Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோச்சடையான் கோடை மழையாக அமையுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சடையான் கோடை மழையாக அமையுமா?

அரவிந்தன்

 

02fd5650-82fe-4e81-b2da-88a51d5fb0d11.jp

அக்கினி நட்சத்திரம் தொடங்கிய தினத்தில் தமிழகத்தின் பலபகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. நெடுநாட்கள் நீரைக் காணாத நிலம் சற்றே தாகம் தீர்ந்துக் குளிர்ந்தது. கிட்டத்தட்ட இதே நிலையில் இருக்கும் தமிழ்த் திரையுலகம் கோச்சடையானின் வடிவிலொரு கோடைமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. வெற்றி என்பதும் வசூல் மழை என்பதும் கானல் நீராக மாறிவிட்ட தமிழ் சினிமாவின் இன்றைய நிலையில் அதன் உச்ச நட்சத்திரம் நடித்த படம் வெளிவருவது திரைத்துறையில் புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதோ வருகிறான், அதோ வருகிறான் என்று எதிர்பார்த்து பார்த்து 'ச்சே' என்று ஆன பின்பும்கூடத் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாராக கடந்த 40 ஆண்டுகளாகத் திரையைத் தன் ஆளுமையில் வைத்திருக்கும் ரஜினிகாந்தின் கோச்சடையான் மே 9இல் வெளியீடு என்கிற சேதி சினிமா ஆர்வம் கொண்டவர்களை குஷிப்படுத்தாமல் இல்லை. என்னதான் தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் ரஜினியையும் கோச்சடையான் வெளியீட்டையும் கொண்டாட வழக்கம் போல விழா எடுக்காமல் விடப்போவதில்லை அவருடைய ரசிகர்களும் திரையரங்கங்களும்.

புதிய தொழில்நுட்பம்

கோச்சடையான் நடிப்புப் பதிவாக்கம் (Performance Capture Photo Realistic Technology) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியத் திரைப்படம். இது ரஜினியின் சினிமா வரலாற்றில் முக்கிய அம்சமாக அமையும். அதோடு தமிழ் சினிமாவுக்கு இது பெருமை சேர்ப்பதாகவே அமையும். இது முழுநீள மன்னர் காலத்துக் கதை. முப்பரிமாண வடிவில் (3D) பார்க்கக் கூடிய படம். இது தவிர முதல் முறையாக ரஜினி நடிக்கும் படத்தில் நாயக அந்தஸ்து பெற்ற நடிகர்களான, சரத்குமார், ஆதி ஆகியோரும், சினேகா, ருக்மணி விஜயகுமார் உள்ளிட்ட இளம் கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். ரஜினியுடன் 80களிலும் 90களிலும் ஜோடி சேர்ந்த ஷோபனா மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகிறார். பாலிவுட் கனவுக்கன்னி தீபிகா படுகோன் இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃபும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

ரஜினியின் கோச்சடையான் அவதாரத்தை அவரது இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கு கதை, திரைக்கதை வசனம் அனைத்தும் கே.எஸ்.ரவிக்குமார். இசை ஏ.ஆர்.ரஹ்மான். எடிட்டிங் ஆன்டனி, ஒளிப்பதிவு ராஜிவ் மேனன் என, இதில் பங்காற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் முக்கியமானவர்கள். கோச்சடையான் பாடல்கள் வெளியாகி மக்களைக் குறிப்பிடத்தக்க வகையில் ஈர்த்திருக்கிறது. ஆனாலும் பெரும்பாலானவர்களைப் பாடல்கள் கவரவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் எப்போதுமே படம் வெளியாவதற்கு முன்பு அவ்வளவாக ஈர்ப்பதில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அது தரும் தாக்கம் முற்றிலும் மாறுபட்டதாக அமையும்.

இப்படி ஒரு வலிமையான புதுமையான அம்சங்களைக் கொண்டு வெளியாகப் போகும் கோச்சடையான் வெற்றி பெறுவானா?

வரலாறு திரும்புகிறது

தமிழில் கிளாசிக் படங்களின் காலம் மலையேறி, வெகுஜன படங்கள் தலைவிரித்தாடத் தொடங்கிய காலத்தில் ஜாம்பவானான ரஜினியும் பாதிக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். வருடந்தோறும் பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த பத்தாண்டுகளில் நடித்து வந்த ஒவ்வொரு படத்திற்கும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் இடைவெளி இருந்தது. கடந்த 13 ஆண்டுகளில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 6 மட்டுமே. அவற்றில் வெற்றி பெற்றவை சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் மூன்றுதான்.

2002இல் வெளியான பாபா தோல்வி கண்டதையடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்தில் அவர் பிரதான பாத்திரம் இல்லை. சொல்லப்போனால் அதில் திகில் நிறைந்த அதிக வலுவான பெண் பாத்திரத்துக்கு இடமிருந்தது. அந்தப் படம் மிகப் பெரிய வணிக வசூலைப் பெற்றது. அடுத்ததாக வந்த சிவாஜியில் வழக்கமான அம்சங்களுடன் சங்கரின் பிரம்மாண்டமும் சேர்ந்து வெற்றியடைந்தது. குசேலன் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு துணைப் பாத்திரமாக மட்டுமே அந்தப் படத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றிபெறவில்லை.

குசேலனுக்குப் பின் மீண்டும் சங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் ரஜினியின் திரை ஆளுமையை மேலும் வலுவாக்கியது. தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் கதையமைப்பும் ஹாலிவுட் தரம் கொண்டது என்று மார்தட்டிக் கொள்ளும் அளவுக்கு இருந்தது. ரஜினிக்குள் இருக்கும் வில்லாதி வில்லனை பல வருட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுக்குக் காட்டியதும் எந்திரன் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.

மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் கோச்சடையான் பரீட்சார்த்த முயற்சிதான். இதை ஏற்க ரஜினி மிகவும் தயங்கினார் என்பதே உண்மை. ஆனாலும் அவர் இதை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் 'ராணா' என்ற திரைப்படத்தில்தான் ரஜினி நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பட தொடக்கத்தின் போது ஏற்பட்ட உடல் நிலைக் கோளாறு சிங்கப்பூருக்குச் சென்று சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு தீவிரமடைந்தது. அப்போது ரஜினிக்கு அதிக ஓய்வு தேவைப்பட்டதால் ராணா போன்ற படத்தில் அவர் நடிப்பது உசிதமல்ல என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் அதே கதையை நடிப்புப் பதிவாக்கம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. பிறகு கதையை அதற்கேற்ப மாற்றம் செய்து இயக்கவும் தயாரானார்கள்.

என்னதான் மக்கள் ரசனை மாறிவிட்டாலும் கூட, இன்றும் ரஜினியை ரசிக்கவே செய்கிறார்கள். என்றாலும், புதிய தலைமுறைகளின் ரசனையும் சினிமாவின் வணிக நிலையும் பெற்ற மாற்றங்களுக்கு ஏற்பத் தன் பெயரைத் தக்கவைத்துக்கொள்ள ஏதுவான படங்கள் ரஜினிக்குக் கிடைக்கவில்லை. அவர் நினைத்தால் வருடத்திற்கு மூன்று படம் இப்போதும் நடிக்கலாம். மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடத்தான் போகிறார்கள். ஆனால் அப்படியான எண்ணம் ரஜினிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் மாபெரும் எதிர்பார்ப்ப்பு என்னும் சுமை. இனியும் சர்வசாதாரணமாக வீரா, மன்னன் போன்ற எளிய பொழுதுபோக்குப் படங்களில் நடித்துவிட்டுப் போக முடியாது. அவ்வகைப் படங்களின் உச்சத்தை பாட்ஷா, படையப்பா போன்ற படங்கள் தொட்டுவிட்டன. இனி எதைச் செய்தாலும் அதில் விசேஷமாக ஏதேனும் இருக்க வேண்டும் என்னும் நிலை ரஜினிக்கு உருவாகிவிட்டது. அப்படிப்பட்ட படங்களை ஷங்கர் போன்ற வெகு சில இயக்குநர்களே இப்போதைய காலகட்டத்தில் தர முடிகிறது என்பதும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இப்போது வெளியாகப் போகும் கோச்சடையானைத் தொடர்ந்து உடனடியாக ரஜினி, கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் லிங்கா எனும் அடுத்த படத்தின் படபடிப்பு தொடங்க இருக்கிறது. ரஜினியைப் பல பரிமாணங்களில் நாற்பது வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தாலும்கூட அவருடைய புதிய அவதாரமான கோச்சடையானையும் அதே ஆவலோடும் ஆசையோடும் வரவேற்க காத்திருக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரும் தன்னை காலத்திற்கேற்ப தகவமைத்துக்கொண்டே வருகிறார். லிங்கா என்ன புதுமையைக் கொண்டு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதற்குள்ளாகவே ரசிகர்கள் மனதில் நிறைந்து கிடக்கிறது.

இப்போதெல்லாம் வெளியாகும் படங்கள் மூன்று நாட்களுக்கு மட்டுமே திரையரங்கங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. சில படங்கள் ஐம்பது நூறு நாள் ஓடியது என்றும் வசூல் சாதனை என்றும் போஸ்டர்களும் விளம்பரங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் உண்மையில் இப்போதைய பெரும்பாலான படங்கள் வெளியாகிய ஆறாம் நாளே திரையரங்கங்களில் ஈ ஆடுகிறது. எந்தப் படத்திற்கும் குறிப்பிடத்தக்க வெற்றியோ நூறு நாட்களைத் தாண்டியும் அரங்கங்கள் நிறைந்த கூட்டமோ இருப்பதில்லை. இந்நிலையில் வெளியாகும் கோச்சடையான் இந்த நிலையை மாற்றுமா என்பதுதான் சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் ஒரு ஜாம்பவானின் படம் எந்தத் திரையுலகுக்கும் எந்தக் காலத்திலும் அவசியமான ஒன்று. வாரத்திற்கு ஒரு படத்தை வாங்கி ஓட்டும் திரையரங்க உரிமையாளர்கள் போட்ட பணத்தை எடுக்கிறார்களா லாபம் கிடைக்கிறதா என்பது சந்தேகம்தான். அப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் படம் வெளியாகி வரலாறு காணாத நீண்ட நாட்கள் வெற்றிகரமாக ஓடுமானால் அதைவிட என்ன சந்தோஷம் இருந்துவிடப் போகிறது அவர்களுக்கு. எனவே கோடையில் வெளியாகும் கோச்சடையான் வெயிலில் தகிக்கும் மக்களுக்கும் சினிமாவை நம்பி இருப்பவர்களும் குளு குளுவென்றே இருக்கும். சும்மாவே ஒன்றும் புரியாமல் ரஜினியை குழந்தைகள் ரசிப்பார்கள், அனிமேஷன் என்றால் விடுவார்களா? அவர்களுக்கும் இது விருந்தாகவே அமையப் போகிறது.

உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் துணிச்சலான முயற்சியில் இறங்கியிருக்கும் ரஜினியின் இந்தப் படம் வெற்றி அடைந்தால் அது தமிழ்த் திரையுலகுக்குப் புத்துயிர் அளிக்கும். தொடர்ந்து இத்தகைய தொழில்நுட்பத்தில் மேலும் பல படங்கள் வெளிவர வழிவகுக்கும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க்கும்போது கோச்சடையானின் வரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=02fd5650-82fe-4e81-b2da-88a51d5fb0d1

இவங்க கொடுக்கிற பில்டப் தாங்க முடியல !!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பி.பி.சி இல் கூட கோச்சடையான் பற்றி செய்தி வந்திருந்தது. தனது படத்தின் வசூலினை அதிகரிக்கும் நோக்கில் டுவிட்டர் இணையத்தளத்திலும் ரஜினி எழுதத் தொடங்கியிருப்பதாகவும், அவரின் ஒரு கருத்திற்கே 250,000 பேர் சில நிமிடங்களில் பதில் எழுதியிருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், உண்மையிலேயே, ரஜினியினால் அமர்த்தப்பட்ட விளம்பர நிறுவனம் ஒன்றே ரஜினி பெயரில் டுவிட்டரில் எழுதிவருவதாகவும், இது ரசிகர்களை ஏமாற்றும் கைங்கரியம் என்பதோடு மட்டுமல்லாமல், தனது படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகரித்து வசூலினைக் குவிக்கும் உத்தியே என்றும் விமர்சகர்க்ள் தெரிவித்துள்ளனர்.

 

இதில் சொல்லவேண்டிய முக்கிய விடயம் ஒன்றிருக்கிறது. அதாவது அண்மையில் ரஜின் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது நினைவிலிருக்கலாம். சிகிச்சை முடிந்தபிறகு குறைந்தது 18 மாதங்காளாவது ஓய்வு எடுக்கப்படவேண்டும் என்று அவரது வைத்தியர்களால் அறிவுருத்தப்பட்டாராம் ரஜினி. அப்படியிருக்க, கோச்சடையான் பற்றிக் கதைவே, ஓய்வையும் பொருட்படுத்தாமல் நடிக்க ஒத்துக்கொண்டாராம் ரஜினி. பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் இந்த சரித்திரப் படத்தின் படப்பிடிப்பில் வெறும் 6 மணித்தியாலங்களே வந்தால் போதும், மீதியை கிராபிக்ஸ் தொழிநுட்பத்தின் மூலம் நிரப்பி விடலாம் என்று  கோச்சடையான் படத்தின் கிராபிக்ஸ் பொறுப்பாளராகிய அவரது மகள் கூறியதால் அவரும் ஒத்துக்கொண்டுவிட்டார்.

 

ஆகக், கோடிக்கணக்கில் ரசிகர்களின் பணத்தை அள்ளக் காத்திருக்கும் கோச்சடையான் படத்தில் ரஜனியின் நடிப்பு வெறும் 6 மணித்தியாலங்கள் மட்டுமே !!!!!


http://www.bbc.com/news/blogs-trending-27296578

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.