Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கெல்லாம் கலைஞரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்ற வாரம் இரகசியமாக நடந்து முடிந்த ஒரு சண்டை "சாதனைத்தமிழா விருது - லைக்கா விளம்பரம்". 
 
முடிந்து போனதை எதற்கு தோண்டனும். இது தானே உங்கள் கேள்வி? 
 
இந்த எதிர்ப்பு பலரின் முகமூடிகளை கிழித்து அம்மனாக்கியது மட்டுமல்லாமல் இப்படியான விழாக்களை ஓழுங்கமைப்பவர்களின் புத்திகூர்மையை மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் (ரெண்டுக்கும் என்னதான்யா வித்தியாசம், தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்கப்பா), சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் என்று மார்தட்டும் யோக்கியர்களின் சுயநலத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. 
 
"மக்கள் எப்படி போனா நமக்கென்ன மற்ற மந்திரிங்க எப்படி போறாங்கன்னு பாருங்க" கவுண்டமணி அண்ணன் சொன்னது மேலே குறிப்பிட்ட கூட்டத்துக்கு நன்றாகவே பொருந்தும். இவர்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் மட்டுமே தமிழ் தேசியம் நிரம்பியிருக்கும். புலிகளை வைத்து வாழ்க்கை நடாத்துவது அல்லது அவர்களை எதிர்த்து. எப்படி பார்த்தாலும் புலிகளும் தமிழ் தேசியமும் இவர்களின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. 
 
ஆனால் தன் இனத்தை பற்றி தவறான செய்திகளிற்கும், கட்டுரைகளிற்கும், கதைகளிற்கும் வாயே திறக்காமல் சமாளிப்பதில் வல்லவர்கள். 
"நேரம் இல்லை அண்னை",  "இப்ப வேற வேலையில நிக்கிறன்", இதைவிட நேராகவே "நான் ஒரு பயந்த கோழை" என்று எழுதிவிட்டு போங்கடா அப்ரென்டிசுகளா. உங்களுக்கெல்லாம் ரோசம் ஒரு கேடா? இப்ப மட்டும் கோபம் தலைக்கு மேல வந்திருக்கும். ரெம்ப துள்ளாதீங்கடா. என்னை மாதிரி வாயில்லா பிராணிகளை எதிர்த்துதான் நீங்க பெரிய சமூகசிற்பி என்று காட்டமுடியும்.அதுக்கு மட்டும் உங்க கூட்டம் "டேய் மச்சா இங்க ஒருத்தன் மாட்டியிருக்கிறான் வாங்கடா"ன்னு சேர்ந்துவந்திடும். மூடிகிட்டு போங்கடா. 
 
நாட்டில இந்த கலைஞர்கள் தொல்லை தாங்கமுடியலடா சாமி. கெமரா பிடிச்சவன் எல்லாம் கலைஞனாம். விருதும் புகழும் கொடுத்துபாருங்க. ராஜபக்சே கூப்பிட்டா கூட நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போகுங்கள். கலை மூலமா தமிழை வளர்க்கிறம் என்று ஒரு கூட்டம் இருக்கு. முதல்ல உங்கட கண்ணுக்கு முன்னால நீங்க இருந்த வீட்டை இடிக்கிறதை தடுக்கபர்ருங்கடா. வார்த்தைக்கு வார்த்தை நீங்க ஈழத்து கலைஞர்கள் என்று மார்தட்டுறீங்களே எந்தவொரு ஈழம் சார்ந்த போராட்டத்திலும், நிகழ்ச்சியிலும் உங்களை காணக்கிடைக்கிறதில்லையே ஏன்? கலைநிகழ்ச்சிகள் என்ற அதிமுக்கிய நிகழ்சிகளில் நடாத்தவே உங்களுக்கு நேரம் போதவில்லை என்பதை விளங்கிக்கொள்கின்றேன். லட்சக்கணக்கில தமிழர்கள் செத்த போது வராத ரோசமும் கோபமும் உங்களுக்கு இப்பவா வரப்போகுது? இப்ப என்னில மட்டும் நல்லா கோபம் வரும். என் இனத்திற்கு பயன்படாத உங்களுடைய கலைஅறிவு இங்கே தேவையில்லை. லைக்கா போன்ற துரோகிகளின் விருதுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு சாக்கடையில் விழுந்த நீங்களெல்லாம் இனி கலைஞர்கள் என்று சொல்லீட்டு திரியாதீங்டா.
 
வாயில் விரலை வைத்தால் கூட கடிக்கத்தெரியாத சின்ன பிள்ளைகள் போல் தம்மை காட்டிக்கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே. லைக்கா எந்த திசையைில் பயணிக்கின்றது என்று வேற்றுகிரகத்திலிருந்து வந்த உங்களிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதனால் தான் முதலில் அவர்களை நாடினீர்கள் போலும். இப்பொழுது அவர்களை பற்றி தெரிந்து அவர்களின் பெயரை தூக்கிவிட்டீர்கள். என்ன ஒரு நடிப்புடா சாமி! 
 
நீங்க வெளியிட்ட வீடியோவில ஒவ்வொரு வசனத்திலும் "ஈழத்தமிழர், எங்கட கலைஞர்கள்" என்ற வார்த்தையை ஒரு 50ற்கும் அதிகமாக பயன்படுத்தியிருப்பீர்கள் (அந்த வீடியோவை நாங்க முதல் நாளே தரவிறக்கும் செஞ்சிட்டமே!) . என்ன ஒரு அதிசயம் அந்த வீடியோவில் ஒரு ஒருமுறை மட்டும் லைக்கா என்ற சொல்லை பயன்படுத்தியிவிட்டு இந்த நிகழச்சியை எதிர்பவர்களின் நோக்கம் தமிழ்கலைஞர்களை வளரவிடாமல் தடுப்பது போன்று ஒரு  பிம்பத்தை உருவாக்க முயன்றது அப்படியே தெரியுதுங்கோ. ஆனால் பாருங்கோ இங்க பிரச்சனை லைக்கா தானுங்கோ. இந்த நிகழ்ச்சியல்ல. லைக்கா பற்றி ஊருக்கே தெரியும். பிறகு எதற்கு இந்த விபரீத விளையாட்டு? 
 
லைக்கா விளம்பரத்தை மீளப்பெற்றுக்கொண்டதால் உங்களை நல்லவர்கள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? லைக்காவை விளம்பரத்திலிருந்து தூக்கியதால் இந்த நிகழ்ச்சியை நீதி நெருக்கடி காரணமாக தள்ளிவைக்கவேண்டிய கட்டாயத்திற்குள் வந்துள்ளீர்கள் என்றால் லைக்கா உங்களிற்கு எவ்வளவு நிதி கொடுக்க முன்வந்திருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். நீங்க நிகழ்ச்சி நடத்துங்க நடத்தாம போங்க அது உங்கட பிரச்சனை. ஆனா இதுக்குள்ள ஈழத்தையும் போராட்டத்தையும் மக்கள் படும் துன்பங்களையும் விளம்பர வாசகங்கள் மாதிரி பயன்டுத்தாதீங்கடா. சகிக்கமுடியல!!
 
-ஊர்க்காவலன்-

ஊர்க்காவலன்,

 

இந்த பதிவை வாசிப்பவர்களுக்கு என்ன விடயத்தினை சொல்ல முற்படுகின்றீர்கள்? லைக்காவின் அனுசரனையுடன் ஒரு நிகழ்வு நடந்து இருக்கு என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது, ஆனால் எப்படிப்பட்ட நிகழ்வு (விருது வழங்கும் நிகழ்வா , கலை நிகழ்வா, இலக்கிய கூட்டமா...?) என்பது கூட தெளிவில்லாமல் இருக்கின்றது.

 

இவற்றுக்கு மேலாக நீங்கள் பயன்படுத்தியுள்ள மொழி மிகவும் மோசமானது. ஒருவரின் /ஒரு நிகழ்வினை நடத்தியவர்களின்  தவறை சுட்டிக் காட்டி அவர்கள் மேல் உங்கள் கடுமையான விமர்சனத்தினை வைப்பதற்கு நீங்கள் பயன்படுத்தியுள்ள மொழி மிகவும் அநாகரீகமானது. இப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்தி அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக உங்களை தாழ்த்திக் கொண்டு விட்டீர்கள்.

 

இனிமேல் இப்படியான ஒருமையில் அமைந்த, அநாகரீகமான மொழியினை பயன்படுத்தி யாழில் கட்டுரை எழுதுவதை தவிர்க்கவும்.

 

நன்றி

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.