Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் என்ன?

Featured Replies

கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் என்ன?

பொலிஸ் மா அதிபர் தலைமையில் குழு இயங்குகின்றதா?

என சபையில் ஜோன் அமரதுங்க கேள்வி.

பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளைப்பெறும் ஜனாதிபதி, இந்தியாவிடம் உதவிகளைக் கோருவது எந்தளவு தூரம் சாத்தியமானது என ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.நாட்டில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, கடத்தப்பட்டமை குறித்து அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதன் மர்மம் குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவே கடத்தல்களை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.அவசர காலத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவõதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் வர்த்தகர்கள் நாட்டில் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். முக்கியமாக கொழும்பில் செல்வந்த வர்த்தகர்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். இதன் மர்மம் என்ன? பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான குழுவொன்றே இந்தக் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறப்படுகின்றது. உண்மைத் தன்மை என்ன?கடத்தப்பட்டவர்கள் எங்கே? ஏன் கடத்தப்படுகின்றனர்? பொது மக்கள் பரவலாக கடத்தப்பட்ட ஒரு யுகம் இந்நாட்டில் இருந்தது. தற்போது அந்த யுகம் மீண்டும் வந்துள்ளது. ஊடகவியலாளர்கள் ஏன் கடத்தப்படுகின்றனர்?ஊடகவியலாளர்கள் ஏன் கடத்தப்பட வேண்டும்? நாட்டின் அரசியலமைப்பின் மூலம் தனி மனித பாதுகாப்பும் கருத்து சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். ஊடகவியலாளர்களான நடேசன் (வீரகேசரி), சிவராம், சுகிர்தராஜன், சம்பத் லக்மால் ஆகியோர் கொல்லப்பட்டனர். சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டு அதிர்ஷ்டவசமாக விடுதலை செய்யப்பட்டார். யார் இந்தக் கடத்தல்களை செய்கின்றனர்? என்பதனை அரசாங்கம் கண்டறிய வேண்டும். பொறுப்புக் கூற வேண்டும்..

வெள்ளை வான்வெள்ளை வானில் வருவோரே கடத்தல்களை செய்கின்றனர். இராணுவமே கடத்தல்களை செய்வதாகவும் இல்லை. தமிழ் ஆயுதக் குழுக்களே செய்வதாகவும் கூறப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன? இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஏன் தமிழ் வர்த்தகர்களைக் கடத்த வேண்டும்? இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். சில வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன?கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் கடத்தப்பட்டுள்ள தமிழ் வர்த்தகர்களை விடுவிக்க நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.இதேவேளை அண்மையில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரின் கொலை தொடர்பாக அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. கண்காணிப்புக் குழுவின் அறிக்கை அரசாங்கத்தை தலை குனிய வைத்துள்ளது..

ஈராக் போன்று மாறியுள்ளதுஅரசாங்கம் அரசு சார்பற்ற நிறுவனங்களை முடக்கப் பார்க்கின்றது. இது நியாயமற்ற விடயமாகும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களே மனிதாபிமான உதவிகளை செய்தன! நாம் இதனை மறந்து விடக்கூடாது.இந்நாடு இன்று ஈராக் போன்று ஆகியுள்ளது. லெபனானில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை கரித்தாஸ் நிறுவனமே பாதுகாத்தது. ஆனால் எமது நாட்டில் தொண்டர் நிறுவனங்களின் செயற்பாடுகள், நிதி நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன.தமிழகம் செல்லும் அகதிகள் இதேவேளை தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இது ஆரோக்கியமான விடயமல்ல. எமது ஆட்சிக் காலத்தில் தமிழகம் சென்ற அகதிகள் மீண்டும் நாடு திரும்பினர். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பலை உயர்கின்றது. புதுடில்லிக்கு அழுத்தம் செல்கின்றது..

கருணாநிதியை பயன்படுத்த வேண்டும்தமிழக முதலமைச்சருக்கு நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. எனவே எமது நாட்டின் சமாதான செயற்பாடுகளின் தரகராக தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியை பயன்படுத்த அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கருணாநிதியை அன்று பிரபாகரனை சந்திக்குமாறு கேட்டிருந்தார். தமிழக மக்களுக்கும் இலங்கைத்தமிழ் மக்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது. இதனை நாம் உணர வேண்டும். இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இன்று இலங்கை விவகாரம் பிரதான இடத்தை வகிக்கின்றது..

இந்திய உதவி கிடைக்குமா?ஆனால் எமது நாட்டில் நிலைமை வேறு. பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளை பெற்றுக் கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டால் கிடைக்குமா? இன்று தெற்காசியா முழுவதும் கேட்கப்படுகின்ற கேள்வி இதுவாகும். இலங்கை அரசு பாகிஸ்தானிடம் இராணுவ உதவிகளை பெற்றால் இந்தியா எமக்கு உதவுமா? அரசாங்கம் இது தொடர்பாக சிந்திக்க வேண்டும். உரிமை மீறல்கொழும்பில் மக்களை பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் அதிகமான விபரங்களை கோருகின்றது. இது மோசமான உரிமை மீறலாகும். எளிமையான விண்ணப்பப் படிவத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கிறேன். அவசரகால சட்டத்திற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம். வட கிழக்கில் வெற்றிகளைப் பெறும் முப்படையினருக்கும் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம். எதிர்காலத்திலும் வெற்றிகளை பெற வாழ்த்துகின்றோம்..

பாதுகாப்பு பேச்சாளரின் (கெஹலிய) கூற்றுக்கள் பரஸ்பரம் விரோதமாக உள்ளது. இது புலிகளுக்கு நன்மையாக உள்ளது. இது ஜனாதிபதி புரிந்து கொண்டார் போலும். இதனால் தான் பாதுகாப்பு பேச்சாளரின் சத்தம் குறைந்துள்ளது. சம்பூர் கைப்பற்றப்பட்டு விட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று கேட்கிறோம். சமாதான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுமா? அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்குமானால் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். ஐ. தே. க. நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும். யுத்தம் மூலம் தோற்கடிக்கப்படவில்லைஉலகில் எங்குமே பயங்கரவாதம் யுத்தம் மூலம் தோற்கடிக்கப்படவில்லை. போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன..

- வீரகேசரி நாளேடு

இந்த கொலைகளுக்கான செயலை மிகச்சாதாரணமாக சொன்னால் தமிழரை வறுமைப்படுத்துவதே நோக்கம்...!

இஸ்ரேல்காறனின் இனச்சுத்திகரிப்பு பாணியில் ஒண்றாக இது இருக்கிறது... கொலைகள் நடப்பதுக்கு காரணம் எதுவும் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் அவர் ஒரு படித்த அறிவாளி, வியாபாரத்தில் முன்னேறிவரும் ஒருவர் என்கிண்ற ஒரு தகுதி போது அவர் கொல்லப்படுவதுக்கு...!

இப்படியான நடவடிக்கையால் காலப்போக்கில் இலங்கையில் தமிழர் எல்லாரும் சேவகம் செய்யும் நிலைக்கு தள்ளிவிடுவதுதான் நோக்கம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.