Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரை ராகுல் அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபசார விருந்தில் விருந்தில் ராகுல் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து, அவரை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. மேலும் ஒருவேளை காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைத்தாலும், மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் ஆகப்போவதில்லை. அவர் வருகிற 17 ஆம் தேதியுடன் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனால் மன்மோகன் சிங் நேற்று தமது அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் நன்றி கூறி விடைபெற்றார். அதற்கு முன்னதாகவே பிரதமர் இல்லத்தை காலி செய்துவிட்டு, அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள புதிய வீட்டில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளையும் அவர் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் விடைபெறுவதையொட்டி, அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாmanmohansing%28161%29.jpg காந்தி தனது இல்லத்தில் நேற்று பிரிவு உபசார விருந்து அளித்தார். விருந்துக்கு வந்த மன்மோகன்சிங்குக்கும், அவருடைய மனைவி குர்சரண் கவுருக்கும் மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பூங்கொத்து அளித்தனர்.

மேலும் அவர்கள் கையெழுத்திட்ட நினைவுப்பரிசும் பிரதமருக்கு வழங்கப்பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த பாராட்டு பத்திரத்தை மத்திய அமைச்சர் பல்லம் ராஜு வாசித்தார். மத்திய அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் மன்மோகன்சிங்குடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்ட பிரிவு உபசார விருந்து நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றாலும், இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் இதுகுறித்து அவர்கள் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

ஆனால் பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதனை விமர்சித்துள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த அபிமன்யூ சிங், " மன்மோகன் சிங்கை காங்கிரஸ் கட்சி எப்படி நடத்தியது என்பதை இந்த நாடே அறியும். பத்தாண்டு காலம் பதவியிலிருந்த பிரதமர், தனது பதவியிலிருந்து விடைபெறும்போது அவர் பிரிவு உபசாரம் அளிக்க தகுதியானவரே. அந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டிருக்க வேண்டும்" என்றார்.

சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், "10 ஆண்டுகளாக நீங்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறீர்கள். உங்களது பிரதமர் ஆண்டிருக்கிறார். இந்த பிரிவு உபசார விருந்தில் நேரம் ஒதுக்கி நீங்கள் பங்கேற்கவில்லை என்றால், இந்த தேசத்திற்காக நீங்கள் எவ்வாறு நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?" என்றார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், "ராகுல் காந்தி பிரதமரை அவமதித்துவிட்டார். இந்த நாட்டைவிட தான் உயர்ந்தவர் என்று ராகுல் எண்ணிவிட்டார். அதனால்தான் அவர் அதில் பங்கேற்கவில்லை" என்றார்.

இதனிடையே ராகுலுக்கு எதிரான இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்யவராத் சதுர்வேதி, "ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னரே அவரை சந்தித்துப் பேசிவிட்டார். எனவே அவரை ராகுல் அவமதித்துவிட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறியுள்ளனர்.

 

இது புதிதல்ல

 

பிரதமரை ராகுல் அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு புதிதானதல்ல. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம்,  குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்றும், அதனை கிழித்து குப்பையில் வீச வேண்டும் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தது காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மன்மோகன் சிங்கும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

எதிர்க்கட்சிகளோ, பிரதமருக்கு சிறிதேனும் சுயமரியாதை இருந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினர்.

பின்னர் ஒருவழியாக சோனியா தலையிட்டு மன்மோகன் சிங்கை சமாதானப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக ராகுலும் அப்போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=27954

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலுக்கும், மன்மோகன் சிங்கிற்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த விடயம் என்றாலும்,
காங்கிரஸ் கட்சியின் உப தலைவரும், பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்தவருமான ராகுல் நிச்சயம் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
இதிலிருந்தே.... ராகுல் ஒரு கிறுக்குப் பயல் என்று தெரிகின்றது.

 

இனிமேலும்... உப்புச் சப்பில்லாத‌ குடும்ப பரம்பரை ஆட்சிகளுக்கு, புதிய தலைமுறையைச் சேர்ந்த வாக்காளர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.

 

வரும் தேர்தல் முடிவுடன்... இவர்கள், இத்தாலிக்கு விமானம் எடுப்பதே, இந்தியாவுக்கு நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.