Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு

Featured Replies

 'சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு


இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Mahela--T20I-retirement-_zps8987baed.jpgஇலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார ஓய்வை அறிவித்துள்ள நிலையில் மஹேல ஜயவர்தனவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடருன் ஓய்வு பெறுவதாக அவரும் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி. யின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்திலேயே மஹேல ஜயவர்தனவின் ஓய்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் இருபது-20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஜேர்சியுடன் ஜோடியாக புகைப்படமொன்றையும் பதிவேற்றம் செய்துள்ளது.

அப்புகைப்பட்டத்தில் 'இது இறுதி இருபது-20 உலக கிண்ணம், எண்ணுவதற்கு ஆரம்பிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளதோடு இருவருடைய கையெழுத்துக்களும் காணப்படுகின்றன.

36 வயதான மஹேல ஜயவர்த்தன 49 இருபது-20  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1,335 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் ஒரு சதமும் 8 அரைச்சதமும் அடங்கும்.

இலங்கை அணியின் முக்கி இரு புள்ளிகளாக காணப்பட்ட குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இருபது-20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது இலங்கை இரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

http://www.virakesari.lk/?q=node/362204

  • தொடங்கியவர்

ஜெயவர்தனாவும் விடைபெறுகிறார்
மார்ச் 17, 2014.

 

மிர்புர்: சங்ககராவை தொடர்ந்து மகிளா ஜெயர்வதனாவும், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.

இலங்கை அணியின் சீனியர் வீரர் மகிளா ஜெயவர்தனா, 36. கடந்த 1997ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த இவர், இதுவரை 143 டெஸ்ட் (11,319 ரன்கள்), 412 ஒருநாள் (11,512), 49 சர்வதேச ‘டுவென்டி–20’ (1335) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், வங்கதேசத்தில் நடக்கும் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். சமீபத்தில் இலங்கையின் சங்ககரா, 36, சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 2006ல் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் அறிமுகமான மகிளா ஜெயவர்தனா, முன்னதாக நடந்த நான்கு ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரிலும் பங்கேற்றார். எனவே இது இவரது கடைசி உலக கோப்பை (டுவென்டி–20) தொடர். கடந்த 2012ல் நடந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட இவர், இலங்கை அணியை பைனலுக்கு அழைத்து சென்றார்.

இதுகுறித்து ‘டுவிட்டரில்’ ஐ.சி.சி., சார்பில்

வெளியிட்ட செய்தியில், ‘இலங்கையின் மகிளா ஜெயவர்தனா, சகவீரர் சங்ககராவை போல, உலக கோப்பை (டுவென்டி–20) தொடருக்கு பின், சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்,’’ என தெரிவிக்கப்பட்டது.

இலங்கை வீரர் திரிமான்னே கூறுகையில், ‘‘ஓய்வை அறிவித்துள்ள சங்ககரா, மகிளா ஜெயவர்தனா சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இவர்களது இடத்தை பூர்த்தி செய்வது கடினம்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/03/1395070368/MahelaJayawardeneretirementTwenty20.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஓய்வு கடிதத்தை கையளித்தார் ஜயவர்தன

Submitted by ceditor on Thu, 04/10/2014 - 10:43
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.



கிரிக்கெட் சபையின்  நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லே டி சில்வா மஹேல ஜயவர்தனவிடம் இருந்து கடிதத்தை பெற்றுகொண்டார்.


மஹேல, சங்­கா அதி­ருப்தி

இலங்கை கிரிக்கெட் சபை­யினால் தங்கள் மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த ஊடகத் தடை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்­க­ளான மஹேல ஜெய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் அதி­ருப்தி தெரி­வித்­திருந்தனர்.

5 ஆவது இருபது–20 உல­கக்­கிண்­ணத்­துடன் இலங்கை அணி­யினர் நேற்று முன்­தினம் தாய் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இரு­வரும் தங்கள் மீதான ஊட­கத்­தடை குறித்து அதி­ருப்தி தெரி­வித்­தனர்.

இது தொடர்பா மஹேல ஜயவர்தன தெரிவித்திருக்கையில், சங்­கா­வுக்கும் எனக்கும் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துக்­களை தெரி­விக்க கிரிக்கெட் சபை­யினால் கட்­டுப்­பாடு விதிக்­கப்பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நாங்கள் உல­கக்­கிண்ண தொட­ருக்­காக பங்­க­ளாதேஷ் சென்­றி­ருந்த போது அங்கு இது உங்­களின் இறுதி இரு­பது–-20 உல­கக்­கிண்ண தொடரா  என கேட்­கப்­பட்­டது.

இதன்­போது எனது வயதை கருத்தில் கொண்ட நான் அடுத்த  உல­கக்­கிண்­ண த்தில் விளை­யாட முடி­யாது என்­பதால் ஆம் என்று பதி­ல­ளித்­தேன்.

ஆனால் இதை சரி­யாக புரிந்து கொள்­ளாத இலங்கை கிரிக்கெட் சபையின் செய­லாளர், எங்­க­ளிடம் இது குறித்து கருத்து எத­னையும் கேட்­காது ஊட­கங்கள் சில­வற்­றுக்கு எங்­க­ளைப்­பற்றி தவ­றான தக­வல்­களை கூறி­யுள்ளார்.  பொறுப்பு மிக்க அதி­காரி ஒருவர் இவ்­வாறு நடந்து கொண்­டமை எங்­க­ளுக்கு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது. தொட­ருக்கு முன்­ன­தா­கவே நாம் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்தோம்.

அதே­வேளை தேர்­வுக்­குழுத் தலைவர் சனத் ஜெய­சூ­ரிய எங்­களை அணுகி அக்­கு­ழப்­ப­நிலை குறித்து தெளி­வ­டைந்து கொண் டார்.

இதே­வேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த குமார் சங்கக்­கார,  மஹே­லவின் கருத்­துக்கு நானும் உடன் படு­கிறேன் எனவும் பத்­தி­ரிகை ஒன்று   கேட்ட கேள்­விக்கு இது எனது இறுதி உல­கக்­கிண்ணம் என்று மாத்திரமே பதில் அளித்திருந்தேன் என்றும் கூறினார். இதற்கு அப்பால் எந்தக் கருத்­தையும் தெரி­விக்­க­வில்லை. ஆனால் ஊட­கங்கள் சில தவ­றான விமர்­ச­னங்­களை தெரி­வித்­தி­ருந்­தமை மிகுந்த கவ­லை­ய­ளிக்­கி­றது.

கிரிக்கெட் சபை மறுப்பு

இலங்கை கிரிக்கெட் சபை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட  வீரர் மஹேல ஜெய­வர்­தன வெளி­யிட்ட கருத்து தவ­றா­னது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.

மஹேல ஜெய­வர்­தன,  இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்­பாடு தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்டார்.
மேலும், தனக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்து ஊடகத் தடை தொடர்பில்  கவலை தெரி­வித்­த மஹேல, ஓய்வு குறித்த செய்தி விட­யத்தை கிரிக்கெட் சபை சரி­யான முறையில் கையா­ள­வில்லை எனவும் பொறுப்­புள்ள அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் குறித்தும்  வ­ருத்தம் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே  மஹேல ஜெய­வர்­தன வெளி­யிட்ட கருத்து தவ­றா­னது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று  அறி­வித்­தது.

இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் அதி­கா­ரி­களின் நற்பெயர்­க­ளுக்கு இழுக்கு ஏற்­ப­டுத்தும் வகையில் மஹேல வெளி­யிட்­டுள்ள கருத்­துக்கள் அமைந்திருக்­கி­ன்றன.

உலக இரு­பது–-20  கிண்ண தொடரின் போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்க இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்­த­தாக மஹேல நேற்­றைய (நேற்று முன்தினம்) ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் தெரி­வித்தார்.
எனினும், கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறு­வது போன்ற முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்கும் போது முதலில் கிரிக்கெட் நிறு­வ­னத்­திற்கு அறி­வித்­தி­ருக்க வேண்டும் .

ஆனால், மஹேல ஜெய­வர்­த­னவும் குமார் சங்­கக்­கா­ரவும் தங்களது ஓய்வு அறிவிப்பை முதலில் ஊடகங்களுக்கே விடு த்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை  குறிப்பிட்டிருந்தது.



ஓய்வு கடிதம்

இந்நிலையில்  மஹேல ஜயவர்தன  தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2014/04/10/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.