Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டவர் கட்டுநாயக்கவில் தற்கொ

Featured Replies

லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்கொலை

லண்டனிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கடந்த ஜூலை மாதம் சிறிலங்கா கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தற்கொலை செய்துள்ளார் என்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவர் ஜெயக்குமார் சுப்பிரமணியம் என்று கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர், சட்டச்சிக்கல்கள் காரணமாகவும் தேவையான ஆவணங்கள் இன்மையாலும் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படாமல் குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் தடுத்து iவைக்கப்பட்டிருந்த அறைக்குள்ளேயே சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம்: வீரகேசரி

தற்கொலையா? கொலையா??

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், அங்கே தூக்கிட்டுக் கொள்வதற்கு எவ்வாறு முடிந்தது. அதுவும் தடுப்பு அறையில் அவ்வாறன வசதி கிடைக்குமா என்ன? அடித்து துன்புறுத்தும் போது சில வேளை இறந்து இருக்கலாம்.

ஆனால் விபரமாகச் செய்தி போடப்படாத போது, சொல்ல முடியாது.

உண்மையில், அங்கே தூக்கிட்டுக் கொள்வதற்கு எவ்வாறு முடிந்தது. அதுவும் தடுப்பு அறையில் அவ்வாறன வசதி கிடைக்குமா என்ன? அடித்து துன்புறுத்தும் போது சில வேளை இறந்து இருக்கலாம்.

ஆனால் விபரமாகச் செய்தி போடப்படாத போது, சொல்ல முடியாது.

இது தற்கொலையாக நிச்சயம் இருக்க முடியாது தூயவன்.

இப்படியானவர்களை தங்க வைக்கும் அறையில்

அப்படியான நிலை இல்லை.

நான் சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட

ஒருவரை விடுவிக்க இங்கே சென்றிருக்கிறேன்.

ஒருவர் நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு போகும் போது

அவரை மீட்க யாராவது இலங்கையில் செயல்பட வேண்டும்.

என்ன?

அரசியல் ரீதியாக பரிந்துரைகள்!

லஞ்சம்!

இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பேசாமல் அமைதியாக இருந்தால்

எதிர்காலத்தில் இது தொடரும்....................

தற்போதைய சூழலில் இது மிக அபாயகரமானது!

வெளிநாடுகளில் கிரிமினல் குற்றவாளிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்து

நாடு கடத்தப்படும் போது

அந்த நாட்டு போலீஸார் வழங்கும் தகவல்களும்

நாடுகடத்தப்படுவோருக்கு பாதிப்பை உருவாக்கவல்லது.

இவர் பற்றி தெரிந்தவர்கள் ...............?

  • கருத்துக்கள உறவுகள்

கவலைதான்.

தற்கொலையோ..கொலையோ...

இறந்தவர் ஒரு அப்பாவியானால்.. அவரின் மரணத்திற்கு பிரித்தானியாவே.. பொறுப்பு.. இந்த நேரத்தில் எப்படி இலங்கைக்கு ஆட்களை திருப்பி அனுப்ப முடியும்..

நிச்சயமாக இது தற்கொலையாக இருக்க வாய்ப்புக்கள் குறைவு. இப்படியான விடயங்களை பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்து அவர்களிடம் நியாயம் கேட்கலாமே??
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே, சமீபத்தில் தமிழ் பெண் ஒருவர் சுகவீனமுற்று, மரணமடைந்ததாகச் செய்தி வந்திருந்தது. அது பொய் என்று, அப்பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் கூடச் செய்திருந்தார்கள். ஒருவகையில் புலம்பெயர்ந்தவர்கள் புலிகள் என்ற சந்தேகக் கண்ணில் தான் இந்தக் கொலை வெறி என்று கருத இடமுண்டு. அரசியல் பிரச்சனைகள் வரும் என்பதற்காகத் தான், தற்கொலை எனப் பொய்க் குற்றச்சாட்ட போடப்பட்டிருக்கும்.

இலங்கை மற்றும் லண்டனில் இருக்கும் ஊடகங்களும்

தமிழ் அரசியல்வாதிகளும் ஏன் மெளனமாக இருக்கிறார்கள்.

திருப்பி அனுப்பப்பட்டவர் ஒரு குற்றவாளியாக இருப்பினும்

அவரை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வழங்கலாம்.

அதில் தவறில்லை.

ஆனால்

ஒருவரை கொலை செய்து விட்டு

அல்லது கொலைகாரர் கைகளில் ஒப்படைத்து விட்டு

இப்படி நாடகமாடுவது கண்டிக்கத் தக்கது.

லண்டனில் இருக்கும் அரசியல்வாதிகள் ஏன் இது பற்றி பேசக் கூடாது.

கடந்த காலங்களில் லண்டன் புகையிரத குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒரு அப்பாவி போலீசாரால் கொல்லப்பட்டான்.

அந்த மக்கள் கேட்டார்கள்

போராடினார்கள்........................

போன உயிர் திரும்பாவிடினும்

ஏனையவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இதை இப்படியே தொடர விட்டால்

நாளை உங்களுக்கோ அல்லது உங்களது உறவினர் ஒருவருக்கோ கூட

இதே கதி நடக்கலாம்?

இலங்கை மற்றும் லண்டன் தமிழ் அரசியல்வாதிகளே

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

ஊடகங்களே இவர்களை பிடித்து என்ன சொல்கிறார்கள் என்று எழுதுங்கள்.

தமிழில் மட்டுமல்ல அந்த நாட்டு மொழிகளிலும் வர வேண்டும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் தற்கொலை

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தினுள் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விமான நிலை வருகை தருவோர் பகுதியிலிருக்கும் குடிவரவு, குடியகல்வு அலுவலக அறையொன்றுக்குள்ளேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகுந்திருந்த இவ்விளைஞன் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை கட்டுநாயக்கா விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.

அங்கு இவரை கைது செய்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு மேலதிக விசாரணைக்கென குற்றப்புலனாய்வு மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்ததுடன் இளைஞனை அறையொன்றில் பூட்டி வைத்திருந்தபோது இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுநாயக்கா விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் இவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி இருந்தபோது மிகவும் அச்சமடைந்திருந்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இளைஞர் குறித்து மேலதிக தகவல்கள் பற்றி எதுவும் கூற பொலிஸார் மறுத்து விட்டனர்.

இதேவேளை, விமான நிலைய வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலொன்றின் படி தற்கொலை செய்து கொண்ட இவ்விளைஞர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தபோது கடவுச்சீட்டு பிரச்சினையொன்று காரணமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவர

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதியது:

உண்மையில், அங்கே தூக்கிட்டுக் கொள்வதற்கு எவ்வாறு முடிந்தது. அதுவும் தடுப்பு அறையில் அவ்வாறன வசதி கிடைக்குமா என்ன? அடித்து துன்புறுத்தும் போது சில வேளை இறந்து இருக்கலாம்.

ஆனால் விபரமாகச் செய்தி போடப்படாத போது, சொல்ல முடியாது.

கவலைதான் ஆனாலும் பிரித்தானியா சிறைக்கூடங்களில் கூட கைதிகள் தற்கொலை செய்வதுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.