Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் கொழும்பில் சிக்கியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் கொழும்பில் சிக்கியது! 
[sunday, 2014-04-20 21:33:52]
Arrest_seithy150.jpg
இலங்கையில் இந்திய இளைஞரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ள சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகுவோரை இனங்காணும் பொருட்டு முகநூல் (பேஸ்புக்) மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களைப் பாவித்து வருகின்றமை தெரிய வந்துள்ளதாக டெக்கான் குரோனிகில் நாளிதழ் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
சிறுநீரக மாற்றுச் சிகிச்சையொன்றை அடுத்து கொழும்பில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்திய கிஷான்பாக் வாசியான தினேஷ் மாரூ குறைந்த பட்சம் பேஸ்புக் இணையத்தள நண்பர்கள் அறுவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதுடன் கடந்த காலங்களில் சிறுநீரக தானம் பற்றிய கலந்துரையாடல்களை அவர்களுடன் நடத்தியிருந்துள்ளார்.
 
அவர்களுள் ஒருவரான என்வி. கிடீனி என அழைக்கப்படும் நபர் தினேடன் மின்னஞ்சல் தொடர்பைக் கொண்டிருந்ததாகவும், விசா மற்றும் விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தினேஷ் தனது கடவுச்சீட்டின் பிரதியையும், ஆளடையாள நிரூபணத்தையும் அவருக்கு அனுப்பியிருந்ததாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக சி.சி.எஸ். பொலிஸார் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு சில நபர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாகவும், மின்னஞ்சல் மற்றும் ஃபேஸ்புக் இணையத்தளம் ஆகியவற்றின் ஊடாக பாதிப்புற்றோருடன் தொடர்புகளை வைத்திருந்தோரை தாம் துப்பறிந்து கண்டு பிடித்திருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
கடந்த மாதம் 22ஆம் திகதி தினேடன் கொழும்புச் சென்றிருந்ததாக பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ள ஏனைய இருவரில் ஒருவரும் இலங்கை மருத்துவமனையொன்றில் சிறுநீரக மாற்றுச் சிகிச்சையொன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமெனக் கூறியே பாதிப்புற்றோரை மேற்படி மோசடிக் கும்பல் கொழும்புக்கு அழைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
தினேஷின் பேஸ்புக் இணையத்தள நண்பர்கள் பொய்யான பெயர்களின் கீழ் பதிவுகளை வைத்திருப்பதுடன் சிறுநீரக தானம் வழங்கலை ஊக்குவிக்கும் பொருட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்கள் சமூக அந்தஸ்துகளை தரவேற்றம் செய்துள்ளனர். இத்தகைய சமூக அந்தஸ்து செய்திகள் மூலம் பாதிப்புறுவோரை இலகுவில் கவர்ந்து கொள்ளும் இந்த மோசடிக் கும்பல் அதன் பின்னர் அவர்களுடன் அளவளாவியும் மின்னஞ்சல் மூலம் தொடர்பைப் பேணியும் அவர்களை நம்ப வைத்து தமது சதிவலையில் வீழ்த்தி விடுகின்றனர்.
 
இணையத்தளங்களிலும் இதற்கென விளம்பரங்களை குறித்த மோசடிக் கும்பல் கொடுத்துள்ளமை தமக்குத் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ள சி.சி.எஸ் பொலிஸார், சமூக வலையமைப்புத் தளங்கள் குறித்த இரு வேறு கும்பல்களைச் சேர்ந்த இரு தனிப்பட்ட உறுப்பினர்களுக்கிடையிலான இரகசியத் தொடர்பு பற்றி தாம் விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
தம்மை மருத்துவ நிபுணர்களெனக் கூறிக்கொண்டே மேற்படி சிறுநீரக மோசடியில் ஈடுபட்டுள்ளோர், சிறுநீரகங்களைத் தானம் வழங்குவோருக்கு மாற்றுச் சிகிச்சையின் பின்னர் எதுவித பக்கவிளைவும் ஏற்படாதென நம்பிக்கையூட்டியும், இழப்பீடாக இலட்சக்கணக்கான ரூபாய்களை வழங்கியுமுள்ளனர். பொலிஸாரின் உன்னிப்பான கவனிப்பைத் தவிர்க்கும் பொருட்டே அவர்கள் இலங்கையைத் தமது இயங்கு தளமாகத் தேர்ந்தெடுத்திருந்ததாகவும் மேற்படி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.