Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்

Featured Replies

140307121035_arunachalam_muruganantham_p

'டைம்' பட்டியலில் இடம்பிடித்த முருகானந்தம்

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் என்ற 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்துவதற்கான நாப்கின்களை மலிவான விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

 

அவருடன் சேர்ந்து இந்தியாவிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முருகானந்தம் ஒரு ‘சுகாதாரப் போராளி’ என்று அந்த இதழில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைத் தலைமை தாங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் அரசியல் வாதி’ என்று வர்ணித்து நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

‘நவீன இந்தியாவின் அரசியல்வாதி என்று கூறப்படும் உருவத்திற்கு மாறான அரசியல்வாதி என்றும், பிரபல குடும்பத்திலிருந்து வராத, இந்து மதக் கட்சியிலிருந்து வராத ஒரு தனி நபர்’ என்று வர்ணித்து அர்விந்த கெஜ்ரிவாலின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மனசாட்சி என்று வர்ணித்து இந்திய நாவலாசிரியர் அருந்ததி ராயின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் அத்து மீறல் தகவல்களை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோடென், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புடின் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2014/04/140426_timelist.shtml

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற 100 பேர்: கோவைக்கு பெருமை சேர்த்த முருகானந்தம்: சாதனையாளர் ஆனார், சாதாரண மனிதர்

 

Tamil_News_large_962819.jpg

பெண்களே வெளியே சொல்ல கூச்சப்படும் ஒரு விசயத்தில், ஒரு ஆணாக, பெண்களுக்கான 'சானிடரி நாப்கினை' மலிவு விலையில் தயாரித்து, அடிமட்ட ஏழை பெண்களுக்கும் போய்ச்சேரும் அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார், கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர்.


இதனால் இவர், உலகின் செல்வாக்குமிக்க 100௦ நபர்களில் ஒருவராக அமெரிக்காவின், 'டைம்ஸ்' பத்திரிக்கையால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் விருது பெறவுள்ளார். சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100௦௦ பேரில், இந்தியாவிலிருந்து நரேந்திரமோடி, கெஜ்ரிவால், அருந்ததிராய் போன்ற பிரபலங்களும் அடங்குவர். இவர்களுடன் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார், கோவையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த முருகானந்தம்,49.

தனது சாதனை குறித்து, அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் கோவை, பாப்பநாயக்கன்புதூர். அப்பா நெசவுத் தொழிலாளி. அம்மா விவசாயக்கூலி. எனக்கு ரெண்டு தங்கச்சிங்க. திடீர்னு ஒருநாள் அப்பா இறந்துவிட்டார். வீட்டின் வறுமையை போக்க, 'கிரில்' பட்டறைக்கு வேலைக்குப் போனேன். ஒருநாள் என் மனைவி, எதையோ மறைச்சி எடுத்துட்டுப் போனாங்க.என்னனு கேட்டப்ப, 'இது, பொம்பளைங்க சமாச்சாரம்'னு சொன்னா. விடாப்பிடியா விசாரிச்சப்ப, அது அழுக்குத்துணின்னு தெரிஞ்சது. நாப்கின் பயன்படுத்தலாமே என்றேன். 'விலை அதிகம்' என்றாள். அப்போதுதான் புரிந்தது, கிராமப் பெண்கள், ஏழை பெண்கள் வசதி இல்லாம, பழையதுணிகளை பயன்படுத்துறாங்கன்னு.

உடனே மலிவு விலையில் நாப்கின் தயாரிக்க தயாரானேன். கடையில ஒரு நாப்கினை வாங்கி, பிரிச்சுப் பார்த்து, அதே மாதிரி ஒரு நாப்கின் தயாரிச்சேன். என் மனைவிகிட்ட கொடுத்து சோதனை செய்தேன்; 'சரியில்லை'ன்னு சொன்னாள்; முதல் அடியே தோல்வியில் முடிந்தது.அடுத்ததா, மனைவி மட்டுமல்லாம, அம்மா, தங்கச்சி, மருத்துவக் கல்லுாரி மாணவிகள்னு எனது சோதனையை தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில், சோதனைக்காக, நான் தயாரித்த நாப்கினை பயன்படுத்த பலரும் மறுத்தாங்க. என் முயற்சியை பார்த்து, எனக்கு ஏதோ பால்வினை நோய் இருக்குனு சிலர் ஊர்ல தகவல் பரப்பி விட்டாங்க. அதைக்கேட்டு என் மனைவியும், அம்மாவும் பிரிஞ்சு போயிட்டாங்க.

என்னோட விடாமுயற்சியில, வெளிநாட்டு கம்பெனிகள் பயன்படுத்துவது, 'பைன்' மரத்திலிருந்து வரும் ஒரு வகை பஞ்சுனு தெரிஞ்சுது. உடனே, 'பைன்' மரப்பஞ்சை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தேன். பத்து வருட போராட்டத்துக்குப்பின், மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன்.அதில் தயாரித்த முதல் நாப்கினை, கல்லூரி மாணவி ஒருவர் பயன்படுத்திட்டு, மிகவும் நல்லா இருக்குன்னு சொன்னார். ரொம்ப வசதியா இருக்குனு சொன்னப்போ, எனக்கு அப்படியொரு சந்தோஷம். பல வருடக்கனவு நிறைவேறியது.நான் தயாரிச்ச இயந்திரத்தை பெண்களே சுலபமா இயக்கி, நாப்கினைத் தயாரிக்கலாம். ஒரு நாப்கின் விலை ஒரு ரூபாய்தான். இந்த தகவல் பரவி நிறைய பேர் இந்த இயந்திரத்தை தயாரிக்கச் சொல்லி ஆர்டர் கொடுத்தாங்க.கடந்த 2005ல், ஐ.ஐ.டி., 'சமூக மாற்றத்துக்கான சிறந்த கண்டுபிடிப்பு' என்று, என் கண்டுபிடிப்பை தேர்வு செய்தது. என் கனவே இந்தியாவுல இருக்கிற அத்தனை ஏழைப் பெண்களுக்கும், என் கண்டுபிடிப்பு போய் சேரணும்ங்கறதுதான். இனி எந்த சகோதரியும் மாதவிடாய் காலங்கள்ல அழுக்குத்துணியைப் பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு, முருகானந்தம் தெரிவித்தார்.
 

உலகின் 11 நாடுகளுக்கு ஏற்றுமதி




சர்வதேச அளவில் நாப்கின் பிரபலமடைந்திருந்தாலும், அதன் விலை அதிகம் என்பதால், ஏழை பெண்கள் பயன்படுத்த முன்வருவதில்லை. இந்தியாவில் 5 சதவீத பெண்கள் மட்டுமே நாப்கினை பயன்படுத்துகின்றனர். ஆனால், முருகானந்தம் கண்டறிந்த நாப்கின், உலகின் 11 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறதாம்.நமது நாட்டின் வடமாநிலங்களிலுள்ள 50 பள்ளிகளில், மாணவிகளே தங்களுக்குத் தேவையான நாப்கினை, 30 விநாடிகளில் தயாரிக்க கற்றுக்கொடுத்துள்ளார். மலிவான மற்றும் ஆரோக்கியமான நாப்கினை கண்டுபிடித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், சர்வதேச அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில், ஒருவராக அமெரிக்காவின் 'டைம்ஸ்' பத்திரிக்கையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் 29ம் தேதி, அமெரிக்க அதிபர் ஒபாமா கையால் விருது பெறவுள்ளார். முருகானந்தத்தை பாராட்டி ஊக்குவிக்க, 944 22 24069 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=962819

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒருவர், ரைம் சஞ்சிகையில்.... இடம் பிடித்தது எமக்கும் பெருமை.
சிறிய‌ சாதாரண விடயத்தில் கூட.... சாதனை படைக்கலாம் என்பதற்கு, இவர் நல்லதொரு எடுத்துக்காட்டு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.