Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை மூதூர் அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்

Featured Replies

 
DSC00652(1).JPG

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமான பணிகள் அப்பகுதியில் இருக்கும் புத்த பிக்குவின் தலைமையில் வந்த குழுவினரின் தலையீட்டினையடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சனிக்கிழமை(19) கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், முற்றும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் சென்று நிலைமையினை பார்வையிட்டனர்.

தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

DSC00659(1).JPG

DSC00674.JPG

DSC00685.JPG

DSC00704.JPGDSC00709.JPG

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/107390-2014-04-19-11-43-48.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மீகப் பலமல்ல! ஆயுதபலமே மனித வாழ்வைத் தீர்மானிக்கிறது!!.

  • தொடங்கியவர்

பிக்குகள் எதிர்ப்பு: இந்து ஆலய புனரமைப்புப் பணிகள் நிறுத்தம்

 

திருகோணமலை மாவட்டத்தில் இந்து ஆலயமொன்றின் புனரமைப்புக்கு அரசாங்க அதிபரால் அனுமதியளிக்கப்பட்டுள்ள போதிலும் கடும் போக்குடைய பௌத்த பிக்குகளினால் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

140420153233_trinco_temple_512x288_bbc_n

ஆலயப் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டலும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

 


அகத்தியர் வழிபாட்டு மையம் எனப்படும் இந்த ஆலயத்தில் அகத்திய முனிவர் சிவலிங்கம் வைத்து வழிபாடு செய்ததாக இந்துக்கள் நம்புகின்றனர்.மூதூர் பிரதேசத்திலுள்ள கங்குவேலி அகத்தியர் வழிபாட்டு தலத்தின் புனரமைப்பு பணிகளுக்கு பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த தடை காரணமாக ஆலய புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உடமைகளுக்கு காவல் துறையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

போர் மற்றும் இன வன்முறைகளையடுத்து கடந்த காலங்களில் இந்த ஆலயம் கைவிடப்பட்டு வழிபாடுகளும் தடைப்பட்டிருந்தன.

போருக்கு பின்னர் ஆலய நிர்வாகம் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் தயாரான போது அண்மித்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகள் தடைபட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

அரசாங்கம் அனுமதி

140420153644_trinco_temple_puja_224x280_

அரச அனுமதியுடன் பணிகள் தொடங்கின

 

சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ஆர். டி. சில்வா நேரில் சென்று அந்த இடத்தை பார்வையிட்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்க ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கியிருந்தார்.

அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரிரு நாட்களால் அந்த பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் உட்பட சிலரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பணிகளை தாம் நிறுத்திக் கொண்டதாக ஆலய பரிபாலன சபை தலைவரான வேலுப்பிள்ளை தவராசா கூறுகின்றார்.

ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் பௌத்த மத வழிபாட்டு தடயங்களை கொண்ட தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட இடமென பௌத்த பிக்குகளினால் கூறப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளார்.

காணி அபகரிப்புடன் தொடர்புடைய நபர்களே ஆலய புனரமைப்புக்கும் தடைகளை ஏற்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அரசாங்க அதிமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இதை விவாதிப்பதற்கான முன்னறிவித்தலை எதிர்கட்சித் தலைவர் சி தண்டாயுதபாணி விடுத்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/04/140420_trincotempleissue.shtml

Edited by Athavan CH

இணைப்பிற்கு நன்றிகள் ஆதவன் .

பிக்குகளின் எதிர்ப்பின் காரணமாக மூலஸ்தானத்தையும் ,அதனுடன் சேர்ந்த மண்டபத்தையும் கொங்கிரீட் மூலம் கட்டுவதற்கு முடிவெடுத்து ,அதற்கு 25லட்சம் தேவைப்பட்டது .இதில் கணிசமான நிதியை சேர்த்தும் கொடுத்திருந்தோம் .இதை அரசியலாக்காமல் அடக்கமாக முன்னெடுப்பதால் முன்னைய பதிவுக்கும் கருத்திடவில்லை .வழக்கமாக கோவில்களுக்கு ஆதரவளிப்பதில்லை ,
இது நிலத்தோடு சம்பந்தபடியால் ஆதரவு கொடுக்கின்றோம் .

 

உதவி செய்ய விரும்புகின்றவர்களுக்கு நேரடித்தொடர்பை பரிபாலன சபைத் தலைவருடன் ஏற்படுத்தித் தரமுடியும்.

 

.http://www.yarl.com/forum3/index.php?showtopic=137616

Edited by Gari

  • 2 months later...

நிறுத்திவைக்கப்பட்ட கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன .

  • 3 months later...

http://AgasthiyarSthabanam_zps81d840ab.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம். செய்வார்களா புலத்து கோவில் காளைகள்?

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து காளைகள் கோவிலை கட்டி தமது வருமானத்தை என்றாலும் பார்கிறார்கள்.
சும்மா இருந்து சொறிவதை சோம்பேறிகள்தான் செய்வார்கள்.
பஞ்சாயத்து தலைவர்கள் தாம் ஒரு கோவிலை கட்டி வருமானம் சேர்த்து கொஞ்சத்தை அங்கே அனுப்பி காட்டினால்.
மக்கள் அவர் செய்கிறார் ஏன் நீங்கள் செய்யவில்லை? அப்படி என்று கேட்க உதவியாய் இருக்கும்.

நல்லது செய்யும் எண்ணம் மக்களுக்கு இருந்தால்? ஏன் கோவிலில் கொண்டுபோய் காசை போடுகிறார்கள்? அங்கே என்னா கடவுளா காசை கைநீட்டி வாங்குகிறார்?
கோவிலை நிர்வகிப்பவர் வயிறு வளர்க்கத்தான் என்பது யாவரும் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் கட்டும் அளவுக்கு மகிந்த எங்களுக்கு எலும்புத்துண்டு போடுவதில்லை. அளவுச்சாப்பாடுதான்.

கோவில்கள் எல்லாம் charity யாகவே பதியப்படுள்ளன. புலத்தில் கொடி பிடிக்க ஆள் அம்பு சேனையை திரட்டும் கூட்டம் அப்படியே போய் ஆளுக்கு ஒரு ஆயுள் சந்தா எடுத்தா அடுத்த வருடமே கோவிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

கொண்டுவந்தா -வயிறு வளக்காமல் ஊரை வளக்கலாம். ஆனா கொடி பிடிக்கும் கூட்டத்துக்கு இதில் ஏது அக்கறை.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிப்பவர்கள் ஜெனநாயகம் குறைந்த அளவிலாவது மதிக்கப்டும் நாட்டுகளில். கொடி பிடித்து தாம் தனித்துவமானவர்கள் எமக்கு நிலம் கொடி என்று எல்லாம் இருக்கிறது என்ற கருத்தை என்றாலும் வெளி உலகிற்கு சொல்லிவருகிறார்கள். வெளி உலகும் அதை தமிழர் கொடி என்று செய்திகளில் சொல்லிவருகிறது.

கொடி பிடிப்பவன் (கொடி பிடித்த குற்றத்திற்கு) .... கோவில் கட்டி காசு அனுப்ப வேண்டும்............. அவனே நாடில் போய் சண்டை செய்ய வேண்டும்....... குண்டு சுமந்து கரும்புலியாக வேண்டும்.
அவனது மனைவி பிள்ளைகளும் நிம்மதியாய் இருக்க கூடாது....
ஊரார் பிள்ளைகளை சண்டைக்கு சேர்கிறவர் தனது பிள்ளைகளை அனுப்பல்லமே? பஞ்சாயத்து மேதாவிகள் கேள்வி கேட்பார்கள்.

இத்தனையும் முள்ளி வாய்க்கால் வரை நடந்துள்ளது. குடுமபத்துடன் இறந்தும் போனார்கள்.

பஞ்சாயத்து தலைவர்கள்..... இன்னமும் பழைய பஞ்சாங்கத்துடனே வாழ்வை நடத்துகிறார்கள்.
தெரியாமல்தான் கேட்கிறேன்? அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்குதான் இரத்தமா??

நான் ரோட்டு ரோட்டாக கொடி பிடிப்பேன்..... புலிக்கொடி எனது தேசிய கொடி.
காசு அனுப்புவது அனுப்பாதது எனது இஸ்டம்.

அடுத்தவனுக்கு பஞ்சாயத்து வேலை பார்ப்பவர்கள் ஏதும் உருப்படியாக செய்துகொண்டு அடுத்தவனுக்கு பஞ்சாயத்து பண்ணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாயத்துக்காரர்கள் செய்வார்கள் சொல்லமாட்டார்கள். ஒண்டுக்கும் உதவாமல் கொடிபிடித்து திரியும் கூட்டம் - கொடிபிடிப்பதையே ஒரு சாதனையாக்கி பெருமை பேசும் ஆனால் ஓரணியில் திரண்டு கோவில்களை வசப்படுத்துவது போன்ற நல்ல வேலைகளை செய்யாது.

இதற்க்கு நல்ல உதாரணம் Gari மேலே செய்துள்ள நற்செயலும். இங்கே வக்கணையாக சசைபாடுபவர்களின் சோம்பேறித்தனமும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாமல் செய்வதற்கு கொடி பிடிப்பவர்கள் ஒண்டும் கள்ள காதல் செய்யவில்லை.
சரியானதை செய்பவன் ஒழித்து செய்ய தேவை இல்லை.
நாங்கள் பிடிப்பது புலிக்கொடி ...... கொஞ்சம் என்றாலும் புலிக்குணம் வந்துவிடுகிறது.
30 வருடமாக சொல்லிவிட்டு செய்து பழகி விட்டது.

நல்லவேலை செய்ய போனவர்கள் சுமந்துபோன பழிகளை கொடி பிடிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
இனி என்ன செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு  தெரியும்.

கூட தெரிந்தால்..... முதலில் போய் செய்யவும். இதைதான் எழுதுகிறேன்.
இல்லை இதை மட்டுமே எழுதுகிறேன்.

வெள்ளி சனி இரவுகளில் இப்போ நாங்களும் சொல்லாமல் செய்ய பழக தொடங்கிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்வதை சொல்லிக்காட்டுவது அதுவும் பலபேர் உயிர்தியாகம் செய்த ஒரு விடயத்துக்கு நாங்கள் கொடிபிடிப்பதை போன்ற ஒரு ஜுஜுபி விடயத்தை ஏதோ உலக சாதனை மாதிரி கதைப்பதை நான் ஒரு கீழதரமான இழிசெயலாகவே கருதுகிறேன், கருதுவேன்.

நீங்களும் இப்போ சனி ஞாயிறு நாளில் செய்வதை சொல்லுவதில்லை எண்டு சொல்கிறீர்கள். வெல்டன் கீப் டி அப்.

இந்த மேன்மையான குணத்தை வார நாட்களுக்கும் விஸ்தரிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதையாவது செய்பவன் .... செய்ய முயற்சிப்பவன் தான்

எது இழிவு? எது நெளிவு என்று?
முடிவு செய்ய முடியும். சும்மா இருந்து பஞ்சாயத்து பண்ணுகிறவர்களுக்கு....... அதை தொடர்வதுதான் நல்லம்.

எதை எப்போது எங்கே விஸ்தரிப்பது என்பது. உலக போக்கு சார்ந்தது.
உரிய நேரத்தில் பூமிக்கு வருவதும்.... இல்லமால் போவதும். கடவுளுக்கு உரியது.
அதை கடவுள்கள் செய்துவிட்டு போனார்.

கோஷான் அண்ணா, இந்த திரிக்குள் எதற்கு கொடி பிடிப்போரை இழுக்கிறீர்கள்?

Gari அண்ணா முன்பிலிருந்தே பலவற்றை செய்து வருபவர்.

நீங்கள் ஏதாவது கோயிலை கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறீர்களா? அது ஏன் கொடி பிடிப்பவர்கள் தான் செய்ய வேண்டும்? நீங்கள் செய்பவற்றை வெளியில் சொல்வதில்லை என்றால் நல்ல விஷயம். ஆனால் கொடிபிடிப்பவர்கள் மட்டும் சொல்லி விட்டு செய்ய வேண்டுமோ. சொல்லாதவர்கள் எதுவுமே செய்யாதவர்கள் என்று எப்படி எழுந்தமானமாக கூறுவீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

நல்ல வேலை செய்தீர்கள் Gary. இங்கே உள்ள கோயிகளில் பணம் மீதமாகி வழிகிறது - யாராவது ஒரு கோயில் தம் வருட வருமானத்தில் 5% குடுத்தால் கூட இந்த கோயிலை வடிவாக கட்டி எம் நிலவுரிமையை நிலைந்நாட்டலாம்.

இந்த கருத்து ஏற்புடையது. இதற்கு புலம்பெயர் தேசங்களிலுள்ள கோவில் நிர்வாகங்களுடன் தான் கதைக்க வேண்டும். அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்வார்களா இல்லையா என்று தெரியாது.

ஆனால் என்னதான் கோவிலை கட்டி முடித்தாலும் அதை அரசாங்கம் தரைமட்டமாக்கவோ புத்தரை அவ்விடத்தில் வைப்பதற்கோ கூட வாய்ப்புள்ளது. எனவே கோவிலை கட்டுவதால் நில உரிமை காக்கப்படும் என சொல்ல முடியாது. தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தாலே இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆனாலும் ஒரேதாக அழிய விடுவதை விட தற்காலிகமாக என்றாலும் தக்கவைக்க இந்த முயற்சி உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

நான் கோயிலை கட்ட உதவவில்லை துளசி ஏனெண்டால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

நான் ஒரு தனிமனிதன். இங்கே கொடிபிடிபவர் பலருடன் சேர எனக்குப் பிரியமில்லை. 2009ர்க்கு முன்பு போராட்டங்களுக்கு போனாலும் என் இனத்துக்காக என்னால் இயலுமானது என்றே செய்தேன். ஒரு போதும் கொடி பிடித்ததில்லை. ஏனெனில் அந்த இயக்கத்தின் தலைமை பற்றிய என் மதிப்பீடு அப்படி.

ஆனால் கொடிபிடிக்கும் கூட்டம் அப்படியில்லை. ஒரு அமைப்பாக ஒரு கொள்கையின் கீழ் உங்களால் ஒண்டு சேர முடிகிறது. மக்களையும் மூலைச்சலவை செய்ய, தியாகத்தை பயன்படுத்தி மக்களை உசுப்பேத்த இந்த கூட்டத்தால் முடியும்.

அதை பயன்படுத்தி கொடிபிடித்து நேரத்தை பாழாக்காமல் நல்ல விடயத்தை செய்யலாம் என்பதே என் கருத்து.

எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. கொடி பிடிப்பவர்கள் பலரும் கூட இதே போன்ற மனநிலையில் இருக்கலாம். எனவே எதற்கு அவர்கள் மட்டும் இவ்வாறு செய்ய வேண்டும்?

கொடி பிடிப்பவர்களும் தனிமனிதர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமே ஒன்று சேர்கிறார்கள். தனிப்பட்ட முறையில் பலர் மக்களுக்கு உதவியும் செய்கிறார்கள்.

கொடி பிடிப்பவர்கள் கொஞ்ச பேரிட்டை காசு சேர்த்து அதை முறையாக கையாண்டு கொண்டு தனது சொந்த உழைப்பில் கார் வாங்கினாலே சேர்த்த காசை சுருட்டி கார் வாங்கி விட்டார்கள் என்று கூறுவதற்கும் ஆட்கள் வருவார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் இப்படியான முயற்சிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது.

கொடி பிடிப்பதிலும் நோக்கம் உள்ளது. தமிழீழம் பற்றி ஏனைய இனத்தவர் புரிந்து கொள்ளவும் தமிழர்களின் கொடி புலிக்கொடி என்பதை சர்வதேசமயப்படுத்தவும் புலிகள் மக்களுக்காகவே போராடியவர்கள் என்பதை அனைத்தும் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டிருக்கும் சர்வதேசத்தின் முன் எம் மக்களின் விருப்பை ஆதாரபூர்வமாக தெரிவிக்கவும் எம்மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பதை எடுத்துரைப்பதற்கும் பயன்படுகிறது.

புலம்பெயர் போராட்டங்களின் போது கொடி பிடித்தாலும் இறுதியில் மனு கொடுத்தே போராட்டத்தை நிறைவு செய்கிறார்கள். எனவே கொடி பிடிப்பவர்கள் அரசியல் ரீதியாக தொழிற்படுகிறார்கள். புலம்பெயர் தேசத்தில் அரசியல் ரீதியாக தொழிற்படுபவர்கள் தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

நீங்களும் ஆட்களை சேர்த்து பலவற்றை செய்யலாம்.

கோயில் நிர்வாகிகிடளிடம் கதைப்பது வேள்வி ஆடுகளிடம் பலிக்கு ஒப்புதல் கேட்பது போன்றது. காரணம் அவர்கள் செல்வம் கொழிக்கும் தொழிலை சும்மா விட்டுத்தரப் போவதில்லை. இதில் பலர் முன்னாள் புலிப்பினாமிகள் வேறு. Aggressive takeover அதாவது ஆயிரக்கணக்கில் சந்தாதாராகி அமைப்பை கைப்பற்றுவது நடைமுறைச்சாத்தியம்.

கோவிலை கட்டாவிடா விகாரையோ பள்ளியோ முளைக்கும். கட்டி இடித்தால் - எமது கோவிலை இடிக்கிறார்கள் என்று மோடி கூட்டத்துக்கு சொல்லவாவது வழி கிடைக்குமே?

அப்படியானால் எதற்கு வருட வருமானத்தில் 5% ஐ கொடுக்கிற கதை எழுதினீர்கள்?

புலிப்பினாமிகள் என்று இங்கும் நீங்கள் எழுந்தமானமாக தான் கூறுகிறீர்கள். சும்மா கண்டபடி கருத்து வைக்கிறதை நிறுத்துங்கள்.

கோவில் இடிக்கப்பட்டால் மோடி கூட்டத்திற்கு சொல்லி என்ன பயன்? அப்படியே மதப்பற்றில் சிங்களவனுடன் சண்டை போட்டு கோவிலை மீட்டுத்தருவார்களாக்கும்.

ஏற்கனவே இடிக்கப்பட்ட பல கோவில்கள் தான் உள்ளனவே. அதுபற்றி வாய்திறக்காத மோடி இந்த கோவிலை இடித்தால் மட்டும் ஏதும் செய்து விடுவாராக்கும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடிக்கிறதை விட்டிவிட்டு இந்தியாவில் இருக்கும் பஜ்ரங்தள், சிவசேன, ஆர்எஸ் எஸ் இப்படி அமைபுகளை இந்துதுவா ரீதியில் அணுகினால் எவ்வளவோ சாதிக்கலாம். இதுவரை எம்தரப்பில் இடிக்கப்படும் கோவில்களை, கிழக்கின் நிலப்பறிப்பை பற்றி யாராவது இந்த அமைப்புகளுக்கு முறையாக சொல்லி லாபி பண்ணியிருக்கோமா? அப்படி ஏதும் செய்யாமல் அவர்கள் என்ன செய்து விட்டார்கள்? என்று கேட்பதில் நியாயம் இல்லை.

லண்டனில் எனக்குத்தெரிய எல்லா கோவில்களும் முள்ளாள் புலிப்பினாமிகளினுடயதே.

நாங்கள் ஆக்களைச்சேர்த்து - எனக்கு எமது வரையறை தெரியும் சகோதரி. கொடிபிடிப்பவர்களிடம் ஆள்பலம், இளையோர் பலம் எல்லாம் இருக்கிறது - இது அவர்களால் மட்டுமே முடியுமானது.

அமெரிக்காவில் அயர்லாந்து போராளிகளுக்கு ஆதரவு தேடிய போது ஐரிஸ் கொடியைதான் பிடித்தார்கள், ஐஆரே கொடியை அல்ல.

பலஸ்தீனியர் பலதீன கொடியை பிடிக்கிறார்கள் ஹமாஸ் கொடியை அல்ல

நாங்களும் ஒரு தமிழ்க்கொடியை உருவாக்கி ஒரு பரந்த கூட்டணியை அமைக்கலாம், புலிக்கொடியை கைவிடுவதன் மூலம் உலக நாடுகளுக்கும் நாங்கள் அவர்களோ அல்லது அவர்களின் பினாமிகளோ இல்லை எண்டு சொல்லலாம். ஆனால் இங்கே பலர் தர்க யதார்த்த ரீதியில் சிந்திக்காமல் உணர்வு பூர்வமாய் எமோசனலாய் யோசிக்கிறாரகள்.

அவர்களுக்கு புலிதான் தமிழர், தமிழர்தான் புலி. ஒன்று அழிந்தால் மற்றயதும் அழிய வேண்டும். ஆகவே இந்த கூட்டத்தோடு எனக்கு சரிப்பட்டு வராது.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றில் இந்த கூட்டத்தில் சேர்ந்தவராய் அல்லது இலங்கையை பற்றி கவலையே படாத கூட்டமாய் உள்ளனர். ஆக விரும்பியோ விரும்பாமலோ புலம்பெயர் வகிபாகம் கொடி பிடிக்கும் கூட்டத்தின் கையில்தான் இருக்கிறது.

ஒரு பேச்சுக்கு நானும் புலம்பெயர் போராட்டத்தில் கொடி பிடித்தால் என்னிடமும் ஆள் பலம் இருக்கு என்று சொல்வீர்களோ? அமைப்புடன் சேர்ந்து இயங்குவோர் சிலர். அமைப்பு சாராமல் இயங்குவோர் பலர்.

அரசியல் ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் நிதி ரீதியாக ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது.

கொடி பிடிச்சாப்போலை காசு கேட்டவுடன் தூக்கிக்கொடுக்கிற ஆட்கள் அல்ல தமிழர்கள். புலிகள் ஆட்சி காலத்தில் புலம்பெயர் மக்கள் பணம் கொடுத்ததற்காக இப்பொழுதும் கொடுக்கிறார்கள் என்றோ கொடுப்பார்கள் என்றோ நீங்கள் நினைக்க கூடாது.

பணம் சேர்ப்பதே பெரும் கஷ்டம் என்ற நிலை தான் இன்று. அப்படியும் பணம் சேர்க்க வந்தால் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடி விட்டார்கள் என்று பழிச்சொல் கேட்க வேண்டி வரும். அப்படியிருக்க எதற்கு கொடிபிடிப்பவர்களுக்கு இந்த வேலை? சில விஷயங்களுக்கு மட்டும் உங்களுக்கு கொடி பிடிப்பவன் தேவைப்படுது. மற்றப்படி அவர்களை பற்றி ஒரே நக்கலடி.

நீங்கள் பலரை சேர்த்து செய்ய வேண்டுமென்றில்லை. உங்களால் முடிந்த நபர்களை சேர்க்கலாம். அதே போல் கொடி பிடிப்பவர்களும் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது சிறு சிறு நண்பர்கள் குழாமாக சேர்ந்தோ அமைப்புகளுடன் சேர்ந்தோ ஏதோ செய்யட்டும். நான் எதுவும் செய்ய மாட்டன், எனக்கு ஆட்பலம் இல்லை என்று சொல்லிக்கொண்டு கொடிபிடிக்கிற கூட்டம் ஏன் செய்யேல்லை என்று கேள்வி கேட்கிறதை இனியாவது நிறுத்துங்கோ.

தமிழர்களின் கொடி புலிக்கொடி தான். புலிகள் மக்களுக்காகவே போராடினார்கள். உயிர் துறந்த போராளிகள் மற்றும் மக்களால் தான் இன்று சர்வதேசம் வரை எமது பிரச்சினை சென்றுள்ளது. நாங்கள் புலிக்கொடியை தான் சர்வதேசத்தின் முன் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வேறு கொடியை அல்ல. சோழர்களின் கொடியும் புலிக்கொடி தான். புலிகளின் கொடியும் புலிக்கொடி தான். மக்களின் கொடியும் புலிக்கொடி தான்.

புலம்பெயர் தமிழர்கள் பிடிக்கும் புலிக்கொடி "தமிழீழ விடுதலைப்புலிகள்" என்ற வாசகத்தை கொண்டிராத கொடி. அதை கூட உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கொடி பிடிப்பதை நிறுத்தினால் மட்டும் சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் என்பது தவறு. சர்வதேசம் தனது நலனை வைத்தே அனைத்தையும் முடிவெடுக்கும்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னால் செய்யமுடியாது கொடிபிடிக்கும் கூட்டம் செய்யாட்டும் எண்டு சொல்லவில்லை. என்னால் என்ன முடியும் என்பதில் எனக்கு தெளிவு இருக்கு நான் அதை செய்கிறேன். என்னால் என்ன முடியாது என்ற தெளிவும் இருக்கு அது கொடிக்கூட்டத்தால் முடியும் எண்டு நினைக்கிறேன். அதுதான் செய்யுங்கோ எண்டு சொல்லுறேன். குதிரையை குளத்துக்கு கூட்டிப்போகதான் முடியும் தண்ணி குதிரையா பாத்து குடிச்சாதான் உண்டு.

கொடியை பொறுத்தவரை நீங்களும் "புலி அழிந்தால் தமிழரும் அழிவோம்" நிலைப்பாட்டில் உள்ள ஒருவர்தான் சகோதரி. உங்களாலும் புலிகளை ஒதுக்கி விட்டு முன்னேற முடியவில்லை. கடந்த காலத்தின் கைதிகளாக, உணர்சிவசப்பட்டு நீங்கள் கொடியை விட மறுக்கிறீர்கள். சபேசன் சொல்வது போல் "மீசை வச்சா சந்த்ஹிரன், மீசை எடுத்தா இந்திரன்" எனும் உங்கள் கொடி வியாக்கியானத்தை புலிசர்ர்பிலாத தமிழரே ஏற்கதயாரில்லை, உலக நாடுகள் என்ன முட்டாள்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்போ சோழனின் பக்கவாட்டில் பாயும் புலிக் கொடியை, பாண்டியனின் மீன்கொடியை அல்லது ஒரு தனிக்கொடியை செய்து பிடியுங்கோவன். ஒரு இயக்கத்தின் கொடியில் பெயரையும் சன்னத்தையும் நீக்கிவிட்டு நான் அவனில்லை எண்டா யார்தான் நம்புவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.