Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை விழுந்தது: மீட்பு பணி தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

porvel%20kuli%20boklin%20%20vilupuram.jp

தியாகதுருகம் அருகே உள்ள பள்ளகசேரியை சேர்ந்த ராமச்சந்திரன்- அஞ்சலை ஆகியோரின் 3 வயது மகள் மதுமிதா. இன்று காலை 9 மணிக்கு ராமச்சந்திரன் தனது மகள் மதுமிதாவுடன் பழனி என்பவரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, தோட்டத்தில் மதுமிதா விளையாட சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

மூடப்படாத ஆழ்துளை கிணறு

இந்நிலையில், தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த மதுமிதா, மூடப்படாத நிலையில் இருந்த 500 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தாள். மகளின் அலறல் சத்தம் கேட்டு ராமச்சந்திரன் ஓடிவந்துள்ளார். மகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்படுகிறது

தீயணைப்பு வீரர்கள் 5 வண்டிகளில் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 3 பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதுவரை 30 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது 30 அடி பள்ளத்தின் பக்கவாட்டில் துளை போடும் பணி  நடைபெற்று வருகிறது.

2 சிலிண்டர்களில் ஆக்சிஜன் செலுத்தம்

குழந்தைக்கு மூச்சி திணறல் ஏற்படாமல் இருக்க 2 சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

25 அடியில் குழந்தை இருப்பதாகவும், குழந்தையின் அசைவு தெரிவதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் குழந்தையை மீட்டுவிடுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ரோபோட்டிக் மூலம் மீட்பு நடவடிக்கை

திருச்சி மற்றும் மதுரையில் வந்துள்ள மீட்புக்குழுவினர் ரோபோட்டிக் இயந்திரம் மூலம் குழந்தையை மீட்டுவிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
  

http://news.vikatan.com/article.php?module=news&aid=26534

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆழ்துணைக் கிணறுகள் பற்றிய விழிப்புணர்வு, தமிழகத்தில் குறைவாக உள்ளது போலுள்ளது.
மாதத்திற்கு ஒரு விபத்தாவது... ஆழ்துணைக்கிணறு மூலம் நிகழ்கின்றது.
தோண்டிய ஆழ்துணைக் கிணறுகளை மூட, ஒரு கொங்கிரீட் தட்டு போட்டு, பாதுகாக்க முடியாத நிறுவனங்களை, நீதிமன்ற‌த்தில் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இவர்களின் கவலையீனத்தால்... மூன்று வயது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வருவது, எந்த விதத்தில் நியாயம்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சோகத்தில் முடிந்த 18 மணி நேர உயிர்ப் போராட்டம்... போர்வெல்லில் விழுந்த 3 வயது சிறுமி பலி.

 

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை தீயணைப்புப் படையினரால் மீட்கப்பட்ட போதும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே தியாகதுருகம் பள்ளகசேரியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனது தோட்டத்தில் 500 அடி ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார். அக்கிணறு சாக்குத் துணியால் மூடப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் நேற்று காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் 3வயது மகள் மதுமிதா எதிர்பாராதவிதமாக அந்த ஆழ்துளை கினற்றில் தவறி விழுந்தாள். இதனால் பதறிப் போன ராமச்சந்திரன் குடும்பத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விரைந்து சென்றனர்.

 

குழந்தை விழுந்த கிணறு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 500 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 25 அடி ஆழத்தில்தான் குழந்தை சிக்கியிருப்பதால் உயிருடன் மீட்டுவிடலாம் என்று தீயணைப்புத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

நவீன கருவிகளுடன் தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி, கிட்டத்தட்ட 18 மணி நேரங்களுக்கு பிறகு இன்று காலை 3 மணியளவில் சிறுமியை மீட்டனர். உடனடியாக சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மதுமிதா. ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மதுமிதா உயிரிழந்தாள்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். பாதுகாப்பற்ற விதத்தில் இவ்வாறு வைத்திருப்பவர்களைத் தூக்கில் போட வேண்டும். அநியாயமாக பல குழந்தைகள் இதில் விழுந்து இறந்துள்ளனர். அதை மூடி வைப்பது என்பது சின்ன வேலை. அதைச் செய்வதில் இந்த மூடர்களுக்கு என்ன குறைந்து போய்விட்டது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.