Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்வு பெறுகிறார் சங்ககரா

Featured Replies

ஓய்வு பெறுகிறார் சங்ககரா
மார்ச் 16, 2014.
 

 

கொழும்பு: சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்ககரா.      

இலங்கை அணியின் ‘சீனியர்’ வீரர் சங்ககரா, 36. கடந்த 2000ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500), 50 சர்வதேச ‘டுவென்டி–20’ (1311) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதுகுறித்து சங்ககரா கூறியது: வங்கதேசத்தில் நடக்கும் உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். இது, என் கடைசி ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர். இம்முடிவு வருத்தமானது என்றாலும், உண்மையானது. இதன்மூலம் அணியில் இடம் பெற காத்திருக்கும் திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுவேன்.     

ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பேன். ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை (50 ஓவர்) தொடர் மீது கவனம் செலுத்த உள்ளேன்.  எனது எதிர்காலம் குறித்து, அணித் தேர்வாளர்களிடம் பேச உள்ளேன்.     

இரண்டு முறை இலங்கை அணிக்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பைனலில் சொதப்பியதால், கோப்பை வெல்ல முடியாமல் போனது. இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்பேன்.     

இவ்வாறு சங்ககரா கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1394982332/SangakaraSriLankaRetirementT20.html

  • தொடங்கியவர்

இருபது20க்கு தொடரிலிருந்து சாதனை நாயகன் சங்கா ஓய்வு

இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இருபது20 தொடர்களிருந்து ஓய்வு பெறபோவதாக அறிவித்துள்ளார்.
பங்களாதேஷில் ஆரம்பமாகியுள்ள இருபது-20 உலக கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறபோவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Sangakkara-to-quit-T20Is-after-World-T20

36 வயதுடைய குமார் சங்கக்கார இதுவரை 50 சர்வதேச இருபது-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளதோடு 1311 ஓட்டங்களையும் கடந்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார, ' எந்த சந்தேகமும் இல்லை. இருபது-20 உலக கிண்ணத் தொடரே இறுதி தொடராக அமையும். இத் தொடருக்கு பின்னர் எந்தவொரு சர்வதேச இருபது20 தொடர்களில் பங்கேற்க மாட்டேன். இது கவரைக்குரிய விடயம். ஆனாலும் இதுவே இயற்கை.

இந்த ஓய்வுடன் எனது இருபது20 வாழ்க்கை நிறைவடைய போவதும் இல்லை. ஆனால் உள்ளூர் இருபது20 போட்டிகளில் விளையாட விருப்பமாக உள்ளேன். அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது என்றார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபது20 உலக கிண்ண இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி தோல்வியடைந்திருந்ததோடு 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒருநாள் உலக கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியிலும் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

http://www.virakesari.lk/?q=node/362184

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

சங்கக்கார, மஹேல சரியான முடிவு எடுத்துள்ளனர் : ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங்க
2014-04-11 10:32:48

இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்த்தன இருவரும் சரியா முடிவு எடுத்துள்ளதாக அவர்களது ஓய்வு குறித்து அர்ஜுன ரணதுங் தெரிவித்துள்ளார்.


'சரியான நேரத்தில் ஓய்வு பெறும் கிரிக்கெட் வீரர்கள் ஏனையோரை விட சிறப்பானவர்கள். இருபது20 இளம் வீரர்களின் போட்டி. அவர்கள் சரியான முடிவு எடுத்துள்ளார்கள் என நான் நினைக்கிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தங்களது ஓய்வு குறித்த கருத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தவறாகவும் பொறுப்பற்ற வித்திலும் வெளியிட்டதாக மஹேலவும் சங்கக்காரவும் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுப்பு வெளியிட்டது.


இந்நிலையில் நேற்றுக் காலை தனது ஓய்வினை எழுத்து மூலம் மஹேல ஜயவர்த்தன முறையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வெற்றி குறித்து 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன் முறையாக உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்து முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறுகையில், 'விசேட அணியான முயற்சியே இலங்கை அணி உலக இருபது20 கிண்ணத்தை வெற்றிபெறக் காரணமானது' என்றார்.
உலக இருபது20 தொடரில் இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்த்தன தொடரின் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இடம்பெறவில்லை.

அதேபோல இலங்கை அணியின் தொடரின் சிறந்த பந்துவீச்சாளரான நுவன் குலசேகர அதிக விக்கெட்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் 9ஆவது இடத்தினையே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரணதுங்க கூறுகையில், ஆசியக் கிண்ணத்தினூடா தனிநபர் திறமை மற்றும் பங்களாதேஷில் இலங்கையின் அனுபவம் சிறப்பாக இருந்தது.

நீங்கள் தொடரினை பார்த்தால் இளம் மற்றும் புதிய வீரர்களிடமிருந்து எராளமான பங்களிப்பு கிடைத்துள்ளது. மஹேல, சங்கக்கார பற்றியும் நாம் பேச வேண்டும் அதேபோல சிறப்பா பந்துவீசிய மாலிங்கவும். ஆனால் ஒவ்வொரு வீரரும் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டிருந்தாக நான் உணர்கிறேன்.
சாதாரணமாக தொடரில் பல நாயகர்கள் உள்ளனர். ஆனால் நான் பார்த்தது இளம் மற்றும் மூத்த வீரர்கள் இணைந்த பங்களிப்புச் செய்தனர். இது எதிர்கால இலங்கை கிரிக்கெட்டின் சிறந்த அறிகுறியாகும்.


அணியில் வெளியில் தெரியாத சிறந்த வீரர்களாக குலசேகர, சச்சித்ர சேனநாயக்க, குஷல் பெரேரா மற்றும் ரங்கண ஹேரத் ஆகிய நால்வர் உள்ளனர். தொடர் மழுவதும் சேனநாயக்கவும் குலசேகரவும் சிறப்பாக பந்துவீசினர்.

'சங்கக்கார, டில்ஷான் மற்றும் மஹேல ஆகியோரின் சுமை குஷால் பேரேரா சுமந்தார். அது சனத் ஜயசூர்யின் பாத்திரத்தை போன்று இருந்தது. சில நேரங்களில் தவறான ஷொட்களும் விளையாடினார். ஆனால் அது அவரது பாணி.


அணியின் வெற்றியில் நலன் கருதி தினேஷ் சந்திமாலின் விட்டுக்கொடுப்பானது அணித்தலைவராக யாராலும் செய்ய முடியாது. இந்த வெற்றிக் அவர் உரித்துடையவர் என நான் நினைக்கிறேன். இது ஏனைய வீரர்களுக்கான சிறந்த முன்மாதிரி' எனவும் பாராட்டினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=5130#sthash.zwsy7qUi.dpuf

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

2015 உலகக் கிண்ண போட்டிகளுக்கு பின்னரே ஓய்வு : சங்கா
0
Submitted by ceditor on Fri, 05/02/2014 - 14:21
2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னரே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள சங்கக்கரா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

டெஸ்ட் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் 2015 இல் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண ஒருநாள் போட்டி எனது இறுதி ஒருநாள் போட்டியாக அமையும்.

தேர்வு குழுவினருடன் பேசிய பிறகு இறுதி முடிவை அறிவிப்பேன். இலங்கை அணிக்காக விளையாடுவதையிட்டு நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கரா இலங்கை அணி இருபதுக்கு-20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றியதன் பின்னர் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/05/02/2015-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

  • கருத்துக்கள உறவுகள்

சங்கக்கார அற்புதமான ஒர் இடதுகை மட்டையாளரும் விக்கட்காப்பாளருமாவார். அதைவிட ஒரு கனவான் விளையாட்டு வீரர் அவர். இவரின் ஓய்வு இலங்கை அணிக்கு நிச்சயம் பேரிழப்பாகும். தொழில்முறை சட்டத்தரணியான சங்கக்கார இலங்கை அணியினை பலமுறை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வீரர்...அரசியல் ரீதியான டாச்சல் தாங்க முடியாமல் விரைவில் ஓய்வு பெறுகிறார் என நினைக்கிறேன்.வாழ்க்கையை மகிழ்ச்சியாக களிக்க வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

சங்ககரா ஓய்வு எப்போது
மே 01, 2014.

கொழும்பு: வரும் 2015 உலக கோப்பை தொடருடன், ஒருநாள் போட்டி அரங்கில் இருந்து விடைபெறவுள்ளதாக சங்ககரா தெரிவித்தார்.

 

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா, 36. இதுவரை 122 டெஸ்ட் (11,151 ரன்கள்), 369 ஒருநாள் (12,500 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

 

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் (18,426 ரன்கள்), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (13,704), இலங்கையின் ஜெயசூர்யாவுக்கு (13,430) அடுத்து, அதிக ரன்கள் குவித்த வீரர்களில், நான்காவது இடம் இவருக்குத் தான். சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடருடன், ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

பிற போட்டிகளில் தனது ஓய்வு குறித்து சங்ககரா கூறியது:

 

ஒருநாள் போட்டிகளில் எனது கடைசித் தொடராக, 2015 உலக கோப்பை தொடர் இருக்கும். டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில், தொடர்ந்து விளையாடலாம் என்று நினைக்கிறேன்.

 

இருப்பினும், இது தேர்வாளர்கள் முடிவை பொறுத்தது. ஏனெனில், 2015ல் எனக்கு 37 வயதாகி இருக்கும். இந்த நேரத்தில் ஓய்வு பெறவேண்டும். இல்லையெனில், ஓய்வு நிலைக்கு தள்ளப்படலாம். இது எனக்கு நன்றாகத் தெரியும்.

 

அணியின் பயிற்சியாளர் பார்பிரேஸ், திடீரென இங்கிலாந்து அணிக்கு சென்றது துரதிருஷ்டவசமானது. இது எங்களுக்கு பெரிய இழப்பு.

இவ்வாறு சங்ககரா கூறினார்.

http://sports.dinamalar.com/2014/05/1398952245/SangakaraSriLankaCricketRetirement.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு பெறுவதன் மூலம் மற்றவருக்கு வழி விடட்டும்

  • தொடங்கியவர்

ஓய்வு பெறுவதன் மூலம் மற்றவருக்கு வழி விடட்டும்

 

அவ்வளவு மோசமாகவா சங்ககாரா ஆடுகிறார் :icon_mrgreen:  அதை விட மஹேல,சங்ககாரா இருவரும் தங்கள் தலைமை பதவியை துறந்து இளம் வீரர்களுக்கு

 

அதற்கான சந்தர்ப்பத்தை கொடுத்து,  தாங்களும் அந்த அணியில் இருந்து வழி நடத்துகிறார்கள்.

 

நல்ல உதாரணம் குறிப்பாக அண்மையில் நடந்த T20 உலக கிண்ண போட்டியில் மலிங்க அணித் தலைவராக பொறுப்பெடுத்த போது அவருக்கு பக்க

 

துணையாக நின்று பந்து தடுப்பு வியுகம் அமைத்தது  மஹேல, சங்ககாரா என்பது யாவரும் அறிந்ததே.

  • தொடங்கியவர்

நல்லதொரு வீரர்...அரசியல் ரீதியான டாச்சல் தாங்க முடியாமல் விரைவில் ஓய்வு பெறுகிறார் என நினைக்கிறேன்.வாழ்க்கையை மகிழ்ச்சியாக களிக்க வாழ்த்துக்கள்

உண்மைதான் ரதி, சங்ககாரா ஒரு நல்ல வீர்ரும், வாலி குறிப்பிட்ட மாதிரி ஒரு கனவான் விளையாட்டு வீர்ர்.

மகேலவுக்கும், சங்ககாரவுக்கும் ஒரு சில பிரச்சினைகள் கிரிக்கட் சபை உடன் இருப்பது உண்மைதான். ஆனால் அரசியல் ரீதியான அழுத்தங்கள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அடுத்த வருடம் உலக கிண்ணத்துடன் (37 வயதில்) ஒரு நாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.