Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

78 இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு

Featured Replies

140609131957_indian_fishermen_arrested_i

தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலர்

இந்திய நாடாளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்.

இந்திய அரசாங்கத்தினால் 13 இலங்கை மீனவர்கள் திங்களன்று விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், இந்திய பாதுகாப்பில் உள்ள ஏனைய இலங்கை மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பிலும் கைதுசெய்யப்பட்ட 82 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்த மீனவர்களை விடுதலை செய்வது பற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ட்விட்டர் மூலமான அறிவித்தல் வெளியாகியிருக்கிறது.

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தபோது, நெடுந்தீவு கடற்பரப்பில் 32 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவித்திருந்தன.

எனினும் ஞாயிறன்று மாலை அவர்கள் அனைவரும் கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டதும், 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் 46 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும். ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

நெடுந்தீவில் கைது செய்யப்பட்டவர்களை வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிபதியும், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டவர்களை வரும் 16 ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு மன்னார் நீதிபதியும் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

bbc tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் 83 இந்திய மீனவர்கள் கைது

 

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததான குற்றச்சாட்டில் 83 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் இவர்கள் சனிக்கிழமை இரவும், ஞாயிறு அதிகாலையும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரும், மீன்வளத்துறையினரும் கூறுகிறார்.

தொடர்புடைய விடயங்கள்

இவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

140320132032_indian_fishermen_arrested_3

'ஒரு படகு மூழ்கியது, ஒன்று பழுதாகியது'

நெடுந்தீவு கடறபரப்பில், இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து கைப்பற்றிய சம்பவத்தின்போது, இந்திய மீனவர் படகு ஒன்று நீரில் மூழ்கியதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தத் தகவல் இலங்கை கடற்படையினரால் தமக்கு தெரிவிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.

தலைமன்னார் சம்பவத்தில், ஒரு இந்திய மீன்பிடி படகு பழுதடைந்து கடல் நீர் உட்புகுந்ததாகவும், அதன் காரணமாக அந்தப் படகு கடற்படையினரால் கரைக்கு இழுத்துவரப்பட்டு, திருத்த வேலைகள் செய்யப்பட்டதாகவும் இலங்கை கடற்தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் படகு முழுமையாக திருத்தப்பட்டதும், அந்தப் படகில் வந்த ஐந்து இந்திய மீனவர்களையும் தமிழகத்துக்கு திருப்பியனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதாகவும்,அதனால் தமது வாழ்வாதரங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிக்க இலங்கை விரைவாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமது மீனவர்களை விடுவிக்க இந்தியா நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று இலங்கை மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140608_indiafishermen_arrest.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர் ஒருவர் வைத்தியசாலையில்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2014 04:41 

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேரில்  ஒருவர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (09)  அனுமதிக்கப்பட்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் 32 பேரையும் படகொன்று கவிழ்ந்ததால் காப்பாற்றப்பட்ட இந்திய மீனவர்கள் 04 பேருமாக மொத்தம் 36 மீனவாகளை  ஞாயிற்றுக்கிழமை (08) அதிகாலை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவரை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 
  • கருத்துக்கள உறவுகள்

அவனே பிடிக்கிறான். அவனே ருவிட்டரில விடுறான்.

 

நல்ல நல்லெண்ணை விளையாட்டுத்தான்.

 

பாவம்.. அப்பாவி தமிழ் மீனவர்கள். :rolleyes::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.