர்வதேச விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என இத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின்படி ராஜபக்ச அரசே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை நடத்தவும் பாதிக்கப்படட மக்களுக்கு உதவி செய்யவும் வேண்டுமென வற்புறுத்தப்பட்டது.

ஆனால் இத்தீர்மானங்களை ராஜபக்ச அரசு கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. மீண்டும் அவருக்கு இரண்டாண்டு காலம் அவகாசம் கொடுப்பது என்பது இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களை அழிப்பதற்கு துணை போவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்து இந்தத் தீர்மானத்தில் 13வது சட்டத்திருத்தத்தின்படி வடக்கு மாநில முதலமைச்சருக்கு தேவையான அதிகாரத்தையும் நிதியையும் வழங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

13-ஆவது சட்டத்திருத்தத்தையே உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் ராஜபக்ச சாகடித்து விட்டார். இப்போது 13வது சட்டத்திருத்தமே இல்லை.

அதன்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது நடக்கப்போகாத ஒன்றாகும். அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானமாகும்.

இந்தத் தீர்மானத்திற்கு திருத்தங்கள் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவ வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104937&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

USA தீர்மான வரைபு தமிழர்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஒருசேர ஏமாற்றியுள்ளது - மனோ கணேசன்

 

 

usa_CI.jpg

ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு, தமிழ் மக்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஒருசேர ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு துணைக்கருவியே தவிர அது மாத்திரம் எமக்கு நிம்மதியையும், நியாயத்தையும் கொண்டுவந்து தந்து விடாது என்றும், உள்நாட்டிலே இந்த அரசுக்கு எதிரான ஜனநாயக  போராட்டம் மற்றும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகள் மூலமாகவே தமிழ் மக்கள் நியாய இலக்கை அடைய முடியும்  என நாம் எப்போதும் சொல்லி வந்தது இன்று சரியாகியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின்  ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கை வந்து செல்லும் அமெரிக்க அரச பிரமுகர்கள் வரிசையாக வடக்குக்கு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், துன்புற்று வாழும் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை என இன்று தெரிய வந்துள்ளது.  சர்வதேச விசாரணை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போதும், இன்று அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.  அதேபோல் அமெரிக்க தீர்மானம் மூலம் "இதோ, அதோ வருகிறது, மின்சாரக்கதிரை " என கோஷமிட தயாராக இருந்தவர்களுக்கும் இந்த தீர்மான வரைபு ஏமாற்றத்தை தந்துள்ளது. இவை  ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால், எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆகும்.

கைது செய்யப்பட்டு, சரணடைந்து, கடத்தப்பட்டு சிறைகூடங்களில் வாடும் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அனைத்து சிறைக்கூடங்களிலும், உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய கைதிகளுக்கு விசேட நீதிமன்றங்களை அமைப்போம் என அமைச்சர்கள் நிமல் சிறிபாலவும்,  ரவுப் ஹக்கீமும்  உத்தரவாதம் வழங்கினார்கள். இன்று வரிசையாக கைதிகள் இறந்து போவதை தவிர எதுவும் மாற்றம் பெறவில்லை.

சமீபத்தில் என்னை சந்தித்த ஒருகாலத்தில் மலையகத்தில் இருந்து சென்று வன்னியில் குடியேறி வாழும்  ஒரு தமிழ் தாய் இப்படி சொன்னார். " ஐயா, என் கணவனை கடத்தி போனார்கள். மகனையும் இராணுவம் பிடித்துகொண்டு போனது. இப்போது என் பிரச்சனை என் கணவரையும், மகனையும் தேடுவது அல்ல. என் பருவ வயது மகளையும், என்னையும் பாதுகாத்து கொள்வதே  என் போராட்டம்". இது போர் முடிந்த வலயத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் நிர்க்கதியாயுள்ள தமிழ் மகளிரது  கண்ணீர் படலத்தின் ஒரு சிறு துளி.  

வடக்கு மாகாணசபை எப்படி நடக்கிறது என மன்மோகன் சிங், நமது ஜனாதிபதியை கேட்டாராம் என ஊடக செய்தி கூறுகிறது. அதற்கான பதிலை வழங்கக்கூடிய பொருத்தமான நபர் விக்கினேஸ்வரன் ஆகும். அவர் அதை ஏற்கனவே கூறிவிட்டார். வடமாகாணசபை என்ற வெற்று பாத்திரத்தையே தொடர்ந்து தூக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என அரசு நினைப்பதை பட்டவர்த்தனமாக விக்கினேஸ்வரன் கூறிவிட்டார்.

 

இவற்றையெல்லாம் அமெரிக்க வரைபு கணக்கில் எடுக்கவில்லை. சர்வதேச சமூகம் அல்லது அமெரிக்கா அனைத்து தீர்வுகளையும் அள்ளி வழங்கும் என, உள்நாட்டு ஜனநாயக போராட்டங்களை ஒத்தி வைக்க கூடாது. சர்வதேச சமூகம் அவசியம்தான். ஆனால், அது துணைபாத்திரம்தான் வகிக்க முடியும். நாம் வாழும் பூமியில் நாம் அரசியல்ரீதியாக பலமாக எம்மை நிலைநிறுத்திக்கொண்டு ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், தென்னிலங்கை அரசியல் நகர்வுகளுடன் ஒன்றிணைவோம் என்றும் நாம் சொல்லி வந்தவை சரியாக அமைந்து விட்டன.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103874/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நகல் வரைபு நீதி வேண்டி நிற்கும் தமிழர்களை ஏமாற்றியுள்ளது
BTF
BTF_CI.jpg

 

இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நகல் வரைபு நீதி வேண்டி நிற்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் திங்கட் கிழமை (03-03-2014) வெளியிடப்பட்ட நகல் வரைபு தமிழ் மக்களிடையே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இலங்கையில் தொடர்ந்தும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதி கோரி நிற்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பை குறித்த நகல் வரைபு சிதைத்துள்ளது என்றே கூறலாம்.
 
இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்த கோரி நின்ற நிலையில் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நகல் வரைபானது உள்நாட்டில் மேலும் ஒரு விசாரணைப் பொறிமுறையினை உருவாக்கி செயற்படுத்த வேண்டும் என கோரிநிற்கின்றமை இலங்கை அரசை மேலும் ஒரு வருட காலத்தை கடத்தி வீணடிக்கச் செய்ய வழங்கும் சந்தர்ப்பமாகவே அமைகிறது. இலங்கை நீதியான முறையில் உள்நாட்டில் விசாணைப் பொறிமுறை ஒன்றினை மேற்கொள்ளும் அளவிற்கு வலுவினைக் கொண்டிருக்கவில்லை என மனித உரிமை ஆணையாளர் ஏலவே தமது அறிக்கையில் வெளியிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
 
2009 இல் இரத்தக்கறை படிந்த யுத்தத்தினை உள்நாட்டில் எதிர் கொண்டிருந்த தமிழர்கள்; இன்றும் தொடர்ச்சியாக இன்னல்களை எதிர் கொண்டு வரும் நிலையில் மேலும் ஒரு வருட கால இழுத்தடிப்பானது நீதி வேண்டி எதிர்பார்ப்புடன் காத்திருந்த தமிழர்களை மாத்திரமல்ல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் கடும் விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.
 
ஐ நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அவரை சந்தித்திருந்த ஆர்வலர்கள் உட்பட பலதரப்பட்டோர் இலங்கை அரசின் கண்காணிப்பிற்கும் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியான நெருக்குவாரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறிருக்க உள்நாட்டு நீதி விசாரணை என்ற பெயரில் இலங்கை அரசுக்கு வழங்கப்படும் கால இழுத்தடிப்பானது மேலும் உள்நாட்டில் அரசுக்கு எதிராக உள்ள சாட்சிகளை அழிப்பதற்கு ஏதுவாக உள்ளதை சர்வதேச சமுகம் மறந்து நிற்கிறது என பலரும் சாடியுள்ளனர். இதற்கு சான்றாக காணாமற் போனோர்கள் தொடர்பில் தேடிக் கண்டறிவதற்காக உள்நாட்டில் நிறுவப்பட்ட ஆணைக்குழுவையும் அதில் முறைப்பாடு செய்த அப்பாவிப் பொது மக்களின் நிலை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் குறித்த ஆணைக்குழுவில் காணாமற் போனோர் தொடர்பில் பதிவினை மேற்கொண்ட மற்றும் சாட்சியமளிக்கச் சென்றிருந்த மக்களது வீடுகளிற்கு சென்றிருந்த இலங்கைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை அச்சுறுத்தியிருந்தமையும் அவர்களது முறைப்பாட்டினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்திருந்தமையும் இங்கு  கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.
இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்திற்கான மூல காரணம் குறித்து நகல் வரைபில் போதிய கவனமளிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
2009 இல் இடம் பெற்ற யுத்தத்தின் இறுதியில் ஐ நா உட்பட சர்வதேசம் மீது கொண்டிருந்த நம்பிக்கையினை தமிழர்கள் இழந்திருந்தனர் என ஐ நா வின் பொதுச் செயலாளர் ஏற்றுக் கொண்டிருந்தார். ஐநாவின் இத்தவறை பொதுச் செயலாளர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டது தமிழ் மக்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள நகல் வரைபு தமிழர்களது எதிர்பார்ப்பை தகர்த்துள்ளது.
 
இறுதி யுத்தத்தில் இலங்கையில் இடம் பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஓர் சர்வதேச சுயாதீன விசாரணையினை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை தெளிவான ஓர் அழைப்பினை விடுத்திருந்தது. சர்வதேச ரீதியாக பரந்து வாழும் ஒட்டு மொத்த தமிழர்களின் வேண்டுதலும் இதுவாகவே இருந்தது.
நிற்க இலங்கை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை வலியுறுத்துவதாக பிரித்தானியப் பிரதமரும் அவரது அரசும் எமக்கு ஏலவே உறுதியளித்திருந்தனர். இதனை ஒத்ததாகவே சர்வதேச ரீதியாக பலரது குரலும் ஒலித்துக் கொண்டிருந்த நிலையில் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பி;கப்பட்டுள்ள நகல் வரைபு தமிழர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
 
இந்நகல் வரைபு தொடர்பில் பிரித்தானித் தமிழர் பேரவை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன். வரைபு தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி வாக்களிப்பு நடை பெற உள்ள நிலையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருன் தமிழர்களுக்கு அளித்துள்ள வாக்குதிகளை நிறைவேற்றி சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை அமைப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.