Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...''

Featured Replies

''உணவு போர்வைக்குள் ஆயுத கடத்தல்..பயணிகள் பணயம்...''

இராணுவத்தினரின் வலிந்து தாக்குதலையடுத்து மூண்ட விடுதலைப் புலிகளின்

பதில் தாக்குதலால் மக்கள் போக்குவரத்து பாதைகள் மூடப் பட்டன .

அவர்களுடைய தொடர்பாடல்கள் தடுக்கப் பட்டன .

ஊரடங்கை பிறப்பித்து அந்த மக்கள் தமது இருப்பிடங்களிற்க்குள் முடக்கப் பட்டன .

மக்கள் மீது கெடு பிடிகள் அவிழ்த்து விடப்பட்டன

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப் பட்டன

பலர் காணமல் போயினர் .

உணவு தட்டுப் பாடு தலை தூக்கியது புழக்கத்தில் இருந்த உணவுகள்

பதுக்கப் பட்டன . உணவின்றி மக்கள் தவித்தனர்

பால் மா இல்லாது பிள்ளைகள் கதறினர் .

இத்தனைக்கும் காரணமாய் இருந்தது தரை கடல்

விநியோகம் தடைப் பட்டதே .

அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினரின் விநியோகமும் கடல் .வான்

பகுதிகளால் தடுக்கப் பட்டன .

தொடர்ந்தும் கடற் புலிகளின் அச்சுறுத்தலிலேயே அது உள்ளது .

இதனால் பல நெருக்கடிகளை சந்தித்த படையினர் என்ன செய்வதெனயறியாது திணறி

வருகின்றன .

அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே யாழ் குடா மக்களுக்கான உணவு விநியோகங்களும் தடைப்பட்டன .

படையிணர் தந்திரமாக தரை வழி பாதையையும் மூடி அந்த மக்களுக்கு நெருக்கடியை கொடுத்தனர்

அதனது அடிப்படை காரணம் தரை வழி பாதையை மூடுவதன் ஊடாக

தமது இராணுவ தேவைகளை நிவர்த்தி செய்ய முடியம் என அது எண்ணியதாகும் .

எனவே தான் தந்திரமாக இந்த நிகழ்வை அது

அரங்கேற்றியது .

இதனால் மக்களிற்க்கு உணவு தட்டுப்பாடு அவர்களை துரத்தியது .

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலையேற்றம் மறு புறம் பணம் இருந்தும் அதை

வாங்க முடியாத நிலை . என பல்வேறு பட்ட நிலையில் சிக்கி தவித்த மக்களை அதனில்

இருந்து காக்கும் பொருட்டு செஞ்சிலுவை சங்க உதவியுடன் அந்த மக்களுக்கு

உணவு கொண்டு போக உறுதியாகியது அதற்கு புலிகளும் வழி விட்டனர்.

ஆனால் இங்கு நடந்தேறி வருகின்ற நிலையோ தலைகீழாக உள்ளது .

செஞ்சிலுவை கொடியை கட்டிய படி அந்த கப்பல் பயணிக்க அதை அண்டியபடி

இராணுவ கப்பல்களும் தமது படைக்கலங்களை நகர்த்துவதாக

புலிகளால் தற்போது குற்றம் சாட்டப் பட்டுள்ளது .

இது போன்ற நிகழ்வு கடந்த கால ஆட்சியாளர்களின் காலதிலும்

நிகழ்ந்தேறிய போது கடற் புலிகள் அதை தடுத்து தாக்கியழித்தனர் என்பது

தெரிந்ததே .

அவ்வாறான ஒரு நிகழ்வு இனி அரங்கேற போகிறதென்பது தெரிகிறது .

புலிகள் தரை வழி பாதையை திறந்து பயணிக்க தாம் சம்மதிப்பதாகவும்

கடற் பயணத்திற்கு தாம் அனுமதிக்க மாட்டோம் என தொடர்ந்தும்

கூறி வருகின்றனர் .

இந்த நிலையில் கடற் படையினரின் இந்த நிகழ்வானது

பலத்த சந்தேகத்தையும் அதே வேளை ; சீற்றத்தையும்

புலிகளுக்கு கொடுத்துள்ளது .

இந்த நடவடிக்கையை புலிகள் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள்

என்பதும் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டார்கள் எனபதை

நாம் நம்பலாம் .

அப்படியானால் மீண்டும் கடல் அதிர போகுதென்பதையும்

அதே வேளை சிங்கள அரசின் இந்த கபடத் தனத்தை உலகிற்க்கு

கோடிட்டு காட்ட புலிகள் முனைவார்கள் என்பது ம்

அதற்கான செயற் பாடுகளில் இப்போதே இறங்கி விட்டார்கள் என்பதும்

அவர்களின் சில ஊடக செய்தி ஊடாக அறிய முடிகிறது .

எனவே மீண்டும் மீண்டும் இலங்கை கடற்ப்படையின்

இந்த செயலை புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதும்

அதே வேளை அதற்கு எதிராக அவர்களும்

அதை தடுக்கின்ற செயற் பாட்டில் இறங்கு வார்கள் என்பதும் .

அந்த மக்களுக்கு உரிய முறையில் பொருட்களை கொண்டு செல்ல

மாற்றுத் திட்டமான

தரை வழி திறப்பில் கடும் பிடியை காட்டுவார்கள் என்பதும்

அத்தோடு அந்த கடற்படையின ; விநியோகங்களை தடுப்பார்கள என்பதும்

உறுதியாகிறது .

ஏனெனில் உணவு விநியோகம் என்ற போர்வைக்குள் ஆயுதங்கள் கொண்டு

செல்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

அதே வேளை மக்களை பணயம் வைத்து கொண்டு

காயப் பட்ட இராணுவத்தினரை மேலதிக

சிகிச்சைக்காக கெ hண்டு செல்வதையும்

விரும்ப மாட்டார்கள் என்பதையும் இனி

வருங் காலங்கள் புலப் படுத்தும் என நம்பலாம்.

எனவே சிங்கள அரசின் முக மூடிகள் சர்வதேசத்தின்

முன்னால் கிழியப் போகிற தென்பதில் ஜயமில்லை .

- வன்னி மைந்தன்-

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

என்ன உவர் கண்ட படி ஏதோ எல்லாம் சொல்லிறார்

அரசு அப்படி உன்றும் செய்யல எண்டு சொல்லுது...

அப்படி கடத்;தின சும்மா தூள் கிங் அடி ஒண்டு போடனும் அப்ப தான்

அவங்கள் அடங்குவாங்கள் சம்புர் இழப்பையும் சேர்து எடுங்கோ...

நான் அவதனிப்பு குழுவா வாறன்

படையினருடன் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள்

[சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006, 19:17 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

சிறிலங்காப் படையினர் மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தமது கடல் போக்குவரத்தினை மேற்கொள்வதால் யாழ். குடாநாட்டு மக்கள் கடல்வழிப் போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம்.

இந்த வேண்டுகோளை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ளது.

சிறிலங்கா கடற்படை யாழ்ப்பாண மக்களை கேடயமாகப் பயன்படுத்தி தங்களுடைய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் அதனூடான வளங்களை செய்து வருகின்றது.

எந்த வகையிலும் பாதுகாப்பு உறுதிப்பாடு வழங்கப்படாததாகவே கடல்வழிப் போக்குவரத்து உள்ளது.

தரைவழிப் பாதையைத் திறந்து மக்களுடைய போக்குவரத்துக்கு வழி செய்யப்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தரைவழிப் பாதையை திறப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவருக்கும் விடுதலைப் புலிகள் தெரிவித்து வருகின்றனர்.

சிறிலங்கா அரசு, தனது படை நலனில் அக்கறை கொண்டு மக்களை கேடயமாகப் பயன்படுத்தி கடல்வழி படைப் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றது.

மக்களுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடல்வழி போக்குவரத்து எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என்று தமிழீழ அரசியல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.