Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக, சமூக வலைதளமான ட்விட்டரில் #TheMistakeGirlsMake என்ற ஹஷ்டேக் பிரபலமடைந்து இருந்தது.

 

இந்த ஹஷ்டேக்கை வைத்து ஆண்களும் பெண்களும் பல ட்வீட்களைத் தட்டினர். சிலர் நகைச்சுவையாகவும், எவரையும் புண்படுத்தாத வகையிலும் ட்வீட் செய்ய, பெரும்பாலானவர்கள் பெண் மோகம் கொண்ட வாசகங்களையும், பெண்களை வெறுக்கும் வாசகங்களையும், அவர்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலும் ட்வீட் செய்தனர்.

 

"பெண்ணாக பிறப்பதே தவறு", "அவர்கள் எதையாவது சரியாக செய்வதுண்டா?", "நம்பத் தகுந்த ஒருவரை சோதிப்பதாக நினைத்துக்கொண்டு தன் சிறிய ஐ.க்யூ. மூலம் ஏமாற்றுவது" போன்ற ட்வீட்களைத் பதிவு செய்தனர். மேலும் சிலர், இங்கு வெளியிட முடியாத அளவிற்கு மிக மோசமான ட்வீட்களையும் பதிவு செய்தனர்.

 

பெரும்பாலான ட்வீட்களில் பெண்கள் எப்படி ஏமாற்றுபவர்கள் மீது காதல் வயப்படுகிறார்கள் என்றும், நம்பதகுந்தவர்களை எப்படி நண்பர்கள் வட்டத்துக்குள் வைத்திருக்கிறார்கள் என்றும் புலம்பி தள்ளியிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் விமர்சனத்திற்கு ஆளாகிறார்கள்.

 

சமீபத்தில் லாவண்யா மோகன் என்ற இளம்பெண் ஆதார் அட்டை வாங்க சென்றுள்ளார். ஆனால், துப்பாட்டா அணியாத காரணத்தால், பணியாளர்களோ லாவண்யாவுக்கு ஆதார் அட்டை வழங்க மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, லாவண்யா ட்வீட் செய்ய, மேலே குறிப்பிட்டுள்ள ஹஷ்டேக் பிரபலமடைந்துள்ளது.

 

"நான் ட்வீட் செய்த பின், அதற்கு எதிராக மிக மோசமான ட்வீட்களை சிலர் பதிவு செய்தனர். நான் என்னையே விளம்பரப்படுத்துவதாக சிலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அதனால், நான் சுயதணிக்கை செய்தாக வேண்டியிருந்தது.

 

ட்வீட்டரில் தொடர்ந்து இயங்கி வரும் ஆண்களை இயல்பாக கருதுவது போல் பெண்களை கருதுவதில்லை. சமூக வலைதளங்களில் பெண்களை எளிதாக இழிவுபடுத்திவிடுகிறார்கள். இதற்கு சுயதணிக்கை செய்வது தகுந்த தீர்வல்ல என்றாலும், என் மன அமைதிக்காக நான் அதை செய்ய வேண்டியிருந்தது" என்று அவர் வருத்ததுடன் தெரிவித்தார்.

இதற்கு முன், கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாடகி சின்மயியை ட்விட்டரில் இழிவுபடுத்தியதாக இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர். சாதி வெறி மற்றும் அபாச ட்வீட்களால் சின்மயி தாக்கப்பட்டார்.

 

எழுத்தாளர் மீனா கந்தசாமி தன்னை இழிவுபடுத்தும் வகையில் பல ட்வீட்கள் தனக்கு வந்ததாக முன்பு கூறியுள்ளார். ஆசிட் வீச்சு செய்வதாகவும், பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் கூட மிரட்டல்கள் வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

 

ட்விட்டருக்கு நெறிமுறைகள் வழங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா என்பதற்கு, இல்லை என்கிறார் ப்ராஜ்ன்யா என்ற அமைப்பைச் சேர்ந்த அனுபமா ஸ்ரீனிவாசன். இந்த அமைப்பு, பாலியல் மற்றும் பாலினம் தொடர்பான வன்முறைகளை எதிர்த்து செயல்பட்டு வருகின்றது.

 

இந்த சம்பவம் குறித்து அனுபமா கூறுகையில், "ஒரு வகையில் இணையத்தில் இயங்குவதும், சாலையில் நடப்பதும் ஒன்றே. சிலர் தான் என்ன நினைக்கிறார்களோ அதை செய்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதற்கு தீர்வாக, இதுபோன்ற சம்பவங்கள் அறிந்தவுடன், இதனை மிக முக்கிய விஷயமாக எடுத்துக்கொண்டு தீர விசாரிப்பதே சிறந்தது" என்று தெரிவிக்கிறார்.

 

இந்த நிகழ்வுகளையும், உங்களுடைய ஆன்லைன் அனுபவத்தையும் வைத்தும் பார்க்கும்போது, பெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்? - விவாதிப்போம் வாருங்கள். 

 

http://tamil.thehindu.com/opinion/discussion/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article6104537.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் ட்டுவீட்டர் மட்டுமல்ல,எங்கு எல்லாம் பெண்கள் சுதந்திரமாக உலாவ முயற்சிக்கிறார்களோ, பேச முயற்சிக்கிறார்ளோ அங்கு எல்லாம் தண்டனைக்கு உரியவர்களாவே பெண்கள் இருக்கிறார்கள்..

அவர்களது குரல்வளை நசுக்கப் பட வேண்டும் போன்ற உணர்வோடு தான் பழகியவர்களும் இருக்க செய்கிறார்கள்..சமுகத்தில் உலாவ முடியாதவர்கள் போன்று தான் மற்றவர்களால்,ஆண்களால் வர்ணிக்கபடுகிறார்கள்.ஓரம் கட்டப் படுகிறார்கள்.

 

இதற்கு எல்லாம் ஆண்களோடு சேர்ந்து நின்று ஒத்துளைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்..அதவாது தாங்கள் ஒன்றை அடையனும் என்றால் எவ்வளவு தூரம் மற்றப் பெண்களை காயப்படுத்த முடியுமோ கெட்ட பெயர்களை எடுத்து குடுக்க முடியுமோ அந்தளவுக்கு செயல்படுகிறார்கள்.

 

கெட்டவார்த்தைகளால் திட்டுவது,பொய்யாக ஒன்றை சொல்லி மிரட்டுவது.இந்த காரண கர்த்தாக்கள் பழக வரும் முன் யாரோ கோவக்காறியோடையோ இல்லை அப்பாவியோடையோ கோவமாக,அப்பாவியாக பழகிக் கொண்டு இருந்தவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். எல்லாம் கொஞ்சம் நாகரீகமான வேலைக்கு சென்று வருகிற பெண் கிடைத்ததும்...மற்றவர்களை ஏளனமாகவே பேசத் தூண்டுது.வாழ்வு வேணுமா என்ற  அழவுக்கு நடப்பது எல்லாம் பெரிதாக யாருக்கும் தெரிவதில்லை என்றே சொல்லலாம்..

 

அமைதியாக இருந்து மெல்ல,மெல்ல பலரோடும் பழக முயற்சிக்கும் பெண்களுக்கு வாழ்க்கை மீதே வெறுப்பைத் தான்  கொட்டுகிறார்கள்.... தங்கள் பேச்சுக்களால்,செய்கைகளால் இன்சல்ட் பண்ணும் உறவுகளும் இருக்கவே செய்கிறார்கள்..ஏன் தாங்கள் பகுதி நேரமாகவே செய்யும் சில வேலைகளை சாதரண  விடையங்களுக்கு எல்லாம் அங்க மாட்டி விடுவன்,இஞ்ச மாட்டி விடுவன் என்று சொல்வது எல்லாம் தங்களின் இயலாமையைக் காட்டும் விடையங்களே.

 

பழக ஆரம்பிக்கும் போது நல்லவர்களாக கெட்டவர்களா என்று அறிந்து கொள்ள முடியாது..எங்காவது ஒரு இடத்தில் தங்கள் காள்ப் புணர்வுகளை காட்டத் தொடங்கும் போது தான் அட ஏன் இவர்களை எல்லாம் நம்பித் தொலைச்சோம் என்று இருக்கிறது.எங்களை நாங்களே நொந்து கொண்டு மிகுதி காலத்தையும்  கடத்த வேண்டியவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள்...யாரையும் நம்ப முடியாத அளவுக்கு அவர்களது சுய நலங்களுக்காக மற்றவர்களுக்கு  காயங்கள்  ஏற்படுத்தும் உலகமாக மாறி விட்டது.. ஆனால் இப்படியானவர்கள் கண்டிப்பாக எங்காவது ஒரு இடத்தில் மீள முடியாத அளவுக்கு படிக்க வேண்டும். முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று சொல்வார்கள்..இப்போ அப்படி இல்லை எல்லாம் நேர,நேரவே நடக்கிறது..யாயினி வளமையாக இப்படி எல்லாம் கதைப்பவள் அல்ல....மற்றவர்களுக்கும் மனசு என்று ஒன்று இருக்குத் தானே..ஒன்றும் ஜடம் அல்லவே.இருக்கும் போது ஒன்றின் அருமை தெரியாது.இல்லாத போது தான் தெரியும்...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலையில் யாருக்கும் பாதுகாப்பில்ல. நாங்க தான் அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி எங்களைப் பாதுகாக்கனும். அதைவிட்டிட்டு.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று புலம்பிப் பிரயோசனம் இல்ல. பெண்கள் என்ன ஏலியன்களா.. விசேட பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்ய.

 

இப்படி நீட்டி எழுதிக் கொண்டிராமல்.. சமூக வலையை எப்படி உச்ச எச்சரிக்கையோடு.. விழிப்புணர்வோடு பயன்படுத்துவது... என்று எழுதினால்.. வழிகாட்டினால்.. அது பெண்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் பிரயோசனமா இருக்கும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலையில் யாருக்கும் பாதுகாப்பில்ல. நாங்க தான் அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி எங்களைப் பாதுகாக்கனும். அதைவிட்டிட்டு.. பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று புலம்பிப் பிரயோசனம் இல்ல. பெண்கள் என்ன ஏலியன்களா.. விசேட பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்ய.

 

இப்படி நீட்டி எழுதிக் கொண்டிராமல்.. சமூக வலையை எப்படி உச்ச எச்சரிக்கையோடு.. விழிப்புணர்வோடு பயன்படுத்துவது... என்று எழுதினால்.. வழிகாட்டினால்.. அது பெண்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டு மொந்த மனித சமூகத்திற்கும் பிரயோசனமா இருக்கும். :lol:

 

 

என்ன இந்தப் பக்கம் யாரையும் காணமே என்று நினைச்சேன்.நமக்கு ஏன் வீண் பிரச்சனை என்று  ஒதுங்கிப் போகும் தருணங்களே அதிகம்...ஈரடியில் தான் எழுதனும் என்றால் ஈரடியாரைத் தான் அழைக்க வேண்டும்.எதிர் வரும் காலத்தில் அப்படி எழுத முயற்சிக்கிறேன்..உலக மாற்றத்தில் கொஞ்சம் அதிகமாக எழுதிட்டாலும் பிடிக்காது தான் புரிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தவறாக அர்த்தம் கொண்டு விட்டீர்கள். நாங்கள் எழுதிய பதில் மேலே உள்ள கட்டுரையாளரின் கட்டுரைக்கு. உங்களுக்கு அல்ல.. தங்கச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

டுவிட்டரில் மட்டுமா பெண்களை இழிவு படுத்துகிறார்கள்? இங்கு யாழில் கூட பெண்ணாக இருந்து கொண்டு இவளால் எப்படி இப்படியான கருத்துக்களை எழுத முடியும் என்றும்,எதாவது தீவிர விவாதம் என்று வந்து விட்டால் ஆணாதிக்க சக்தி மேலோங்குவதையும் கருத்துக்களினூடாக காண்கிறோம் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.