Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளர்ப்புப் பிழை

Featured Replies

நான் அழுதபடியும்

நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன்

சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும்

தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன்.

வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு.

நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை

அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை.

என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது,

அதுதான் எனது நிரந்தரச் சொத்து.

பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை.

நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும்

சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி.

இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்

இரைக்குப் பலியாகாமல் தப்பிப் பிழைக்கும் உத்திகளை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள்

எனக்கு நல்லது செய்வதாகக் கூறிக்கொண்டு கடவுளிடம் கொண்டுபோனார்கள்

அங்கே கொல்லாமையை போதித்த புத்தருக்காக கொல்கின்றர்கள்

பேனாவும் பேப்பரும் தந்தார்கள்

அவைகள் நகத்திற்கும் பற்களிற்கும் ஈடானது என்று பொய் வேறு சொன்னார்கள்.

இது மானுட விலங்குகளின் காடு என்பதை மறுதலித்தார்கள்.

பற்களையும் நகங்களையும் வைத்து வேட்டையாடு என்பதற்குப் பதிலாக

பிச்சை எடு என்றார்கள் அது தான் நாகரீகம் என்றார்கள்.

நாகரீகம் என்பது கொல்வதற்கான புதிய வழி

கொல்வதில் இருந்த தப்புவதற்கான புதிய வழி

என்பதை உணர மறுத்த முட்டாள்களாக இருந்தார்கள்.

கல்வி என்பது எப்படி கொல்வது எப்படித் தப்புவதற்கானது என்பதை

உணர மறுத்த முட்டாள்காக இருந்தார்கள்.

கடவுள் மனிதனின் சுயத்தை அழிக்கும் சாத்தான் என்பதை சொல்ல மறுத்தார்கள்.

கடவுளுக்காக மனிதன் காவுகொடுக்கப்படுவதை மறைத்து கடவுளே மனிதனை பாடைத்தார் என்றார்கள்.

பற்களையும் நகங்களையும் மொட்டையாக்கி

வேட்டையாடக் கற்றுக்கொடுக்க மறுத்து

பிச்சை எடுக்கவே கற்றுத்தந்தர்கள்

தப்பிப் பிழைக்கும் தந்திரங்களை கற்றுத்தர மறுத்து

தலைதெறிக்கத் தப்பியோடும் வழிகளை காட்டினார்கள்

தனியாக வேட்டையாடவும் கற்றுத்தரவில்லை

கூட்டமாகவும் வேட்டையாடக் கற்றுத்தரவில்லை

கூட இருப்பவனை இரையாக்கவும்

தூண்டிலில் மாட்டி இரைதேடவுமே கற்றுத்தந்தர்கள்

எல்லாம் எப்படி ஒன்றாகப் பிழைத்தது என்பது புரியவில்லை

எனது நகங்களால் என்னை விறாண்டுகின்றேன்

எனது பற்களாகள் என்னை கடிக்கின்றேன்

ஏனெனில் வன்முறை எனது இயற்கை.

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களை தங்கள் சுயநலங்களுக்கு ஏற்ப வலிந்து திணித்து உருவாக்கும் சமூகத்தை நோக்கி ஒவ்வொன்றையும் பகுத்தறிந்து பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் எழக்கூடிய கோபம் இது..

Edited by சுபேஸ்

உங்கள் கவிதை வெளிப்படைக்குக் காட்டுகின்ற வெப்பியாரம் புரிகிறது. இருப்பினும் இக்கவிதையினை ஒப்பாரி மீதான கேலிச்சித்திரமாகவே எடுத்துக்கொள்கிறேன்:
 
1) நசிபாடு, திசுக்களின் கிழிதல், நோ, குருதி என்பன இருந்துவிட்டால் அது வன்முறை என்றாகிவிடுமா? உயிர்காக்கும் சத்திரச்சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகவுருவாக்கம் ஆகியவற்றிலும் இவை அனைத்தும் இருக்கின்றன. வன்முறையின் வரைவிலக்கணம் அழித்தலை அங்கமாகக் கொண்டிருக்கவேண்டும். எனது பிறப்பே வன்முறை என நான்கூறின் அதை என்போன்று பிறந்த நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?
 
2) பேப்பர், பேனா, கடவுள் எதனையும் நான் கொண்டுவரவில்லை. ஆனால் இவை பற்றி இவற்றால் நான் எழுதியதை நீங்கள் படிக்கிறீர்களாயின் இவற்றை நான் வந்தபின் தேடிக்கொண்டேன் என்று தானே அர்த்தம். வந்தபின் தேடக்கூடியதை எதற்காக நான் சுமந்துவரப்போகிறேன்? தேடுதற்கான சூத்திரங்களை மட்டும் எடுத்து வந்தேன்.
 
3) நகமும் பல்லும் மட்டும் என்னுடன் வரவில்லை. நகத்தையும் பல்லையும் காலாவதியாக்கும் கருவிகளை உருவாக்கும் மூளையும் கூடவே தான் வந்தது. நகமும் பல்லும் முக்கியத்துவம் குறைந்தமைக்கான காரணம், வெளித்தெரியும் அவற்றைக் காட்டிலும் திறன் மிக்க வெளித்தெரியா சிறப்புக்கள் எனக்குள் மறைந்து கிடக்கின்றன. எனது நகத்தையும் பல்லையும் பாவிக்க விடுகிறீர்கள் இல்லையே என்பதனை நமட்டுச்சிரிப்போடு தான் நான் பாடுகிறேன்.
 
4) இரைதேடக் கற்றுத் தரவில்லை, இரையாகாது தப்பக் கற்றுத் தரவில்லை என்பதை நான் இரையாகாது எனக்கு இரைதேடி உண்டபின் தான் எழுதுகிறேன். 
 
5) என்னோடு கூடப்பிறந்த நகத்திற்கும் பல்லிற்கும் நான் பிறந்தபின் தேடிக்கொண்ட பேனாவும் பேப்பரும் ஈடென்று போதித்தார்கள் என்பததை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நானெழுதும் தாளினை எனது நகங்கள் சேதப்படுத்தாது, வெளித்தெரியா எனது பலம் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
6) பற்களையும் நகங்களையும் வைத்துவிட்டு பிச்சையெடு என்கிறார்கள் என்று நான் விழிப்பது என்னைப் போன்று பற்களோடும் நகங்களோடும் பிறந்தவர்களைத் தான். நானும் அடக்குவதற்கு என்வாழ்விலும் மனிதர்கள் உண்டு. எனக்குக் கீழானோரும் நானும் என் எசமானர்களும் பற்கள் பற்றிக் கருத்துப் பகிர முடிவது நாங்கள் பல்லைப் பாவியாமையினால் தான். இல்லையேல் செய்தி வெளிப்படமுன்னர் நாங்கள் செத்துப்போயிருக்க்கக்கூடும்.
 
7) நாகரிகம் என்பது சாவைத் தள்ளிப்போடும் உத்தி என்பதை உணராதோர் முட்டாள்ளகள் என்பது தான் உண்மையான நிலைப்பாடு. நாகரிகபோதனை மீதான விமர்சனம் முட்டாள்களை நோக்கிய நையாண்டி.
 
8) மனிதனின் பலமே சமூகம் என்ற எண்ணிக்கை. கூட்டமாக வேட்டையாடக் கற்றுத்தரவில்லை ஆனால் சமூகமின்றின் புலம்பல் சாத்தியமில்லை. புலம்புவதற்குப் புலம்புவோன் மட்டும் போதாது, கேட்போனும் அவசியம். ஆக நான் கூட்டமாய்த் தான் குப்பை கொட்டுகிறேன். கூட இருப்பவனை இரையாக்குவது சமூகத்தை அழிக்காத அளவில் கவனமாகத் தான் நிகழ்த்தப்படுகிறது.
 
இப்பிடியே ஒவ்வொரு பந்தியும் அது வெளிப்படைக்குக் கூறுகின்ற ஒப்பாரிகளிற்கு நேரெதிரான கருத்திற்காய் வாதாடியபடி நீண்டு, 'எல்லாம் எப்படி ஒன்றாகப் பிழைத்தது என்று புரியவில்லை' என்ற வசனம் நங்கூரமாகிறது.
 
அதாவது ஒப்பாரி கிடக்கட்டும், நீ ஒப்பாரி வைக்கிறாய் எனின் நீ இன்னும் இரையாவில்லை, உனக்கு இரை கிடைத்துக்கொண்டிருக்கிறது எனவே நடப்பு உனக்குச் சாதகமாய் உள்ளது, நீ பிழைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படியென்கையில், உன் ஒப்பாரியின் தன்மை தான் என்ன? என்பதாகக் கொள்ளலாமா?
 
ஏதற்கெடுத்தாலும் எதிர்மறையாய் சிந்தித்து எதிர்மறை ஒப்பாரிகளைக் கொட்டுவோர் தiலையில் அவர்கள் பாதையிலேயே சென்று நச்சென்று கொட்டிய கவிதையாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் இன்னுமொருவன்

 

உங்கள் கவிதை வெளிப்படைக்குக் காட்டுகின்ற வெப்பியாரம் புரிகிறது. இருப்பினும் இக்கவிதையினை ஒப்பாரி மீதான கேலிச்சித்திரமாகவே எடுத்துக்கொள்கிறேன்:
 
1) நசிபாடு, திசுக்களின் கிழிதல், நோ, குருதி என்பன இருந்துவிட்டால் அது வன்முறை என்றாகிவிடுமா? உயிர்காக்கும் சத்திரச்சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகவுருவாக்கம் ஆகியவற்றிலும் இவை அனைத்தும் இருக்கின்றன. வன்முறையின் வரைவிலக்கணம் அழித்தலை அங்கமாகக் கொண்டிருக்கவேண்டும். எனது பிறப்பே வன்முறை என நான்கூறின் அதை என்போன்று பிறந்த நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?
 
-வன்முறை என்பது போராட்ட குணமாகவே சித்தரிக்கப்படுகின்றது. அக்குணம் தாய்கும் பிறக்கும் மகவுக்கும் உண்டு.
எனது பிறப்பே வன்முறை என்பதில்லை பிறப்பின் இயல்பு அப்படிப்பட்டது
அழித்தலின் கற்றுக்கொடுப்புத்தான் தடுக்கப்படுகின்றது என்பதுதான் கருவின் ஆதங்கம்.
இப்பிரபஞ்சம் ஒழுங்கானதும் ஒழுங்கற்றதும் என்று முன்பு படித்த ஞாபகம்
இரவும் பகலும் மழையும் வெயிலும் என முரண்கள் தான் படைத்தலின் சூக்குமம். கழையை அழித்தே பயிரை வளர்க்க வேண்டியுள்ளது.
 
 
2) பேப்பர், பேனா, கடவுள் எதனையும் நான் கொண்டுவரவில்லை. ஆனால் இவை பற்றி இவற்றால் நான் எழுதியதை நீங்கள் படிக்கிறீர்களாயின் இவற்றை நான் வந்தபின் தேடிக்கொண்டேன் என்று தானே அர்த்தம். வந்தபின் தேடக்கூடியதை எதற்காக நான் சுமந்துவரப்போகிறேன்? தேடுதற்கான சூத்திரங்களை மட்டும் எடுத்து வந்தேன்.
 
வந்தபின்பு தேடியவைதான் என்பதையே மீள சுட்டிக்காட்டுகின்றேன்.
 
3) நகமும் பல்லும் மட்டும் என்னுடன் வரவில்லை. நகத்தையும் பல்லையும் காலாவதியாக்கும் கருவிகளை உருவாக்கும் மூளையும் கூடவே தான் வந்தது. நகமும் பல்லும் முக்கியத்துவம் குறைந்தமைக்கான காரணம், வெளித்தெரியும் அவற்றைக் காட்டிலும் திறன் மிக்க வெளித்தெரியா சிறப்புக்கள் எனக்குள் மறைந்து கிடக்கின்றன. எனது நகத்தையும் பல்லையும் பாவிக்க விடுகிறீர்கள் இல்லையே என்பதனை நமட்டுச்சிரிப்போடு தான் நான் பாடுகிறேன்.
ஆம். அவை போராட்ட குணத்தின் குறியீடுகள். அவைகள் முடங்குவதும் சரியாக பயன்படுத்த முடியாத நிலையும் வாழ்தலை நிர்மூலமாக்கின்றது.
 
4) இரைதேடக் கற்றுத் தரவில்லை, இரையாகாது தப்பக் கற்றுத் தரவில்லை என்பதை நான் இரையாகாது எனக்கு இரைதேடி உண்டபின் தான் எழுதுகிறேன். 
 
நான் எச்சங்களை பொறுக்கிஉண்கின்றேன் தவிர போராடித் தேடவில்லை.
 
5) என்னோடு கூடப்பிறந்த நகத்திற்கும் பல்லிற்கும் நான் பிறந்தபின் தேடிக்கொண்ட பேனாவும் பேப்பரும் ஈடென்று போதித்தார்கள் என்பததை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். நானெழுதும் தாளினை எனது நகங்கள் சேதப்படுத்தாது, வெளித்தெரியா எனது பலம் கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
 
 
 
6) பற்களையும் நகங்களையும் வைத்துவிட்டு பிச்சையெடு என்கிறார்கள் என்று நான் விழிப்பது என்னைப் போன்று பற்களோடும் நகங்களோடும் பிறந்தவர்களைத் தான். நானும் அடக்குவதற்கு என்வாழ்விலும் மனிதர்கள் உண்டு. எனக்குக் கீழானோரும் நானும் என் எசமானர்களும் பற்கள் பற்றிக் கருத்துப் பகிர முடிவது நாங்கள் பல்லைப் பாவியாமையினால் தான். இல்லையேல் செய்தி வெளிப்படமுன்னர் நாங்கள் செத்துப்போயிருக்க்கக்கூடும்.
 
7) நாகரிகம் என்பது சாவைத் தள்ளிப்போடும் உத்தி என்பதை உணராதோர் முட்டாள்ளகள் என்பது தான் உண்மையான நிலைப்பாடு. நாகரிகபோதனை மீதான விமர்சனம் முட்டாள்களை நோக்கிய நையாண்டி.
 
8) மனிதனின் பலமே சமூகம் என்ற எண்ணிக்கை. கூட்டமாக வேட்டையாடக் கற்றுத்தரவில்லை ஆனால் சமூகமின்றின் புலம்பல் சாத்தியமில்லை. புலம்புவதற்குப் புலம்புவோன் மட்டும் போதாது, கேட்போனும் அவசியம். ஆக நான் கூட்டமாய்த் தான் குப்பை கொட்டுகிறேன். கூட இருப்பவனை இரையாக்குவது சமூகத்தை அழிக்காத அளவில் கவனமாகத் தான் நிகழ்த்தப்படுகிறது.
 
இப்பிடியே ஒவ்வொரு பந்தியும் அது வெளிப்படைக்குக் கூறுகின்ற ஒப்பாரிகளிற்கு நேரெதிரான கருத்திற்காய் வாதாடியபடி நீண்டு, 'எல்லாம் எப்படி ஒன்றாகப் பிழைத்தது என்று புரியவில்லை' என்ற வசனம் நங்கூரமாகிறது.
 
அதாவது ஒப்பாரி கிடக்கட்டும், நீ ஒப்பாரி வைக்கிறாய் எனின் நீ இன்னும் இரையாவில்லை, உனக்கு இரை கிடைத்துக்கொண்டிருக்கிறது எனவே நடப்பு உனக்குச் சாதகமாய் உள்ளது, நீ பிழைத்துக்கொண்டிருக்கிறாய். அப்படியென்கையில், உன் ஒப்பாரியின் தன்மை தான் என்ன? என்பதாகக் கொள்ளலாமா?
 
ஏதற்கெடுத்தாலும் எதிர்மறையாய் சிந்தித்து எதிர்மறை ஒப்பாரிகளைக் கொட்டுவோர் தiலையில் அவர்கள் பாதையிலேயே சென்று நச்சென்று கொட்டிய கவிதையாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.

 

உங்கள் புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றிகள்

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.