Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவேக சிந்தாமணி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலகால விடத்தையும் நம்பலாம்;

.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;

கோல மாமத யானையை நம்பலாம்;

.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;

காலனார் விடு தூதரை நம்பலாம்;

.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;

சேலை கட்டிய மாதரை நம்பினால்

.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

விளக்கவுரை

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர் இப்படிப்பட்ட பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆலகால விடத்தையும் நம்பலாம்;

.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;

கோல மாமத யானையை நம்பலாம்;

.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;

காலனார் விடு தூதரை நம்பலாம்;

.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;

சேலை கட்டிய மாதரை நம்பினால்

.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

விளக்கவுரை

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர் இப்படிப்பட்ட பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

"சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே." - இது ஒட்டுமொத்த பெண்வர்க்கத்தையும் குறைகூறுவது போல் உள்ளதால் இந்த வசனத்துக்கு வேறு ஓர் அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது "சேல் அகட்டிய மாதரை" - அதாவது, "கண்ணை விரித்துப் பார்க்கும் பாங்குடைய பெண்ணை" என்று பொருள் கொள்ளலாம். (எக்குத்தப்பா பார்த்தல் என்று பொருள் :unsure: ) அது காலப்போக்கில் "சேலைகட்டிய" என்றாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே." - இது ஒட்டுமொத்த பெண்வர்க்கத்தையும் குறைகூறுவது போல் உள்ளதால் இந்த வசனத்துக்கு வேறு ஓர் அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது "சேல் அகட்டிய மாதரை" - அதாவது, "கண்ணை விரித்துப் பார்க்கும் பாங்குடைய பெண்ணை" என்று பொருள் கொள்ளலாம். (எக்குத்தப்பா பார்த்தல் என்று பொருள் :unsure: ) அது காலப்போக்கில் "சேலைகட்டிய" என்றாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

கருத்துக்கு நன்றி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1.

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்

கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்

தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்

உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார். 2.

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

இது ராமலிங்க அடிகளார் அருளியதா?.............தேவந்தி.......

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ராமலிங்க அடிகளார் அருளியதா?.............தேவேந்தி.......

விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுதியாக அறிய முடியாமல் உள்ளது.

<span style='font-size:25pt;line-height:100%'>விவேக சிந்தாமணி</span> தொடர்ச்சி...

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே

அம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை

நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. 15.

கெற்ப்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்

. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

. சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

. நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்

. அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே! 16.

தொடரும்...

கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

இதை படிக்கும் போது நினைவில் நிழலாடும் ஒரு கதை.

சங்கரன் பிள்ளை என்று ஒரு நாவிதர்(முடி வெட்டுபவர்) துபாய் போனார். அவருக்கு அங்கு அரசனிடம் வேலை கிடைத்தது. அவர் அங்கு கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தங்க கட்டி செய்து தன்னுடைய பெட்டியில் பத்திரமாக வைத்திருந்தார். அவருக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி.

ஒரு நாள் அவர் அரசனுக்கு முடி வெட்டும் போது அரசனுக்கு தீடீர் என்றூ மக்களின் பொருளாதர நிலைபற்றி அறிய ஆவல். சங்கரன் பிள்ளையிடம்

நம் நாட்டில் மக்கள் எல்லாம் நல்ல இருக்காங்களான்னு கேட்டார்.

அதற்க்கு நம்ம சங்கரன் பிள்ளை மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் ஆட்சியில் என்ன குறைகான முடியும். மக்கள் எல்லாரிடமும் ஆக குறைந்தது ஒரு தங்க கட்டியாவது இருக்கும் என்றார்.

மன்னருக்கு ஏகபட்ட மகிழ்ச்சி, மறுநாள் அவையை கூட்டினார் தன் சந்தோசத்தை வெளியிட்டார். அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார். அப்ப அமைச்சர் சொன்னார் அரசே தாங்களுக்கு ஒவ்வொறு குடியிடமும் ஒரு தங்க கட்டியாவது இருக்கும் என்று யார் கூறியது என்று கேட்டார்.

அரசரும் மகிழ்சியுடன் நம்ம சங்கரன் பிள்ளையை கூறியதாக கூறி, தாங்கள் இதுபற்றி கூறவில்லையே என்று கடிந்து கொண்டார்.

உடனே அமைச்சர், அரசே நாளைக்கு சங்கரன் பிள்ளையை இதே கேள்வியை கேளுங்கள் என்று கூறிவிட்டு அவையை விட்டு சென்று விட்டார்.

மறுநாள் அரசவை கூடும் முன்பே அமைச்சர் நம்ம சங்கரன் பிள்ளையிடம் இருந்த தங்கக்கட்டிய திருட செய்துவிட்டார்.

மறுநாள் அரசவை கூடியது, அரசர் மகிச்சியாக அமர்ந்திருந்தார், அரச பிரதானிகள், அமைச்சர் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். நம்ம சங்கரன் பிள்ளையும் வந்திட்டார்.

அரசர் சங்கரன் பிள்ளையிடம் நம் நாட்டில் மக்கள் எல்லாம் எப்படி இருக்காங்க?

நம்ம சங்கரன் பிள்ளைக்கு தாங்க முடியாத கோபம். என்ன அரசு இது மனிசன் நிம்மதியா தூங்ககூட முடியல, ஒரே திருட்டு, கொலை, கொள்ளை. ஒரு சின்ன தங்க கட்டிய கூட பத்திரமாக வச்சிருக்க முடியல என பொங்கி அழுதுட்டார்.

அரசருக்கு என்னவே போல் ஆகிவிட்டது அமைசரை பார்த்து அசடு வழிந்தார்.

அமைசர் சொன்னார் அரசே. சங்கரன் பிள்ளை போன்றோரின் எண்ணங்களை கருதில் கொள்ளாதீர்கள் அவரை போன்றோர் அவரின் நிலையை வைத்தே எல்லோர் நிலையையும் மதிப்பிடுவார்கள் என்று அறிவுறுத்தினார். இப்ப சீவக சிந்தாமணியின் இந்த வரிகளை படிங்கள்.

கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

நம்ப சங்கரன் பிள்ளை போன்றே சிலர் இந்த இணைய தளத்திலும் கருத்து சொல்றாக? யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.