Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"முஸ்லிம் இனத்தவரின் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பதனை நான் கண்டேன்" – பாலித தெவரப்பெரும:-

Featured Replies

Palitha-Thewarapperuma-626x380_CI.jpg

அடுத்த பாராளுமன்ற அமர்வில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

 
இன்று இடம்பெற்ற ஊடகவியராளர் சந்திப்பின் போது இது குறித்து அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.
 
"பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் 225 உறுப்பினர்களில் நானும் ஒருவன். பொலிஸார் முன்னிலையில் வெலிபென்ன பிரதேசத்தில் முஸ்லிம்  இனத்தவரின் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ வைப்பதனை நான் கண்டேன். அவ்வாறு செய்ய இடமளிக்க வேண்டாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என கூறினேன். ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. பொலிஸ் மாஅதிபர் நிச்சயமாக பதவி விலக வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் சிங்கள இனத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை நீக்க முடியாது. அடுத்த பாராளுமன்றத்தில் நான் இராஜினாமா செய்வேன். இதனை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. அராங்கம் இதில் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்க கூடாது."

ஓரு இனத்த இன்னொரு இனம் மிதிக்கிற ஏற்றுக்கொள்ள மாட்டாராம் மகிந்த: யாழ்ப்பாணத் தம்பி

 

kkkkkkkkk_CI.jpg

சாத்தன் வேதம் ஓதுறது எண்டு சொல்லுவாங்கள் தானே. அதேதான். ஆனால் இந்த சாத்தம் ஓதுற வேதம் கொஞ்சம் வித்தியாசம். அதுல கணக்க அர்த்தங்கள் மறைஞ்சிருக்கும். இந்த சாத்தான் ஒரு மார்க்கமாகவே வேதம் ஓதும். இலங்கையில் சிறுபான்மை இனம் என்றொரு இனம் இல்லை எண்டு இந்த சாத்தான் சொல்லிச்சுது என்றால் நிறையப் பேர இனப்படுகொலை செய்திட்டம் எண்டு அதற்கு அர்த்தம்.

நாங்கள் எல்லாரும் இலங்கையர் ஒரு தாய் பிள்ளையள் எண்டு இந்த சாத்தான் சொன்னால் உங்களுக்கு ஒரு சுண்ணாம்புத் துண்டும் தர மாட்டன் என்று தமிழர்களுக்கு சொல்லுறார் எண்டு அரத்தம். சரி இப்ப என்ன வேதம் ஓதுறார் எண்டு தெரியுமே? ஓரு இனத்த இன்னொரு இனம் மிதிக்கிற ஏற்றுக்கொள்ள மாட்டாராம் மகிந்த. அடடே... நல்லாத்தான் கொமடி பண்ணுறார் இந்தக் கோமாளி.

இவர் மட்டுமில்லாமல் இவருக்கு முந்தி சிங்க பலி பீடங்கள ஆண்டவையள் எல்லாம் செய்ததது? என்ன? இவர் ஆட்சிக்கு வந்ததிலயிருந்து கணகச்சிமாய் செய்து முடிச்சது என்ன? செய்துகொண்டிருக்கிறது என்ன? சிங்களப் பேரினவாத்தின்ட பிசிய பேக்க லட்சக்கணக்கான அப்பாவி ஈழச் சனங்கள கொண்டது என்ன? அந்தச் சனங்களின்ட ஒட்டுமொத்த வாழ்க்கையை அழிச்சு நாசப்படுத்தினது என்ன?

தமிழரக் கொண்டுபோட்டு தமிழ்மொழியை வடக்கு கிழக்கில அழிச்சுக் கொண்டு இரத்தம் காயாத கையோடயும் வாயோடயும் போய் ஐ.நாவில தமிழில பேசி அரசியல் பண்ணுற உந்த நடிகன் இன்னும் என்னவெல்லாம் பேசப் போறாரோ? என்ட நல்லூரானே? இன்னொரு விசயம் என்ன தெரியுமே? ஒரு சின்னப் பிரச்சினைக்கு பெரிய எதிர்ப்ப காட்டுறினமாம்?

அதாவது அளுத்கமவில பேருவளையில நடந்தது ஒரு சின்னச் சம்பவம் எண்டு இலங்கையின்ட ஜனாதிபதி சொல்லுறார். நாலு பேர் செத்தது, பல கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிஞ்சது, சனங்கள் இடம்பெயர்ந்தது, இன்றுவரைக்கும் சனங்கள் அச்சத்தோடயும் பயத்தோடயும் இருக்குதுகள். எங்க எப்ப கல் எறி விழும் எண்டு தெரியாம சனங்கள் இருக்கிறது சின்னப் பிரச்சினையாம். உந்த சின்னப் பிரச்சினைக்கு ஹர்த்தால் செய்தது பெரிய பிரச்சினையாம்.

இவருக்கு முள்ளிவாய்க்காலும் சின்னப் பிரச்சினை. அங்க போர்க்குற்றங்கள மீறினதும் சின்னப் பிரச்சினை. லட்சக்கணக்காண மக்கள் கொல்லப்பட்ட இனப் படுகொலையும் சின்னப் பிரச்சினை. அவருக்கு தமிழ் பேசும் மக்கள் இருக்கிறதுதான் பெரிய பிரச்சினை. உவரும் உவரின்ட தம்பியும்தானே பொதுபலசேனாவுக்கு தீணி போட்டு வளக்கினம். பிறகு எப்பிடி இது பெரிய பிரச்சினையாத் தெரியும்?

மகிந்த சொல்ல வாறத நாங்கள் தான்சரியாய் விளங்கிக் கொள்ள வேணும். ஒரு இனத்த இன்னொரு இனம் மிதிக்கக் கூடாது. அழிக்க வேணும். இதத்தான் மகிந்த சொல்ல வாறார். அதத்தான் மகிந்த செய்து கொண்டிருக்கிறார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108508/language/ta-IN/article.aspx

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பாராளுமன்ற அமர்வில் தான் இராஜினாமா செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

 
 
 

நல்லதொரு  முன்னுதாரணம்

இசுலாமிய  பாராளுமன்ற உறுப்பினர்கள்

இவரிடம் வேண்டிக்..........கணும்

  • கருத்துக்கள உறவுகள்

ஓம். ஐக்கிய தேசியக் கட்சி தெற்கில் இன அழிப்பு செய்யாத கட்சிதானே. இவருக்கு இப்படி சொல்ல எல்லா உரிமையும் இருக்கு.. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.