Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை நடத்த ஜே.வி.பி.க்கு ம

Featured Replies

இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை நடத்த ஜே.வி.பி.க்கு மகிந்த "நள்ளிரவு" யோசனை: கொழும்பு ஊடகம்

[திங்கட்கிழமை, 18 செப்ரெம்பர் 2006, 05:07 ஈழம்] [ச.விமலராஜா]

அமைதிப் பேச்சுக்களை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்ட இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரைகளை மேற்கொள்ள ஜே.வி.பிக்கு மகிந்த ராஜபக்ச யோசனை கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தி விவரம்:

இணைத் தலைமை நாடுகளின் பிரசெல்ஸ் அறிக்கைக்குப் பின்னர் அரசாங்கம் முன்பாக ஜே.வி.பி. வைத்த நிபந்தனைகள் தொடர்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை மற்றும் சர்வதேச ஊடகங்களில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் நேர்காணல் ஆகியவற்றால் ஜே.வி.பி.யின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த அறிக்கை வெளியான மறுநாள் மகிந்த வெளிநாடு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்ட அறிக்கை மகிந்தவுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே அலரி மாளிகைக்கு கேகலிய ரம்புக்வெலவை மகிந்த ராஜபக்ச அழைத்தார். நிபந்தனையற்ற பேச்சுக்கு அரசாங்கம் இணங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை மறுத்து அறிக்கை வெளியிடுமாறு கேகலிய ரம்புக்வெலவிடம் மகிந்த கூற, அவருடம் சிறப்பு ஊடகவியாலளர் மாநாட்டை நடத்தினார்.

மேலும் வெளிநாடு செல்வதற்கு முன்பாக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உள்ளிட்ட ஜே.வி.பி.யினரை மகிந்த சந்திப்பதைத் தவிர்ப்பதில் அவரது ஆலோசகர்கள் அவதானமாக இருந்தனர்.

வெளிநாடு செல்லும் முன்பாக இடதுசாரித் தலைவர்களை மகிந்த சந்தித்து அந்த புகைப்படங்கள் வெளியாகிவிட்டால் சர்வதேச சமூகத்தின் முன்பாக சிக்கலாகிவிடும் என்று கருதியிருந்தனர்.

இணைத் தலைமை நாடுகள் அறிக்கை வெளியான நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சந்திப்பை நடத்தலாம் என்று மகிந்தவின் அலரி மாளிகையிலிருந்து அமரசிங்கவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விமல் வீரவன்ச ஊடாக மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். இதே தகவலை டல்லஸ் அழகப்பெருமாவும் வீரவன்சவுக்கு தெரிவித்தார்.

மகிந்த ஒதுக்கிக் கொடுத்த நேரத்துக்கு அரை மணித்தியாலத்துக்கு முன்பாக விமல் வீரவன்சவும் ரில்வின் சில்வாவும் அலரி மாளிகைக்கு சென்றுவிட்டனர்.

இச்சந்திப்பை எந்த உள்நாடு அல்லது வெளிநாட்டு ஊடகமாவது பதிவு செய்கிறதா என்பதை உறுதி செய்யுமாறு டல்லஸ் அழகப்பெருமாவிடம் மகிந்த கூறினார். மேலும் குறிப்பாக சிரச தொலைக்காட்சியினர் இதனை அவதானிக்கின்றனரா என்றும் மகிந்த கேட்டுள்ளார்.

மகிந்தவுக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான அரைமணி நேர சந்திப்பு தொடங்கியது.

மகிந்த ராஜபக்ச: கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பின் போது உண்மையிலேயே அந்த விவாதங்களை முடிக்க முடியாமல் போய்விட்டது. இணைத்தலைமை நாடுகள் அறிக்கை தொடர்பாக விவாதிக்கவே உங்களை அழைத்துள்ளோம். உண்மையில் எதனையும் விரிவாகப் பேசுகிற நேரம் எனக்கு இப்போது இல்லை.

சோமவன்ச அமரசிங்க: எதுவித நிபந்தனையற்ற பேச்சும் ஓஸ்லோவில் நடத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக வெளியாகி இருக்கும் அறிக்கையின் உண்மைத் தன்மை என்ன?

மகிந்த: அது முற்றிலும் பொய்யானது. எரிக் சொல்ஹெய்ம் பேசியபோது அரசாங்கத்தினது நிலைப்பாட்டைத்தான் நான் சொன்னேன். இந்த அறிக்கை நம்மை சிக்கலில் தள்ளிவிட வெளியிடப்பட்டுள்ளது.

சோமவன்ச அமரசிங்க: அப்படியானால் அரசாங்கத்தின் செயற்பாடு என்ன?

மகிந்த: அறிக்கை வெளியிடச் சொல்லியிருக்கிறேன். கேகலிய ரம்புக்வெல மற்றொரு அறிக்கை வெளியிடுவார். அது பிரச்சனை அல்ல. விடுதலைப் புலிகளுடன் நடத்தப்படுகிற பேச்சுகளில் நாம் நமது நிலையிலிருந்தே பேசுவோம். இந்த இணைத் தலைமை நாடுகளின் கூட்டமானது நம்மைச் சுற்றி சிக்கலை மாட்டிவிடப் பார்க்கிறது. அத்தகைய உத்தரவுகளுக்கு நான் இடம்தர மாட்டேன்.

சோமவன்ச அமரசிங்க: இணைத் தலைமை நாடுகளை விமர்சித்து அரசாங்கம் அறிக்கை வெளியிடுவதுதான் புத்திசாலித்தனமானது.

மகிந்த: இணைத் தலைமை நாடுகளுடன் சண்டை போட அதில் ஒன்றும் இல்லை. நீங்கள் இணைத் தலைமை நாடுகளைத் தாக்குங்கள். ஏன் நீங்கள் இணைத் தலைமை நாடுகளை எதிர்த்து பரப்புரை செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது?

சோமவன்ச அமரசிங்க: சரி, அதனை நாங்கள் செய்கிறோம். அடுத்தது.. அரசாங்கத்தில் இணைவது குறித்து என்ன மாதிரியான முடிவை எடுத்துள்ளீர்கள்?

மகிந்த: இது போன்ற முக்கிய விடயங்களை குறுகிய நேரத்தில் பேசிவிட முடியாது.

மகிந்தவுக்கும் சோமவன்ச அமரசிங்கவுக்கும் இடையேயான இந்த உரையாடல் நடைபெற்ற நிலையில் உள்ளே ஊடக புகைப்படக் கலைஞர்கள் அனுமதிக்கபப்ட்டு விட்டனர். புகைப்படங்களுக்காக மகிந்தவுடன் அமரசிங்க கை குலுக்கினார். ஆனால் இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவரது முகத்தில் வெளிப்பட்டது.

அப்போது "ஏன் கை குலுக்கிக் கொள்ள வேண்டும். கட்டியணைத்துக் கொள்வோம்" என்று கூறிக் கொண்டு அமரசிங்க கட்டியணைக்க அதுவும் படமெடுக்கப்பட்டது.

அந்த இடத்திலிருந்து ஜே.வி.பி.யினரும் ஊடகத்தாரும் வெளியேறிய போது தனது அறைக்குச் செல்லும் வழியில், "ஒகே. நல்ல வேலை நடந்துள்ளது. ஊடகத்தாரின் புகைப்படங்கள் மூலம் சிறப்பான செய்தியை நாம் சொல்லியிருக்கிறோம்" என்றார் மகிந்த என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28823

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

fronts.jpg

-----------------------------

"அத்தானே.. அத்தானே எந்தன் ஆசை அத்தானே...."

"அடுத்து நாம் என்ன செய்யலாம் சொல்லுங்க அத்தானே...."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.eelampage.com/?cn=28848]தேசத் துரோகியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனம் செய்ய வேண்டும்: ஜே.வி.பி.

[செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 16:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அளித்த நள்ளிரவு யோசனையை ஏற்று நோர்வே மற்றும் இணைத் தலைமை நாடுகளுக்கு எதிராக ஜே.வி.பி. களமிறங்கியுள்ளது.

கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இங்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.அவர் சிறிலங்காவின் ஆளுநர் போன்று செயற்படுகிறார். சிறிலங்காவின் எதிரியாக எரிக் சொல்ஹெய்மை பிரகடனப்படுத்த வேண்டும்.

எரிக் சொல்ஹெய்ம் இங்கு வந்தாலும் கிளிநொச்சி செல்ல அனுமதிக்கக்கூடாது.

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு கூறியும் இணைத் தலைமை நாடுகள் ஏன் பதில் தரவில்லை? தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அல்லது சிறிலங்கா அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் அதிகமாக மீறப்படுகின்றன என்ற யோசனை ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் சிறிலங்காவை ஒரு தோல்வியடைந்த நாடாக பிரகடனப்படுத்த முயற்சி நடக்கிறது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வேண்டும். அந்த ஒப்பந்தத்தால் அரசாங்கத்துக்கு புலிகள் நிபந்தனை விதிக்கின்றனர். யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துவிட்டது. அது அடக்கம் செய்யப்படவில்லை. எனவே அதனை முழுமையாக இரத்துச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நல்லதைத்தான் செய்ய போகிறார்கள்...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:arrow: [url=http://www.eelampage.com/?cn=28869]பாடசாலை சிறார்களை பேரினவாதப் பாதைக்கு தள்ளுகிறது ஜே.வி.பி.:

கொழும்பு ஊடகம்

[புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 06:20 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவில் பாடசாலை சிறார்களை பேரினவாதப் பாதைக்கு இழுத்துச் செல்லும் செயற்திட்டங்களை தற்போது ஜே.வி.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளது என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பிலான அச்செய்தி விவரம்:

சிறிலங்கா அரசாங்கத்தில் தமது கட்சி இணைவது தொடர்பான 20 அம்ச செயற்திட்டம் குறித்த விளக்கங்களை பாடசாலைகளில் விளக்கப் போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பிலான நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளது.

ஜே.வி.பி.யின் மார்க்சிய சித்தாந்தம் தொடர்பிலான விவாதங்களும் நேற்றைய நிகழ்வில் இடம்பெற்றன. அதேபோல் பாடசாலை சிறார்களை எப்படி இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்க வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிரதி கல்வி அமைச்சர் றஞ்சித் சியம்பலபிட்டிய கூறியதாவது:

ஜே.வி.பி.யின் திட்டம் தொடர்பில் எமக்குத் தெரியவில்லை. ஆனால் அச்செய்தி உண்மையெனில் பாடசாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் வகுப்புக்களுக்கு பாடசாலை சிறாரை அனுப்புவது ஒழுங்கு நடைமுறைகளுக்கு எதிரானது என்றார் அவர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.