Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தேர்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விரு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ffffffffffffffffff.jpg
 
இரண்டு மாகாணங்களிலும் ஆறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் 2441 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1353 வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.
 
மேல் மாகாணத்தில் 102 பிரதிநிதிகளை தெரிவு செய்ய அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 2743 வேட்பாளர்களும் தென் மாகாணத்தில் 53 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1051 பேரும் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
இரண்டு மாகாண சபைகளிலும் 58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 
 
அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் 40 இலட்சத்து 24 ஆயிரத்து 623 பேரும் தென் மாகாணத்தில் 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் இன்று நண்பகல் 12 மணி வரை 35 வீத வாக்களிப்பு இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள்
இயக்கத்தின்(கபே அமைப்பு) பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9e9932ec4275730facd0b6b08aca07bf.jpg

இது வரை நடைபெற்று வாக்களிப்பு வீதங்களின் படி  கொழும்பு மாவட்டத்தில் 18 %, கம்பகா  20%, களுத்துறை 18%, காலி மாவட்டத்தில் 20%, மாத்தறை 21%, அம்பாந்தோட்டையில் 25 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.

இரண்டு மாகாண சபைகளுக்கும் 155 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4253 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கொழும்பு,  கம்பஹா,  களுத்துறை  மாவட்டங்களில் இருந்து 40 இலட்சத்து, 24 ஆயிரத்து 424 வாக்காளார்களும் தென் மாகாண சபைக்கான தேர்தலில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 18 இலட்சத்து 73 ஆயிரத்து 804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 81 அரசியற்கட்சிகளும், 42 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் 3794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து 247 வேட்பாளர்களும், கம்பஹாவில் 946 பேரும், களுத்துறையில் 550 பேரும் இம்முறைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

காலி மாவட்டத்தில் 450 வேட்பாளர்களும், மாத்தறையில் 380 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 221 பேரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் கொழும்பு மாவட்டத்திற்கு 40 பேரும், கம்பஹா மாவட்டத்திற்கு 40 பேரும், களுத்துறை மாவட்டத்திற்கு 22 பேருமாக மேல் மாகாண சபைக்கு  102 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 22 பேரும், மாத்தறையில் 17 பேரும், ஹம்பாந்தோட்டையில் 14 பேருமாக தென் மாகாண சபைக்கு  53 உறுப்பினர்கள் இன்றைய தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இதுதவிர வாக்களித்த பின்னர் உடனடியாக வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள வளாகத்திலிருந்து வெளியேறி தேர்தலை அமைதியான முறையில் நடத்திமுடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல்கள் செயலகம் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதேவேளை, தேர்தல் முடிவுகள் தொகுதிவாரியாகவும், மாவட்ட ரீதியாகவும், வெளியிடப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியிடப்பட்டதன் பின்னரே, விருப்பு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தபால்மூல வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்றிரவு 10 மணியளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட மேலதிக தேர்தல்கள் ஆணையாளர், முதலாவது உத்தியோகபூர்வ முடிவை இன்று நள்ளிரவு 12 மணியளவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=122552797829101235

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MR(1)(1).jpg

தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் சனிக்கிழமை (29) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. தேர்தலில் வாக்களிப்பதற்காக செல்வோரை படங்களில் காணலாம். (படங்கள்:- வருண வன்னியாராச்சி, ஜெயந்த கடகொட, அனுரகுமார திஸாநாயக்க )

1(4175).jpg

4(1702).jpg

1(4172).jpg

3(2088).jpg

_DSC0066.jpg

_DSC0076.jpg

மாத்தறை

DSC_0041.jpg

DSC_0069(2).jpg

ஹம்பாந்தோட்டை- இர்பான்

DSC00110(1).JPG

DSC00132.JPG

DSC00136.JPG

கம்பஹா- பௌஷான்

IMG_1226.JPG

IMG_1228(1).JPG

IMG_1227.JPG

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

main-1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் ஒரு வரலாற்றை  தமிழர் எழுதணும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ele_CI.jpg

நடைபெற்று முடிந்த தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில் 55 முதல் 60 வரையிலானவர்கள் வாக்களித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் மிகவும் குறைந்தளவான வாக்காளர்களே வாக்களிப்பில் பங்கேற்றதாக பெபரல் அமைப்பு தெரிவித்துள்ளது,

சுமார் 49 வீதமானவர்களே வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவானவர்கள் வாக்களித்துள்ளனர்.

61 வீதமானவர்கள் ஹம்பாந்தோட்டையில் வாக்களித்துள்ளனர்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத்தமாக மூன்று மாவட்டங்களிலும் 54 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
western--provincial-upfa.jpg
ஐக்கிய தேசியக்கட்சி 28 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
 
ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஜே.வி.பி. 6 ஆசனங்களையம், ஜனநாயக மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
 
கம்பஹா மாவட்டத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 582,668 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சி 249,220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 10 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜனநாயகக் கட்சி 88,557 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜே.வி.பி. 56,405 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
களுத்துறை மாவட்டத்தில்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 337,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சி 144,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 06 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜனநாயகக் கட்சி 43,685 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜே.வி.பி. 25,366 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
கொழும்பு மாவட்டத்தில்
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 443083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 18 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சி 285538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜே.வி.பி. 74,437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜனநாயகக் கட்சி 71,525 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஜனநாயகக் மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப்; பெற்றுக்கொண்டுள்ளது.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.