Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் விசாரிக்க வேண்டும் என்று மகனைப் பிடித்துச் சென்றனர்! - ஆணைக்குழு முன் தாய் சாட்சியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் விசாரிக்க வேண்டும் என்று மகனைப் பிடித்துச் சென்றனர்! - ஆணைக்குழு முன் தாய் சாட்சியம். photo.png 

[sunday, 2014-03-23 10:17:28]
batti-commission-230314-150.JPG

பிள்ளையானிடம் விளக்கம் இருப்பதாக கூறி, வெள்ளைவானில் வந்தோர் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தன்னை தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றதாக தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியளித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைகளின் இறுதி நாள் விசாரணைகள் நேற்று மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம, ஆணையாளர்களான திருமதி மனோ ராமநாதன், திருமதி சுரஞ்சனா வித்தியரத்ன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன், சட்ட அதிகாரிகளான சமிந்த அத்கோரல, துசித் முதலிகே ஆகியோரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.

  

அதே நேரம் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது பெருமளவானோர் தங்களது பதிவுகளை மேற்கொண்டனர். நேற்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து ஏற்கனவே பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளில் 52 முறைப்படுகளே விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த விசாரணையில் இரகசிய சாட்சியமளிக்க வேண்டும் என ஒரு வயோதிபப் பெண் கேட்டுக் கொண்டார். அதன்பிடி இறுதியில் அவரது சாட்சியத்தினைப் பதிவு செய்து செய்வதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

அதேவேளை, மட்டக்களப்பினை சேர்ந்த சசிகலா சுப்ரமணியம் சாட்சியமளிக்கையில், தனது மகன் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய வேளையில் 1990-06-23ஆம் திகதி காணாமல்போனார். பல்கலைக்கழக விடுதியில் இருந்தபோதே அவர் காணாமல்போனார். அவர் காணாமல்போகும்போது 26 வயது எனவும் தனது மகனை மீட்டுத்தருமாறு பலரிடமும் முறையிட்டதாகவும் 1995 ஆம் ஆண்டு இக்பால் ஆணைக்குழுவிடமும் தனது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துரைத்த காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம,தமக்கு வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பிலேயே விசாரணை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அப்பகுதிக்கு உட்பட்ட பகுதிலேயே விசாரணை செய்யமுடியும் என தெரிவித்ததுடன் இது தொடர்பில் எழுத்துமூலமான முறைப்பாட்டினை பதிவு செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை தனது மகன் சின்ன ஊறணியில் உள்ள வீட்டில் இருந்தபோது வெள்ளைவானில் வந்தவர்கள் தனது மகனை ஆயுதமுனையில் கடத்திச் சென்றதாகவும் தனது மகனை விடும்படி கெஞ்சியபோது தனது நெஞ்சில் ஆயுதத்தினை வைத்து தள்ளிவிட்டு கடத்திச் சென்றதாகவும் தாயார் ஒருவர் முறையிட்டார்.24-07-2009 அன்று சின்ன ஊறணியில் உள்ள செல்வரெட்னம் இராஜேந்திரன் என்பவரே கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவரது தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்படுவதற்கு முதல்நாள் அவரின் மனைவியின் வீட்டுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் தனது மகன் தொடர்பில் விசாரணை நடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். கடத்தப்பட்ட தினம் தனது மகனின் வீட்டுக்கு 58-6974 என்ற இலக்கத்தினையுடைய வெள்ளைவானில் வந்தோர் மனைவியிடம் மகன் தொடர்பில் விசாரித்துள்ளனர். அவர் தனது கணவன் வெளியில் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் அதனை நம்பாத அவர்கள் மகனின் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளியுள்ள எனது வீட்டுக்கு வந்து அங்கிருந்த மகனை வலுக்கட்டாயமாக பிடித்துச் செல்லமுற்பட்டனர்.

இதன்போது நான் அவர்களிடம் எனது மகன் எதுவித அமைப்புகளுடனும் தொடர்புபடாதவன் ஏன் அவனை பிடித்துச் செல்கிறீர்கள் என கேட்டேன். அவர்கள் இவரை பிள்ளையான் விசாரணை செய்ய வேண்டும். விசாரணை முடிய விடுவோம் என கூறினர்.எனினும் நான் மகனை கொண்டு செல்வதை தடுப்பதற்கு முயற்சி செய்தேன். அவர்கள் எனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தடுத்தால் சுடுவோம் என்று கூறி என்னை தள்ளிட்டு மகனை கடத்திச்சென்றனர்.மறுதினம் எங்களது வீட்டுக்கு மகனை கொண்டுவந்து ஆயுதம் இருப்பதாக தேடினர். எனினும் எதுவித ஆயுதமும் இல்லாத நிலையில் மகனை மீண்டும் கூட்டிச்சென்றனர்.

எனினும் அன்று கூட்டிச்சென்றவர் தொடர்பில் இன்றுவரை எதுவித தகவலும் இல்லை.இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளேன் என்று தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

 

batti-commission1-230314-600.JPG

 

 

batti-commission2-230314-600.JPG

 

 

batti-commission3-230314-600.JPG

 

 

batti-commission4-230314-600.JPG

 

http://www.seithy.com/breifNews.php?newsID=106285&category=TamilNews&language=tamil

"ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம,தமக்கு வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பிலேயே விசாரணை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்"

கண்ட கண்ட சிங்கள கருவிகளிடம் கெஞ்ச வேண்டி உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

"ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம,தமக்கு வடக்கு கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பிலேயே விசாரணை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும்"

கண்ட கண்ட சிங்கள கருவிகளிடம் கெஞ்ச வேண்டி உள்ளது.

 

சரியாகச் சொன்னீர்கள், விவசாயி விக்.

இதற்குக் கூட... சிங்களவனை நியமித்தால், நியாயமான தீர்ப்பை எப்படி எதிர்பார்ப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.