Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் பயங்கரவாதிகள்- பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும்

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 17 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதச் செயல் என்றும் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கியூபா அணிசேரா நாடுகள் கூட்டத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கியூபாவில் மகிந்த பேசியதாவது:

பாலஸ்தீன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

மனித உரிமைகள், சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஆட்சி முறையை ஜனநாயகப்படுத்துவதில் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள், பயங்கரவாதம், போதைப்பொருட்கள், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், குற்றச் செயல்களால் நாட்டின் இறைமைக்கும் சிவில் சமூகத்தினருக்கும் சட்டத்துக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

பயங்கரவாதமானது எந்தவித சந்தேகத்துக்கும் இடமின்றி மனிதாபிமானமற்றதாகவும் அரசியல் ரீதியாக நிலைத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

பயங்கரவாதமும் விடுதலையும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டது. விடுதலையானது ஆக்கபூர்வமானதும் மனிதாபிமான வடிவம் கொண்டதுமாகும். இது ஒரு புறத்தில் புதிய பார்வைகளை கொண்டதும் அதிகார கட்டமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருவதுமான முன்னேற்றகரமானதொன்றாகும்.

மறுபுறம் இது சமூக, பொருளாதார கட்டமைப்புக்களை கொண்டது. ஆனால், பயங்கரவாதம் இதற்கு முரணானதொன்றாகும். இது நாசகார சக்தியாகும். அத்துடன், மனிதாபிமானத்தை சீரழிக்கும் ஒன்று. இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எனது நாட்டு மக்கள் நீண்டகாலமாக இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பின் கரங்களினால் துன்பமுற்றுள்ளனர். தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள், கண்ணிவெடி தாக்குதல்கள், படுகொலைகள், பலவந்தமாக போருக்கு சிறுவர்களை சேர்த்தல் போன்றவை அந்த அமைப்பின் வழிமுறைகளாகும். அரசியல் தலைவர்கள், மனித உரிமைப் பணியாளர், பத்திரிகையாளர், தமது நோக்கங்களுக்கு இணங்காதவர்களை அவர்கள் அழித்துவிடுகிறார்கள்.

எனது அரசாங்கம் உட்பட ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து இதுவரை தோல்வியே ஏற்பட்டுள்ளது. இப்போதும் சர்வாதிகாரப் போக்குடைய பயங்கரவாதக் குழுவை அரசியல் சக்தியாக ஈடுபடுத்துவதற்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இறைமை, ஆதிபத்தியம் உள்ள அரசாங்கங்களின் அரசியல், பொருளாதார நலனுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்தை முறியடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். அதற்குரிய புதிய வழி வகைகளை கண்டறிய வேண்டும்.

ஐ.நா. மற்றும் ஏனைய பல நிறுவனங்களில் சமத்துவமான மாற்றத்தை ஏற்படுத்த அணிசேரா நாடுகளின் அமையம் முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

உலக மயமாக்கலினால் கிராமிய வாழ்வின் அழகு துரிதமாக மறைந்து வருகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னர் எமது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் நகரங்களையே மையப்படுத்தியிருந்தது.

கடந்த நவம்பர் தேர்தலில் நான் அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், வறிய மக்களுக்கு சார்பான அபிவிருத்தி உபாயத்தை கைக்கொண்டுள்ளோம். மறுபுறத்தில் பிராந்திய மட்டத்தில் சமத்துவமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைக்கொண்டுள்ளோம் என்றார் மகிந்த ராஜபக்ச.

http://www.eelampage.com/?cn=28810

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அவர் பாலஸ்தீனத்தின் விடுதலைப் போராட்டம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. அன்று தொட்டு மகிந்த பாலஸ்தீனத்தின் நண்பன்.

ஆமாம் உண்மைதான் அவர் அன்றிருந்து பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தந்தவர் தான். ஏனேனில் பாலஸ்தீனம் இலங்கையில் இல்லாத படியால். பாலஸ்தீன விடுதலைப் போரட்டத்தை அங்கீகரிப்பது உண்மையேனில் ஏன் தமிழீழ போராட்டதத்தை அவரால் அங்கீகரிக்க முடியாது? எல்லாம் ஒரு கண்துடைப்புத் தான்.

ஈழத்திலிருந்து

ஐhனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.