Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி பேரவையினுள் ஆர்ப்பாட்டம்! இன அழிப்பினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தமிழர் அரசு!!

Featured Replies

 

வடமாகாணசபையின் அமர்வு இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் தனது சிறப்புரிமை மீறப்படுவதாக குற்றஞ்சாட்டி பேரவையின் மையத்தில் அமர்ந்து கூட்டமைப்பு உறுப்பினரான சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். நீண்ட இழுபறிகளின் பின்னர் பிரதி அவைத்தலைவர் உள்ளிட்டவர்களது வேண்டுகோளையடுத்து தனது போராட்டத்தை அவர் முடித்துக்கொண்டார். அவரது பிரேரணைகள் தொடர்பில் அடுத்த அமர்வினுள் பதில் அளிக்கப்படுமென அங்கு உறுதியளிக்கப்பட்டது.

 

sivajilingam_protest_asembly_260620142.j

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கே.சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முக்கிய மூன்று பிரேரணைகளினை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாது பேரவை தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் தொடர்ந்தும் இழுத்தடிப்பதாக சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழர் தாயகத்தில் நடந்தது, நடந்து கொண்டிருப்பது இன அழிப்பே என்பதை வடமாகாணசபை ஏற்றுக்கொள்கின்றதென்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை முன்வைத்து சிவாஜிலிங்கம் போராடி வருகின்றார்.

 

sivajilingam_protest_asembly_260620143.j

ஆனால் முன்னதாக அவரால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை இன அழிப்பிற்கு ஒப்பானதென கருதுவதாகவே வடமாகாணசபை தீர்மானமொன்றை நிறைவேற்றியிருந்தது. இத்தீர்மானம் தொடர்பில் திருப்தி அடைந்திராத சிவாஜிலிங்கம் இன அழிப்பு உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை மீள கொண்டுவர முற்பட்டுள்ள போதும் அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாது பேரவை தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகிய இருவரும் இழுத்தடித்துவருகின்றனர்.

 

sivajilingam_protest_asembly_260620144.j

இந்நிலையில் தனது தீர்மானங்கள் இன்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் சிவாஜிலிங்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

 

sivajilingam_protest_asembly_260620145.j

இன்றைய அமர்வில் அண்மையில் அளுத்கம பேருவளை தர்கா நகரில் வாழும் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. எனவே குறித்த விடயத்திற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வடக்கு மாகாண சபை வலியுறுத்த வேண்டும்  என்ற பிரேரணையினை உறுப்பினர் அஸ்மின் சபையில் கொண்டுவந்தார். அது குறித்த விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்த பிரேரணையினை ஆதரித்து உறுப்பினர் சயந்தன், சித்தார்த்தன், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், சுகிர்தன் , ஆனோல்ட் மற்றும் ரவிகரன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

அடுத்து முல்லை மீனவர்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. தென்பகுதியில் இருந்து வந்து தடைசெய்யப்பட்ட முறையில் அட்டை பிடித்து வருகின்றனர் எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினை உறுப்பினர் ரவிகரன் சபையில் முன்வைத்தார். இதனை ஆதரித்து பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் உரையாற்றினார். மேலும் ரவிகரனின் பிரேரணைக்கு வடக்கு மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிததுள்ளார்.

 

http://www.pathivu.com/news/31933/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.