Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்ச்சகராகும் முதல் இந்தியப் பெண்

Featured Replies

women%20archakar%20699.jpg

 

அர்ச்சகராகும் முதல் இந்தியப் பெண்

 

மகாராஷ்ட்ரா மாநிலம் பந்தர்பூரில் உள்ள வித்தோபா ருக்மினி கோவிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்க கோவில் நிர்வாகம் பெண்கள் மற்றும் பிராமணரல்லாதோரை நேர்காணல் செய்திருக்கிறது. இதன்மூலம் 900 ஆண்டுகளாக தொடரும் இந்திய சாதியத்திற்கு எதிராகவும், ஆண் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகராகவும் இருந்து வந்த நடைமுறைக்கும் கோவில் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க முன்வந்திருக்கிறது. இதற்காக கோவில் நிர்வாகம் பெண்கள் மற்றும் பிராமணர் அல்லாதோர் பலரையும் ஏற்கனவே நேர்காணல் செய்துவிட்டது. ருக்மினி கோவிலில் அர்ச்சகராகப் பொறுப்பேற்கவிருக்கும் பதினாறு பெண்களில் ஒருவரான ஊர்மிளா பாட்டே முதல் 15 நாட்களுக்கு அர்ச்சகராக பணியாற்ற இருப்பதன் மூலம், அர்ச்சகராகும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெருகிறார். வித்தோபா ருக்மினி கோவில் அறக்கட்டளை மகாராஷ்ட்ரா அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டு வருகிறது. இக்கோவில் அறக்கட்டளை மிகவும் புரட்சிகரமான முறையில் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. "முதன்முறையாக கோவிலின் கதவுகள் அனைத்துத் தரப்பினருக்கும் திறந்துவிடப்பட இருக்கிறது. நாட்டில் ஒரு முன்னுதாரணமாக இருந்திட இதுவே சரியான தருணம் என்று நாங்கள் நினைத்தோம். கோவிலில் அர்ச்சகராகப் பணி செய்திட எந்தவொரு குழுவும் ஆதிக்க உரிமை கொண்டாடக்கூடாது" என்று அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். "ஒவ்வோராண்டும் லட்சக்கணக்கான மக்கள் இங்கே குவிகிறார்கள். வித்தோபா கடவுளையும் அவரது மனைவியான ருக்மினி தேவியையும் உள்ளூர் மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள். கடவுள் மக்களுக்கிடையே பாகுபாடு காட்டவில்லை. நாமும் அதனைப் பின்பற்ற வேண்டிய தருணம் இது." சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான முதற் கட்டமாக, பெண்கள் ருக்மினி தேவிக்கு ஆரத்தி எடுப்பதற்கான பூசையை மேற்கொள்வதற்காக நேர்காணல் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று வித்தோபாவிற்கு பூசை செய்ய ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் வர்க்காரி என்னும் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இக்கோவில் மிகவும் பிரியமான ஒன்று. ஒவ்வோராண்டும் இரண்டு கோடிக்கும் மேலான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவார்கள். ஆசாத் என்னும் இந்து மாதத்தில் லட்சக்கணக்கான வர்க்காரி இனத்தவர்கள் இக்கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் நடந்தே வருவார்கள். இக்கோவிலில் பூசை செய்யும் பணிகள் பந்தர்பூரில் உள்ள பார்வே-உத்பாத் குடும்பங்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. இவர்கள் பாரம்பரியமாக இதனைச் செய்து வந்தார்கள். இவ்விரு குடும்பத்தினரும் ஒவ்வொரு நாளும் பூசைக்கான வேலையை ஏலத்தில் விடுவார்கள். வித்தோபாவிற்கான ஏலம் 20 ஆயிரம் ரூபாயில் ஆரம்பிக்கும் அதே சமயத்தில், ருக்மினி தேவிக்கான ஏலம் 7 ஆயிரம் ரூபாயில் தொடங்கும். ஏலத்தொகையை மேற்படி குடும்பத்தார் அறக்கட்டளையிடம் ஒப்படைத்து விடுவார்கள். ஆனால் கோவிலுக்கு வரும் நன்கொடைகளை அவர்களே வைத்துக்கொள்வார்கள். உச்சநீதிமன்றம் ஜனவரியில் இக்கோவில் தொடர்பாக ஒரு தீர்ப்பினை அளித்தது. அதன்படி கோவில் நிர்வாகத்தில் மேற்படி குடும்பத்தாருக்கு இருந்த உரிமைகளைப் பறித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து வித்தோபா ருக்மினி கோவில் அறக்கட்டளை அர்ச்சகர் பணிக்காக விண்ணப்பங்களைக் கோரியது. அதன்கீழ் 199 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 23 பேர் பெண்கள். பின்னர் நேர்காணல் நடைபெற்றபோது 16 பெண்கள் உட்பட 129 பேர் பங்கேற்றனர். மேற்படி அர்ச்சகர் பணிக்கு தலித்துகள் மற்றும் மராத்தா இனத்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர். அறக்கட்டளை தன் முடிவை வரும் ஜூன் 9 அன்று வெளியிட இருக்கிறது. “நாங்கள் கோரியுள்ள ஒரே தகுதி, கோவிலின் சடங்குகள், ஆரத்தி மற்றும் பூசைகளை செய்யத் தெரியுமா என்பதும், தெய்வங்களுக்கு உடைகளை அணியத் தெரியுமா என்பதே,’’ என்று அறக்கட்டளையின் சார்பில் தெரிவித்தார்கள்.

 

malarum.com

தேனீ வளர்ப்பின் பின் மனிதரை பற்றி நிறைய அறிந்தேன்.

ஆண்கள் மதத்தை கண்டுபிடித்து தமது ஆட்சிக்குள் ஏன் வைத்திருக்கிறார்கள் என்றும் அறிந்தேன் .

யாழுக்காக விளக்க கட்டுரை எழுத திட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கட்டப்போகும் கோயிலுக்கு அய்யர் அம்மாவையே பூசாரியாக நியமிக்க இருக்கின்றேன்.உண்டியல் அந்தமாதிரி நிரம்பும் :icon_mrgreen: ... பங்குதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர். :wub:
 
நிழலி,லண்டன் நந்தன்,சிறித்தம்பி ஆகியோர் பங்குதாரர்களாவதிற்கு  நொத்தாரிசு விசுகுவினால் தடைசெய்யப்பட்டுள்ளனர். :D  :lol:
 
blueprint.jpg
 
யாழ்கள எஞ்ஜினியர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட கோபுரத்தின் மாதிரி வடிவம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.