Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸாவிலிருந்து வெளியேறும்படி பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை:

Featured Replies

513xNx1_2005884g.jpg.pagespeed.ic.IbzrY6

 

509xNxgaza_2004179g.jpg.pagespeed.ic.NrX

 

 

காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை இஸ்ரேல் மீது 1,200க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல், தனது இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் தகர்த்து விட்டது. பதிலுக்கு இஸ்ரேல் இதுவரை 1,500-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசியுள்ளது.

வேறு வழியில்லை

‘காஸா பகுதியிலுள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் காலை 8 மணிக்குள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும்’ என தொலைபேசித் தகவல் மூலம் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறும்போது, “ஹமாஸுக்கு எதிரான ராணுவத் தாக்குதல் தீவிரப்படுத்தப்படும். போர் நிறுத்தம் இல்லை என்று ஆகிவிட்ட பின் எங்களின் பதில், தாக்குதல் என்பதாக இருக்கும். ராஜீய ரீதியாக தீர்வுகாண்பதுதான் சிறப்பானதாக இருக்கும். ஆனால், ஹமாஸ் எங்களுக்கு வேறு வாய்ப்பைக் கொடுக்கவில்லை. அவர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரிக்கப்படும்” என்றார்.

முன்னதாக, ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு ஸூஹ்ரி எகிப்தின் போர் நிறுத்த சமரச முயற்சியை ஏற்க மறுத்து விட்டார்.

இஸ்ரேல் ராணுவம் 6 மணி நேரம் தனது தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், செவ்வாய்க்கிழமை மீண்டும் ராக்கெட்களை வீசி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

தலைவர் வீடுகளுக்கு குறி

ஹமாஸ் இயக்கத்தினரின் முக்கியத் தலைவர்களின் வீடுகளைக் குறிவைத்து, இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் தொடுத்து வருகிறது.

போரா, பொழுதுபோக்கா?

இஸ்ரேல்- ஹமாஸ் தாக்குதலால் ஏராளமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேல் பகுதி மக்கள் இரு தரப்பு தாக்குதல்களையும் பொழுதுபோக்கு போன்று மலையுச்சியில் அமர்ந்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக, ஸ்டெராட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலியர்கள் அருகிலுள்ள மலையுச்சிக்குச் சென்று, நாற்காலி, சோபா ஆகியவற்றைப் போட்டு, அங்கு நொறுக்குத் தீனிகளைத் தின்றபடி, ராக்கெட் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணைகள் இடைமறித்துத் தாக்கப்படுவதையும், இஸ்ரேல் மற்றும் காஸா பகுதிக்குள் ராக்கெட்டுகள் விழுந்து சேதம் ஏற்படுத்துவதையும் அவர்கள் தொலை நோக்கி உதவியுடன் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6219268.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்
குறிப்பாக, ஸ்டெராட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலியர்கள் அருகிலுள்ள மலையுச்சிக்குச் சென்று, நாற்காலி, சோபா ஆகியவற்றைப் போட்டு, அங்கு நொறுக்குத் தீனிகளைத் தின்றபடி, ராக்கெட் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பொழுது சிறிலங்காவிலும் சில மக்கள் கிறிபத் சாப்பிட்டிச்சினம்..இவங்கள் நொறுக்குத்தீனி சாப்பிடியினம்......ஒரு இனம் அழியும் பொழுது இன்னொரு இனம் மகிழ்வடைவது இயற்கை விதியோ?
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாசும்.. புலிகள் போல.. கொஞ்சம் மனிதாபிமானம் காட்டினம் போல. இல்லாட்டி உந்த மலை உச்சிக்கு நாலு ரொக்கட்டை விட்டால்.. எல்லாம்.. குய்யா மய்யோ என்று கால் தெறிக்க ஓடும். தெற்கில் சிங்களவர்களை நிம்மதியாக வாழ விட்டதால் தான்.. தமிழனின் வலி அவங்களுக்கு சரியாகப் புரியவில்லை..! இன்னொரு பிரபாகரன் வந்தால் நிச்சயம்.. இந்த தவறை செய்யமாட்டார். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்டெராட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரேலியர்கள் அருகிலுள்ள மலையுச்சிக்குச் சென்று, நாற்காலி, சோபா ஆகியவற்றைப் போட்டு, அங்கு நொறுக்குத் தீனிகளைத் தின்றபடி, ராக்கெட் தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

 

கார்கில் போரில் இரு ராணுவமும் மோதிக் கொண்டன...இந்த மோதலை அப்படியே டிவி யில் காட்டினார்கள்....ஆனால் பட்டாசு வெடி வெடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது....மக்கள் போராடிக்குது என்று வழக்கம் போல சினிமா பக்கம் போய்விட்டார்கள்...

 
இங்கே என்னடாவென்றால், பாலஸ்தினீய அப்பாவி மக்கள் மீது வீசப்படும் குண்டுகளை நொறுக்கு தீனியுடன் கண்டு களிக்குமாறு தூண்டப்பட்டுள்ளனர் இஸ்ரேலிய மக்கள்....
 
கொல்லப்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள்..பெண்கள்...முதியவர்கள் பற்றி கவலைபடுவதற்குப் பதில்.... கொல்லப்படும் மக்களை ரசிக்கும் இவர்களை பற்றி என்ன சொல்வது...?
 
- சங்கிலிக்கருப்பு - 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.