Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்தோரை இராணுவம் கொண்டுசென்றதைக் கண்டேன்; நேரில் பார்த்த சாட்சி நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

arm.jpg

 "இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள், மருமகள், பேரப்பிள்ளைகள் பஸ் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்களை இராணுவத்தினர் கொண்டு சென்றதை நான் நேரடியாகக் கண்டேன்'' இவ்வாறு முல்லைத் தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தாய் ஒருவர். 

 
நேற்று நடை பெற்ற காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
 
இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, அதன் பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 வழக்குகள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 
 
விடுதலைப் புலிகள் அமைப்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பதவி வகித்த எழிலன் உள்ளிட்ட மூத்த தளபதிகள் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் ஆகியோர் காணாமற் போனமை தொடர்பிலும் அவர்களது உறவினர்களால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றன. அதன்பின்னர் சம்பவம் நடை பெற்ற இடம் முல்லைதீவு என்பதால், வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
 
முல்லைத்தீவு மாஜிஸ்ரேற் நீதிவான் நீதிமன்றத்தில்  இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. அப்போது ஒரு சாட்சி வாக்குமூலம் அளித்தார்.
"எனது மகள், மருமகன், இரண்டு பேரப்பிள்ளைகள் இராணுவத்தினரிடம் சரண டைந்தனர். அவர்களை அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பே கூட்டிச் சென்றார். எனது உறவுகளுடன், வேறு பலரும் இராணுவத்தினரால் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு செல்லப்படுவதை நான் நேரடியாகக் கண்டேன்'' என்று தெரிவித்த சாட்சி, இறுதிப் போரின் போது எவ்வாறு தாம் ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து சென்றனர் என்பதையும் விளக்கியதுடன், இறுதிப் போரின்போது சுமார் 5 இலட்சம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
 
அதன் பின்னர் சாட்சியிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டார் அரசதரப்பு சட்டத்தரணி சிஹான் டீ சில்வா, 2009 ஆம் ஆண்டு காணாமற்போதல் இடம்பெற்றுள்ள போதும் 2012 ஆம் ஆண்டுதான் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதே? என்று கேள்வியயழுப்பியதுடன், காணமற்போயுள்ளார் என்றுதான் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, சரணடைந்து காணமற்போயுள்ளார் என்று அதில் கூறப்படவில்லை என்று வாதிட்டதுடன், இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
  
மனுதாரர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் மற்றும் அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். அரச சட்டத்தரணியின் வாதத்துக்குப் பதில் வாதம் செய்யப்பட்டபோது, "போர் முடிந்தவுடன் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சுதந்திரமாக விடப்படவில்லை. 
 
ஆள்கொணர்வு மனு இரத்த உரித்துக்கள் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே உடனடியாக மனுத்தாக்கல் செய்வதற்கான சுழ்நிலை காணப்படவில்லை. பொலிஸ் நிலையத்தில் சிங்களத்தில் எழுதிய முறைப்பாட்டுக்கு கையயழுத்திட்டமையால் அதில் என்ன எழுதியிருந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே மாதம் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=814212820003635786

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ, இப்படி நிதிமன்றங்களிலே காலத்தை இழு இழு என்று இழுத்து போடுட்டு...,சாட்சிகள், முன்னுக்கு பின்னுக்கு முரணாக பேசுவதால் , அரசு குற்றமற்றது என்று தீர்ப்பு எழுதி போடுவார்கள்;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.