Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர்

Featured Replies

ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன்

ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது:

தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளமை இதுவே முதற்தடவை.

எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை ஆக்கிரமித்திருப்பதை போர்ப் பிரகடனமாகவே நாம் கருதுகிறோம். அவர்கள் தாமாகவே உடனடியாக வெளியேறாது விட்டால், அவர்களை வெளியேற்றுவதற்கான போரை ஆரம்பிப்பது விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தவிர்க்க முடியாததாக மாறிவிடும். ஏற்கனவே சமாதான ஒப்பந்த விதிகள் எல்லாம் மீறப்பட்டுள்ள நிலையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மிக மோசமான விளைவுகளையே உருவாக்கும்.

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு - கிழக்கின் பல பாகங்களிலும் போரின் தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. இருப்பினும், முடிந்தவரை விடுதலைப் புலிகள், வலிந்த தாக்குதல்களைத் தவிர்த்து பொறுமை காக்கிறார்கள். ஆனால் எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

யுத்த நிறுத்தத்தில் கைச்சாத்திட்ட இருதரப்பும், யுத்த நிறுத்த வரையறைகளை மதித்து, தொடர்ந்தும் அதை மதித்து நடப்பதாகவும் வலிந்த தாக்குதல் எதையும் தொடுக்கவில்லை என்றும் கூறிவருகின்றன. ஆனால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை வலிந்த தாக்குதல் மூலம் தற்போது சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிற்பது, மிக அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் மட்டுமல்ல இது ஒரு போர்ப் பிரகடனமும் கூட.

ஆக்கிரமித்த பிரதேசத்தை விட்டு சிறிலங்காப் படைகள் உடனே வெளியேறாது விடின், அவர்களை வெளியேற்றுவதற்கான யுத்தமொன்றை விடுதலைப் புலிகள் தொடுக்க நேரிடும் என்றார் சீ.புலித்தேவன்

http://www.eelampage.com/?cn=28714

புலித்தேவன் சொல்வது தவறு ...

யாழ் களத்தை பொறுத்தமட்டில்...

புலி உண்மையான முகத்தை காட்ட வெளிக்கிட்டா........

இங்கே சும்மா ஆனையிறவு ...

ஜெயசிக்குறு...

அப்பிட்டினு பீலா காட்டாதீங்க...

சிங்களவன் எல்லா இடமும் பிடிச்சிட்டான் ............

என்னு கருத்து எழுதியவங்க ...

எங்கே போக?

அதுதான்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா இவங்க இப்படியே சொல்லிட்டு இருக்கட்டும் இலங்கை பிரதமர் ஒட கருத்த போய் பாருங்க..சிங்களவர்களுக்கு எவ்வளவு உற்சாகம் கொடுககின்ற பேச்சு புலிகள் தரப்பில் இப்படி ஒருவர் கூட இல்லையா..?

http://www.eelampage.com/?cn=28718

சுண்டல்...

உங்களோடு சண்டை ..பிடிக்க ஆசை.........

ஒரு கவலை....

உங்களோட சண்டை பிடிச்சா...

இங்க யாரும் - என்னை மதிக்க மாட்டாங்க ............

அதுதான் கவலை ..

நீங்க செய்வது ...

ஒவ்வொரு செய்திகளின் போதும்...

விமர்சனம் இல்ல...

விரக்தி!!

சரி என்னமோ- புலி க்கு முன்னால பீலா - காட்டினா...

சிங்களவன் ......

கட்டாயம் அழுவான் என்பது என் நம்பிக்கை! 8)

  • கருத்துக்கள உறவுகள்

யாரு சொன்னது நான் விமர்சனம் தான் செய்யிறன் எண்டு விரக்திய தான் சொல்லுறன்...

விடுதலைப் புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவோமே தவிர ஒர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரதமர்

விடுதலைப் புலிகளின் வசமுள்ள பகுதிகளை இன்னும் இன்னும் கைப்பற்றுவோமே தவிர சிறிலங்கா இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இடங்களிலிருந்து ஒரு அங்குலத்தைக் கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சிறிலங்கா பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹொரண பிரதேச அமைப்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அவர் உரையாற்றும் போது கூறியுள்ளதாவது:

உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயங்கரவாதம் இருக்கலாம். ஆனால் இலங்கையில் இருக்கக்கூடாது என்பதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையாகும். அதனை எமது கட்சி ஆட்சியிலிருக்கும் ஐந்து வருட காலத்திற்குள் நிறைவேற்றி காட்டுவோம்.

பிரச்சினையின்றி போக்குவரத்துக்கு வழி சமைப்போம். கடலிலும் எமக்கு பிரச்சினை இருக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்காக புலிகளின் வசமுள்ள பகுதிகளை இன்னும் கைப்பற்றுவோம்.

எங்களை பலியெடுக்க எவருக்கும் உரிமையில்லை. அதேபோல எவரையும் கொல்வதற்கு எங்களுக்கும் உரிமையில்லை. எங்களைச் சார்ந்தவர்களை பலியெடுத்தமைக்காகவே சம்பூரைக் கைப்பற்றி தண்டனை வழங்கியுள்ளோம்.

இந்த தண்டனையும் இடங்களை மீட்பதற்கான நடவடிக்கையும் தொடரும். இராணுவத்தினரால் மீட்கப்பட்ட இடங்களை திருப்பிக் கொடுத்தால் தான் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என்று புலிகள் யோசனைகளை சமர்ப்பித்துள்ளனர் பிடித்ததை விட்டுக் கொடுக்கும் பழக்கம் எம்மிடம் இல்லை.

பிரிக்கப்படாத நாட்டை (இலங்கையை) ஏற்படுத்துவதே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையாகும். எனினும் நாம் சம்பூரை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள் ஆரம்பித்துவிட்டு பருப்பு சாப்பிட வேண்டாம் என்று. ஆனால் நடந்தது என்ன? புலிகள் நினைத்தார்கள் தம்மால் மட்டுமே வெற்றியீட்ட முடியும் என்று ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் தாய் நாட்டின் கௌரவத்தை காப்பாற்றி விட்டனர்.

புலிகள் மீது கைவைத்தால் கொழும்பு சுக்குநூறாகும் என்றும் எம்மை அச்சுறுத்தினர். நம்மில் பலரும் பயமுறுத்தினார்கள். ஆனால் திட்டமிட்டபடி சம்பூரை கைப்பற்றினோம்.

பேச்சுவார்த்தைக்கு போய் புலிகள் கேட்பதையெல்லாம் கொடுக்க முடியாது. அதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள் எந்தக் காட்டில் மறைந்திருந்தாலும் அந்த இடத்தை கண்டுபிடித்து தாக்கியழிக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக எம்மால் அவ்வியந்திரத்தை கொள்வனவு செய்ய முடியவில்லை.

எனினும் சில நாடுகள் எமக்கு கடனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளன. இன்னும் சில நாடுகள் எமக்கு ஆயுதங்களை தந்து உதவ முன்வந்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டமூலத்தை சமர்ப்பித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தம் குறைவாகவே காணப்பட்டது. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகள் கூறுவதையே செய்கின்றனர்.

சாதாரண தமிழ் மக்கள் பிரபாகரனின் யுத்தத்தை விரும்பவில்லை. வாக்களிப்பு நடத்தினால் பயங்கரவாதத் தலைவர் தோல்வியடைவார். இதுதான் உலக பயங்கரவாத தலைவர்களின் கடந்த கால நிலைப்பாடாகும்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி பயங்கரவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சிலேயே ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றத

விடுதலைப் புலிகளின் பகுதிகளை கைப்பற்றுவோமே தவிர ஒர் அங்குலத்தைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்: பிரதமர்

ஐயா பிரதமர் அவர்களே

நீங்கள் எங்களிற்கு விட்டுத்தரவேண்டாம். எந்த வகையில் எமது நிலத்தை மீமீள மீட்பது என்பது எமக்குத் தெரியும். இருந்தபோதும் சம்புூரை ஆக்கிரமித்தது மாத்திரமன்றி அதனை விடுவிக்க மாட்டோம் என வீராப்பு பேசி தமிழினத்தைப் போரிற்குள் வலிந்து தள்ளி தமிழினத்தின் விடுதலையை விரைவாக்க வழியேற்படுத்தியமைக்காக உங்களின் அரசிற்கு தமிழினம் நன்றி சொல்லும்.

நீங்கள் விட்டுத்தந்து பிச்சை வாங்கும் நிலையில் தமிழன் இல்லை. எமது நிலத்தை ஆக்கிரமித்தமைக்காக உங்களிற்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தே நாம் அனுப்பி வைப்போம். ஒரு கொஞ்ச நாள் பொறுத்திருங்கள் ஐயா...

செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் நு}ற்றுக்கணக்கில் அல்ல ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.