Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03-union-minister-gopinath-munde-critica

 

சாலை விபத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்!!

 

டெல்லி: சாலை விபத்தில் சிக்கிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோபிநாத் முண்டே, மத்திய ஊரக

வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். டெல்லி விமான நிலையம் அருகே இன்று காலை அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

 

இதில் படுகாயமடைந்த கோபிநாத் முண்டே மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

 

அப்போது திடீரென கோபிநாத் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்க போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபிநாத் முண்டே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப்படுத்தினார்.

 

கோபிநாத் முண்டே உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை அடக்கப்படும் என்று மத்திய அமைச்சரான நிதின் கட்காரி கூறியுள்ளார்.

-தற்ஸ் தமிழ்-

  • கருத்துக்கள உறவுகள்

சபிக்கப்பட்ட குடும்பம் எதிர்கால பா ஜ க தலைவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நல்ல ஆளுமைமிக்க இளமை துடிப்புள்ள யாருடைய மைத்துனர் பிரமோத் மகாஜன் அவருடைய சொந்த சகோதரத்தாலையே சுடப்பட்டு மாரடைப்பு வந்து காலமானார் இப்போ இவரும் மகராஷ்ஷ்டிய மாநிலத்தின் மிகச்சிறந்த தலைவர் எனக்கு என்னமோ இதெல்லாம் சதியா தான் தோணுது....

  • கருத்துக்கள உறவுகள்

முண்டே குடும்பத்தினரும், '3' ஆம் எண் துரதிருஷ்டமும்!

 

டெல்லியில் சாலை விபத்தில் மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மற்றும் அவரது மைத்துனர் பிரமோத் மகாஜன் குடும்பத்தினரை '3' ஆம் எண் துரதிருஷ்டம் விடாமல் துரத்தியது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

மகாராஷ்ட்ரா பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் அடையாளமாக வலம் வந்த கோபிநாத் முண்டே, எளிய குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் மேலே வந்தவர். அவரது மறைவு பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது. தற்போது மோடி அரசில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக முண்டே பதவி வகித்திருந்தபோதிலும், இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்தார்.

மகாராஷ்ட்ரா பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த முண்டேவுக்கு ஏராளமான தொண்டர்கள் பலம் உண்டு. மோடி அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்றதும், அந்த அமைச்சகத்தை சீர்படுத்தவும், நவீனப்படுத்துவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மராத்வாடா பிராந்தியத்தின் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்தவாரம் அமைச்சராக பதவியேற்ற நிலையில், தமது தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், வெற்றிவிழாவில் பங்கேற்பதற்காகவும் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு செல்ல டெல்லி விமான நிலையம் சென்றபோதே விபத்தில் சிக்கி மரணத்தை தழுவியுள்ளார் முண்டே.

முண்டே இன்று மரணமடைந்த தினம் 3 ஆம் தேதி. முண்டே குடும்பத்தினரை பொறுத்தவரை அக்குடும்ப உறுப்பினர்களுக்கும் , ' 3' ஆம் தேதிக்கும் ராசி இல்லாத துரதிருஷ்ட நாளாகவே அமைந்துவருவதாக முண்டே குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

முந்தைய வாஜ்பாய் அரசில் தொலை தொடர்புதுறை அமைச்சராக செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவரும்,pramod%20mahajan.jpg பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த பிரமோத் மகாஜன்தான், முண்டேவை அரசியலுக்கு கொண்டுவந்தார். பின்னர் தனது சகோதரியையே முண்டேவுக்கு மணமுடித்து வைத்தார் மகாஜன்.

ஆரம்பத்தில் ஜனசங்கத்தில் தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய முண்டேவை, 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சராக கொண்டுவந்து அழகுபார்த்த பிரமோத் மகாஜன், தனது மூத்த சகோதரர் பிரவீன் மகாஜனால் சுடப்பட்டு, மும்பை இந்துஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 2006 மே 3 ஆம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

அதன்பின்னர் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல்,  அளவுக்கு அதிகமாக போதைமருந்து உட்கொண்டதால் மரணமடைந்து சடலமாக கிடந்தது கண்டெடுக்கப்பட்ட தினம்  2006 ஜூன் 3 .

 மூன்றாவதாக '3' ஆம் எண் துரதிருஷ்டம் துரத்தியதில் உயிரிழந்தவர் பிரவீன் மகாஜன். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, தானே ஜூபிடர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரவீன், சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தது 2010 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி.

தற்போது கோபிநாத் முண்டேவும் அந்த '3' ஆம் எண் துரதிருஷ்டத்திற்கு பலியாகி விட்டதாக சோகம் மேலிட கூறுகின்றனர் முண்டே குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள்.

- மேகன்
  

http://news.vikatan.com/article.php?module=news&aid=28601

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.