Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

30 கோடி நட்ட ஈட்டை வழங்கி சம்பூர் பிரச்சினையை தீர்க்க அரசு முயற்சி! இடம்பெயர்ந்தோர் ஏற்க மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை சட்ட பூர்வமானதாக்குவதற்கு அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. ஆகிரமிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு 30 கோடி ரூபாவை நட்டவீடாக வழங்குவதுதான் அரசின் திட்டம்.

இருந்த போதிலும் இடம்பெயர்ந்த மக்கள் இனை ஏற்க மறுத்திருப்பதால் அரசாங்கம் புதிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாக இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது.

2006 ஏப்ரலில் போர் ஆரம்பமானபோது இடம்பெயர்ந்த சுமார் 2,000 குடும்பங்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே இருந்துவருகின்றார்கள்.  கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்திருப்பதாக அரசாங்கம் சொல்லியிருக்கின்ற போதிலும் இந்த மக்களின் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு எதனையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.

இடம்பெயர்ந்த மக்கள் தமது மீள்குடியேற்றத்தை உறுதிசெய்யக் கோரி நிதிமன்றத்தை நாடியிருந்தார்கள். சம்பூரில் இந்தப் பிரச்சினை காரணமாக இடம்பெர்ந்தோர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் அரச வழக்கறிஞர் இடம்பெயர்ந்த மக்களுக்கு 30 கோடி ரூபாவை நட்டவீடாக வழங்க அரசாங்கம் தயாராகவிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அரசின் இந்தத் திட்டத்தின்படி, சம்பூரிலிருந்து இடம்பெர்ந்தோர் , தமது கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு பதிலாக மாற்று நிலங்களைப் பெற முடியும். அதை விரும்பாதோருக்கு நஷ்டஈட்டுத்தொகைத் தரப்படும் என்றார் அரச வழக்கறிஞர்.

ஆயினும் இவ்வாறு காணிகளை கையகப்படுத்துவது சட்டத்திற்கு மாறான ஒரு செயல் என மனித உரிமைகள் சம்பந்தமான வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க தெரிவித்தார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் காணி சட்ட விதிமுறைகளின்படி, தனிப்பட்ட நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

ஆயினும் இங்கு அவ்வாறான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை . எனவே எதிர் காலத்தில் காணிகளை கையகப்படுத்த வேண்டுமானால் பொதுவாக அமல்படுத்தப்படும் சட்ட விதிமுறைகளுக்கு அமைய அதனை அரசாங்கம் மேட்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க.

ஆயினும் அரச வழக்கறிஞரின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட நீதிபதி மொகான் பீரிஸ், மாற்று காணிகள் மற்றும் நஷ்ட ஈடுகள் பெற்றுக்கொள்ள விரும்பும் இடம் பெர்ந்தோர் சம்பந்தமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அரச தரப்பிற்கு உத்தரவிட்டார்.

பின்பு வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் 9ம் தேதி வரை ஒத்திவைத்த தலைமை நீதிபதி மொகான் பீரிஸ், அன்றைய தினம் இந்த தீர்வு திட்டம் சம்பந்தமாக மனுதாரகளின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106584/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.