Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கையும் தமிழ் மக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய இந்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான கொள்கையும் தமிழ் மக்களும்

முத்துக்குமார்

இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் சார்க் நாடுகளின் தலைவர்களை மட்டும் அழைத்து பதவி ஏற்பு வைபவத்தை மோடி நடாத்தியிருக்கின்றார். அதில் சர்ச்சைக்குரிய தலைவர்களான இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினையும், பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் செரீப்பினையும் அழைத்திருக்கின்றனர். அவர்களும் எவ்வித மறுப்புமின்றி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தலைவர்களை அழைப்பது தொடர்பாக உள்நாட்டில் கூட்டணிக் கட்சிகளிடமிருந்துகூட எதிர்ப்புக்கள் வந்தன. மகிந்தரை அழைப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் உட்பட ஏனைய தமிழ்நாட்டுக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. பல தமிழ் அமைப்புக்கள் தமிழ்நாடு, கர்நாடகம், டெல்லி என்பவற்றில் போராட்டங்களையும் நடாத்தியுள்ளன. மோடியின் நண்பரான வைகோ டெல்லியில் போராட்டம் நடாத்தி கைதும் செய்யப்பட்டிருக்கின்றார். இத்தனை எதிர்ப்புக்கள் வந்தபோதும் மகிந்தரை அழைப்பதை மோடி கைவிடவில்லை.

இதே போல நவாஸ் செரீப்பினை அழைப்பதற்கு பாரதீய ஜனதாக் கட்சியின் தந்தையான RSS இயக்கமும், மகாராஷ்டிராவில் செல்வாக்கு பெற்றுள்ள சிவசேனா கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன. RSS இயக்கம் சற்று அடக்கி வாசித்தாலும் சிவசேனா சற்றுக் கடுமையாக உள்ளது. மோடிக்கு முன்னால் பதவி ஏற்பதையும் தவிர்க்க முனைகின்றது.

இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மோடி இவர்களை அழைத்திருக்கின்றார் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

அதில் முதலாவது இந்தியாவை ஒரு வல்லரசாக கட்டி எழுப்புவது. அயல்நாடுகளுடன் ஒரு அதிகாரத்துடன் கூடிய சுமூக உறவுகள் இல்லாமல் அதனை கட்டி எழுப்ப முடியாது. மன்னராட்சிக் காலங்களில் பலம்வாய்ந்த மன்னர்கள் தமது முடிசூட்டு விழாக்களுக்கு தனக்கு கீழ் இருக்கும் குறுநில மன்னர்களை அழைப்பதுண்டு. தனது அதிகாரத்தை வெளிக்காட்டுவதற்கே இவ்வாறு அழைப்பதுண்டு. மோடியும் அந்த நோக்கிலும் அழைத்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.

இரண்டாவது, ஜனாதிபதி மகிந்தருக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்பியிருக்கலாம். இவ்வளவு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் உனக்கு நான் கௌரவம் கொடுத்திருக்கின்றேன். நீ எனக்கு பணிந்து நட என்பதே அந்தச் செய்தியாக இருக்கும். தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்புக்கள் வரும் என மோடிக்கு முன்கூட்டியே தெரியும். ஆனாலும் மகிந்தரை அழைத்தமை மகிந்தர் இந்த எதிர்ப்புக்களை தரிசிக்கட்டும் என்பதுதான்.

இலங்கை விடயத்தில் சிறிது காலம் மோடி காங்கிரசின் அணுகுமுறையைத்தான் பின்பற்றுவார். அதற்கான சமிஞ்ஞைகள் ஏற்கனவே காட்டப்பட்டுள்ளன. இலங்கை அதற்கு ஒத்துழைக்காவிட்டால் இறுக்கமான அணுகுமுறையினைப் பின்பற்றுவது பற்றி அவர் யோசிக்கலாம்.

இலங்கை விடயத்தில் ஏனைய நாடுகள் தலையிடுவதை மோடியோ, பாரதீய ஜனதாக் கட்சியினரோ விரும்புவதில்லை. இதனால் இலங்கை அரசு, இந்திய அரசு, தமிழர் தரப்பு மட்டும் இணைந்த ஒரு வேலைத்திட்டத்தினை நகர்த்துவதற்கு அவர் முயற்சிக்கலாம். தற்போதைக்கு அது 13வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவதாகவே இருக்கும்.

இவரது உண்மையான சொரூபத்தை தரிசிக்க ஒரு வருடமாவது செல்ல வேண்டும். இந்தியா கொடுக்கும் கால அவகாசம் தமிழ் மக்களைப் பாதிக்காதா? என்ற கேள்வி இன்று பலரிடமும் எழுந்துள்ளது. இக் கால அவகாசம் நிச்சயம் தமிழ் மக்களை பாதிக்கவே செய்யும். இலங்கை அரசாங்கம் அஞ்சுவது ஜெனீவாவிற்கும் இந்தியாவிற்கும் தான். ஜெனிவா பயம் தற்போது நின்றுவிட்டது. அங்கு அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தில் இனப்பிரச்சனை என்றோ, தமிழர் என்றோ ஒரு வார்த்தைகூட இருக்கவில்லை. அதனால் எந்தவித பயமும் இல்லாமல் தனது பேரினவாத வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இவ் வேலைத்திட்டத்தின் நோக்கம் தமிழர் ஒரு தேசமாக இருப்பதை அழிப்பது தான். ஒரு தேசத்தை நிலம், பொருளாதாரம், மொழி, கலாச்சாரம் என்பவைதான் தாங்கிக் கொண்டிருக்கின்றன. அவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. கிழக்கு தற்போது தமிழர் கையில் இல்லை. வடக்கும் அதை நோக்கி நகர்கின்றது. வடக்கில், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன.

ஜெனிவா பயமில்லாத நிலையில், அரசாங்கம் மிகவும் அஞ்சியது இந்தியாவின் புதிய அரசாங்கம் தொடர்பாகத்தான். அவ் அரசாங்கம் ஜெயலலிதாவின் ஆதரவுடன் அமைக்கப்படும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு தனித்து பெரும்பான்மை ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்றே இலங்கை அரசாங்கம் கருதியது. இதற்கு மாறாக ஜெயலலிதாவின் ஆதரவு இல்லாமல் பாரதீய ஜனதா கட்சி தனித்து அரசாங்கம் அமைக்கும் நிலை வந்தபோது பாரதீய ஜனதா கட்சியை விட இலங்கை அரசாங்கம் தான் மிகுந்த சந்தோசமடைந்தது. ஒரு தத்து கழிந்தது என்றே அது நினைத்தது.

பதவி ஏற்பு விழாவிற்கு மகிந்தரை அழைத்தபோது ஒரு குறிப்பிட்ட காலம் பழைய அரசாங்கத்தின் அணுகுமுறையைத்தான் இந்தியா பின்பற்றப் போகின்றது என நினைத்து சந்தோசமடைந்தது. அதுவும் தனது நண்பரான சுஸ்மா சுவராஜ் வெளிநாட்டமைச்சராக நியமிக்கப்பட்ட அந்த சந்தோசம் இரட்டிப்பாகியது.

இலங்கை தொடர்பாக இந்தியாவிற்கு உள்ள பிடி இலங்கை இந்திய ஒப்பந்தம் தான். அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பாதகமான வெளியார் தலையீடுகளை இலங்கையில் இல்லாமல் செய்கின்றது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை முனையுமாயின் தமிழர் விவகாரத்தை ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தத்ததுடன் முடக்குவதற்கு இந்தியா தயாராகவே இருக்கின்றது. சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வருகின்ற அழுத்தங்களைக் கூட தனது செல்வாக்கினைப் பாவித்து அதனை நிறுத்திவிடும்.

தமிழ்த் தரப்பிற்கு ஏற்படப் போகும் பாதிப்பினைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என இன்னொரு கேள்வியும் இங்கு எழுகிறது. தற்காப்பிற்கான வேலைத்திட்டத்தினை நகர்த்துவதுதான் தமிழ்த் தரப்பு உடனடியாக செய்யவேண்டிய பணியாக இருக்கும். அரசியல் தீர்வு பற்றி பின்னர் யோசிக்கலாம். தற்போது அரசாங்கம் மேற்கொள்ளும் பச்சை ஆக்கிரமிப்புக்களை எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதில்தான் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

நிலம், புலம், தமிழகம் ஆகிய மூன்றும் இணைந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மூலம் இவ் விடயத்தில் முன்நோக்கி நகரமுடியும். இங்கு இருக்கின்ற அரசியல் சக்திகள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை ஒரு புறம் தள்ளிவிட்டு பச்சை ஆக்கிரமிப்புக்களை  நிறுத்துதல் என்கின்ற ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களின் இருப்பு அழிக்கப்படுவதை தடுப்பதற்கு இது மிக மிக அவசியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தேசம் இருந்தால் தான் எம்மால் அரசியல் செய்யமுடியும்.

இது விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் கவனத்தை குவிக்க தமிழ்நாட்டினால்தான் முடியும். ஜெனிவா-2 எழுச்சி போல தமிழ்நாட்டில் எழுச்சி ஏற்பட வேண்டும். இதே போல மேற்குலகத்தின் கவனத்தினைக் குவிக்க புலத்தினால்தான் முடியும். இவையிரண்டும் எழுச்சி பெற வேண்டுமானால் தாயகத்திலும் அதற்கான முயற்சிகள் நடைபெற வேண்டும். தாயகத்தில் இவற்றை முன்னிறுத்தி சிறியளவிலாவது போராட்டங்களை முன்னெடுத்தால்தான் அதனை அடிப்படையாக வைத்து புலத்திலும், தமிழகத்திலும் எழுச்சி ஏற்படும்.

தாயகத்தில் சம்பந்தன் தலைமை போராட்டங்கள் நடைபெறுவதை  விரும்பப்போவதில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழணியினர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், யாழ் பல்கலைக்கழக சமூகத்தவர்கள், சிவில் சமூகத்தவர்கள் இணைந்து இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது பற்றியோ யோசிப்பது நல்லது.

ஏற்கனவே பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் போராட்டங்களில் இணைந்து கொள்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சிப் போராட்டத்திலும் இவ் இணைவு ஏற்பட்டிருக்கின்றது. தேர்தல் அரசியல் இதற்கு தடையாக அமையலாம். தற்போதைக்கு கொஞ்சக்காலம் தேர்தல் அரசியலை தள்ளி வைப்பது நல்லது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=a69e78dd-35f9-4829-85da-2c3f7dafaebd

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஏற்புக்கு அழைப்பு விடுத்த கையோடு இந்தக் கட்டுரை வரையப்பட்டிருந்தால் பரவாயில்லாமல் இருந்திருக்கும். மோடி இதைத்தான் செய்ய முனைகிறார் என்று கட்டுரையாளர் அப்போதே சொல்லியிருந்தாரானால் அது அவரது எழுத்துக்கு வலு சேர்த்திருக்கும். ஆனால் விடயங்கள் நடந்து முடிந்த பின்னர் அவற்றை வைத்து அனுமானங்களாக எழுதுவது எதுக்கு? அதை நாங்களே செய்து விடுவோமே. :o:D

தமிழார் மீதான உளவியல் போர் இப்போது உச்சத்திற்கு சென்று உள்ளது, இதில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,எமது வெற்றி அண்மையில் தான் உள்ளது, எமக்கு சாதகமான் காரணிகளை கண்டறிந்து எமது வெற்றியை பெறும் தருணம் இது.தமிழனுக்கு ஈழம் போய் ஒரு சாதாரண்ச் தீர்வு கூட கிடையாது என்ற போக்கிலேயே அண்மைக்காலமாக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன, அதற்குக் காரணம் அரசியல் நிலைமை எமக்கு சாதகமாக மாறியுள்ளமையே, அதனால் தான் எமது விடுதளிக்கு எதிரானவர்கள் இப்படியான கட்டுரைகளை இணைக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழார் மீதான உளவியல் போர் இப்போது உச்சத்திற்கு சென்று உள்ளது, இதில் இருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,எமது வெற்றி அண்மையில் தான் உள்ளது, எமக்கு சாதகமான் காரணிகளை கண்டறிந்து எமது வெற்றியை பெறும் தருணம் இது.தமிழனுக்கு ஈழம் போய் ஒரு சாதாரண்ச் தீர்வு கூட கிடையாது என்ற போக்கிலேயே அண்மைக்காலமாக கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன, அதற்குக் காரணம் அரசியல் நிலைமை எமக்கு சாதகமாக மாறியுள்ளமையே, அதனால் தான் எமது விடுதளிக்கு எதிரானவர்கள் இப்படியான கட்டுரைகளை இணைக்கிறார்கள்.

Dash இப்படியான கட்டுரைகள் எப்படி விடுதலைக்கு எதிராகும் என்பனவற்றை கட்டுரையில் உள்ள விடயங்களை மறுதலித்து ஏற்றால் ஏற்றுக்கொள்ள முடியும். அதை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடிக்காததை இணைப்பதற்கு அவதூறாக எழுதவேண்டாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.