Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய போர்க்குற்ற ஆதாரம் சனல் - 4 வினால் வெளியீடு : அரசாங்கம் மறுப்பு

Featured Replies

புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் - 4 வெளியிட்டுள்ளது.
09_sri_lanka_screen2_w_MED.jpg
 
இந்த காணொளி இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் பாலியல் ரீதியான கொடுமைகளை புரிவதை வெளிப்படுத்துகிறது.
 
இந்தக் காட்சிகளை பிரித்தானிய தமிழர் பேரவை தமக்கு வழங்கியுள்ளதாக சனல் - 4 தெரிவித்துள்ளது.
 
இந்த காணொளி ஆதாரம் பற்றி சனல் - 4 பணிப்பாளர் கெலும் மெக்ரே குறிப்பிடுகையில்,
 
தான் பார்த்ததிலேயே இதுதான் மிகவும் மோசமான காணொளி ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இறந்த பெண் போராளிகளின் உடல்கள் மீது சீருடையினர் திரும்ப திரும்ப பாலியல் ரீதியான கொடுமைகளை செய்துள்ளதற்கான ஆதாரத்தை இந்த காணொளி வெளிப்படுத்துகிறது.
 
இலங்கையில் உள்நாட்டுப் போரின் துயரமான இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான படங்களில் எந்த தவறுகளும் இல்லை எனவும் அந்த காட்சிகளை தான் பார்த்திருப்பதாகவும் அவை மோசமான காட்சிகள் எனவும் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
 
போரில் 5 மரணங்கள் நிகழ்வது சிறிய சம்பவமாக இருக்கலாம். ஆனால் போரின் இறுதி சில மாதங்களில் ஷெல் தாக்குதல்களினால் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது ஒரு சிறிய விடயமல்ல.
 
இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது என்பது சரியாக எமக்கு தெரியாது. போரின் இறுதியான இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவை படமாக்கப்பட்டிருக்கலாம்.
 
ஒரு சீருடை அணிந்தவர் தனது கைத்தொலைபேசியில் இதனை படம்பிடித்துள்ளார். அதில் மற்றுமொருவர் சிங்களத்தில் பேசுகிறார்.
 
இந்த சீருடையினர் இறந்த புலிகளின் பெண் போராளிகளின் உடலில் பாலியல் வன்கொடுமைகளை செய்து சிரித்து ஆரவாரம் செய்கின்றனர்.
 
இறந்த பெண்கள் யார் என்பதும் உண்மையில் என்ன நடந்தது என்பதும் எமக்கு தெரியாது. அவர்கள் சீருடைகளையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் போராளிகள் என்று தோன்றுகிறது.
 
இந்த படங்களை முன்னணி தடய அறிவியல் நிபுணரான கலாநிதி ரிச்சர்ட் ஷெப்பர்ட் ஆய்வு செய்ததுடன் படங்களில் உள்ள காயங்கள் உண்மையானது எனவும் காணொளிகள் போலியானவை அல்ல என்பதையும் உறுதிப்படுத்தினார்.
 
உடல்களில் காணப்படும் சில காயங்கள் போர்க் களத்தில் ஏற்பட்டதாக நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். ஆனால் அந்த காயங்கள் அப்படியானதாக இருக்கவில்லை என அவர் ஆச்சரியம் தெரிவித்தார்.
 
இந்த காயங்கள் ஒட்டுமொத்த படுகொலைகள்தான் என்பதற்கான சாத்தியத்தை தவிர்க்க முடியாது என்றும் துப்பாக்கிகளினால் சுடப்பட்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
 
பிரித்தானிய தமிழர் பேரவை எமக்கு வழங்கியிருந்த டிஜிட்டல் காணொளிகளை பிரித்தானிய நீதிமன்றத்தில் பணிபுரியும் சுயாதீனமான மரியாதைக்குரிய ஒருவர் ஆராய்ந்தார். அவரும் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார்.
 
இந்த காணொளிகள் தொடர்பில் பதிலளித்த இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இராணுவத்தினரை போன்ற சீருடையணிந்து பெரும்பான்மை சிங்கள இராணுவத்தினரைபோல் சிங்களத்தில் பேசியுள்ளதாக கூறியது.
 
சிறுவர்களை படையில் இணைத்து, பொதுமக்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பது சந்தேகமில்லை. ஆனால் அரசாங்கம் தனது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அதனை பயன்படுத்த முடியாது.
 
விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி அறிவிப்பாளர் போரின்போது பிடிப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளிகளை வெளியிட்டோம். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது எனவும் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.

 

http://virakesari.lk/?q=node/362016

 

சிறி லங்கா ஜெனோசைட் குடும்பம் எப்போது உண்மையை சொல்லியிருக்கு?

சக்கரவர்த்தி குடும்பத்திற்கு பொய் சொல்லுவது என்றால் கட்டை சம்பல் உண்ணுவது போல்.

  • தொடங்கியவர்
சானல் 4 தொலைக்காட்சியின் புதிய வீடியோ

''இலங்கைப் போரில் அருவருக்கத்தக்க மீறல்களுக்கான புதிய வீடியோ ஆதாரம்'' என்னும் தலைபில் சானல் 4 தொலைக்காட்சி நேற்று ஞாயிறன்று வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது.

கலம் மக்ரே அவர்களால் தயாரிக்கப்பட்ட, அந்த குறிப்புக்கான வீடியோ ஆதாரத்தை பிரித்தானிய தமிழர் பேரவை வழங்கியிருந்ததாக அந்தத் தொலைகாட்சி கூறியிருந்தது.

விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர்கள் என்று நம்பப்படுபவர்களின் உடல்களை நோக்கி இலங்கை இராணுவத்தினர் சிலர் மிகவும் மோசமான நடவடிக்கைகளை செய்வதாகக் கூறி, சில காட்சிகளைக் காண்பித்த சானல் 4 தொலைக்காட்சி, அவை திட்டமிட்ட வகையிலான, கொடூரமான பாலியல் வன்செயல்கள் என்றும் விபரித்திருந்தது.

அந்த வீடியோ காட்சிகள் எப்போது பிடிக்கப்பட்டவை என்பது தமக்கு தெளிவாகத் தெரியாவிட்டாலும், இலங்கைப் போரின் கடைசி இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ஏதோ ஒரு புள்ளியில் அவை பிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

படைச் சிப்பாயால் பிடிக்கப்பட்ட வீடியோ

110803135001_srilanka_channel4_video_304

முதலில் வெளியான வீடியோ ஒன்று

ஒரு படைச் சிப்பாயால் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், சிங்களத்தில் பேசும் சிப்பாய்கள் சிலர் இருப்பதாகவும், அவர்களது உடைகளைப் பார்க்கும்போது அவர்கள், ஏதோ ஒரு சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அது கூறுகிறது.

சிரித்துக் கொண்டாடும் அவர்கள், அங்கு கிடந்த பெண்களின் சடலங்களை நோக்கி, அருவருக்கத்தக்க பாலியல் மீறல்களை செய்வதாக அந்தப் படங்கள் காண்பித்தன.

அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களையும் அவர்கள், சிங்களத்தில் மேற்கொண்டனர்.

சீருடை அணியாவிட்டாலும், அங்கு சடலமாகக் கிடந்த பெண்கள், பெண் போராளிகளாக இருக்க வேண்டும் என்று கூறிய சானல் 4 தொலைக்காட்சி, அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது சரியாகத் தெரியாது என்றும் கூறியுள்ளது.

அந்த வீடியோ ஆதாரங்களை தான் பரிசோதித்ததாகக் கூறிய தடயவியல் ஆய்வாளரான டாக்டர் ரிச்சர்ட் ஷெப்பேர்ட் அவர்கள், அவை உண்மையான வீடியோக்களே என்றும் சடலங்களில் உடலில் காணப்படுபவை உண்மையான காயங்களே என்றும் தமது ஆய்வில் தெரியவந்ததாகக் கூறினார்.

அந்தச் சடலங்களில் மோதலில் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களைக் காணமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் பிடித்து வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், அந்த காட்சிகளில் ஒரு பாலியல் வல்லுறவு நடந்ததற்கான சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் அனைவரும் பெண்கள் என்றும், ஆண்கள் அல்ல என்றும், அவர்கள் உடை முற்றாகக் களையப்பட்டு, திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ஒரு ஒற்றைச் சம்பவமாகத் தெரியவில்லை என்றும் சானல் 4 கூறியுள்ளது.

இலங்கை அரசாங்கம் பதில்

இந்த காட்சிகளுக்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த வீடியோ பல்வேறு இடங்களில் வேறு நோக்கத்துக்காக திருத்தப்பட்டுள்ளது, மாற்றியமைக்கப்பட்டுள்ளது அல்லது அரசாங்க படையினரின் சீருடையை அணிந்து விடுதலைப்புலிகள் இவ்வாறு நடித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இப்படியான பிரச்சாரங்கள், இலங்கையில் நடக்கும் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

சிறார்களை படைக்குச் சேர்த்தல், தற்கொலைத் தாக்குதல்களை நடத்துதல் ஆகியவை உட்பட விடுதலைப்புலிகளும் சந்தேகத்துக்கு இடமில்லாமல், மோசமான போர்க் குற்றங்களை செய்திருக்கிறார்கள் என்றும், ஆனால், தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக அதனை இலங்கை அரசாங்கம் பயன்படுத்த முடியாது என்றும் சானல் 4 கூறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னதாக விடுதலைப்புலிகளில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இராணுவத்தினர், உயிரோடு கைது செய்ததையும், அவர் உடைகள் களையப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதையும் காட்டும் வீடியோக்களை தாம் வெளியிட்டதாகக் கூறிய சானல் 4 தொலைக்காட்சி, அந்த நிலையிலேயே தற்போதைய வீடியோ காட்சிகளும் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைப் போரின் இறுதி நாட்கள் குறித்து பல வீடியோக்கள் ஏற்கனவே வந்திருக்கின்ற போதிலும், இந்த வீடியோ அவை எல்லாவற்றையும்விட மிகவும் மோசமானதாக இருப்பதாக இலங்கைக் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை தயாரித்த, கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/03/140310_channel4video.shtml

 

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.