Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் போர்த்தந்திரம் குழம்பும் சிங்களத் தளபதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் போர்த்தந்திரம் குழம்பும் சிங்களத் தளபதிகள்

இலங்கையில் போர் நிறுத்தம் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தமும் அமைதிக்கான முயற்சிகளும் அனைத்துலக கண்காணிப்புடன் நடைபெற்றுவரும் காலக்கட்டத்தில் சிங்கள இராணுவ விமானங்கள் தொடர்ந்து திரிகோணமலை, மாவிலாறு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு இதைக் கண்டித்துத் தாக்குதலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதைச் செய்யவில்லை.

மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்ற போர்வையில் சிங்கள இராணுவம் கீழ்க்கண்ட இலக்குகளை அடைய முற்பட்டது.

1. மாவிலாறு பகுதியைக் கைப்பற்றுவது.

2. இதன் மூலம் இராணுவத்தின் கை மேலோங்கியிருப்பதாக சிங்களர் நடுவில் பிரச்சாரம் செய்தல்.

3. ஜே.வி.பி., சிங்கள உருமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகளைத் திருப்திப்படுத்துதல்.

4. மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகளின் தளபதி கர்னல் பானுவைக் கொலை செய்வது.

5. முல்லைத் தீவில் அமைந்திருப்பதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் விமான ஓடுபாதையை அழிப்பது.

மேற்கண்ட 5 நோக்கங்களை மனதில் கொண்டுதான் மாவிலாறு நீர்ப்பிரச்சினையைக் கிளப்பி தனது இராணுவ நடவடிக்கைகளை சிங்கள அரசு தொடங்கியது. ஆனால் இராணுவத்தின் படையெடுப்பை புலிகள் முறியடித்ததுடன். பெரும் இழப்புகளையும் அவர்களுக்கு ஏற்படுத்தினர்.

அடுத்து கிழக்கு மாநில சிங்களக் கடற்படைத் தலைமையகத்தைத் தாக்கி அதை புலிகள் செயலிழக்க வைத்தனர். இந்தத் தாக்குதல்கள் சிங்கள இராணுவத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டன. திரி கோணமலை துறைமுகத்தின் எதிர்புறம் உள்ள சம்பூரில் உள்ள தங்கள் நிலைகளிலிருந்தே பீரங்கித் தாக்குதல்கள் மூலம் கடற்படைத் தளத்தை புலிகள் அழித்திருந்தனர். தொலைதூரத்தில் இருந்து தாக்குதல் நடத்தும் வலிமைபெற்ற கனரக பீரங்கிகளை திரிகோணமலை மாவட்டத்திற்கு புலிகள் எவ்வாறு நகர்த்தினார்கள் என்பது புரியாமல் சிங்கள இராணுவத் தளபதிகள் திகைத்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீளுவதற்குள்ளாக. விடுதலைப் புலிகளின் படையணிகள் துறைமுகம் அமைந்துள்ள கொட்டியாரா குடாவின் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்குப் பகுதியான மூதூரில் இறங்குதுரை, மூதுர் நகரம், கட்டைப்பறிச்சான், தோப்பூர் போன்ற பகுதிகளை அதிரடித் தாக்குதல்கள் மூலம் கைப்பற்றிவிட்டார்கள். தற்போது திரிகோணமலைத் துறைமுகத்தின் முழுப்பகுதியும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் எல்லைக்குள் வந்துவிட்டது.

சீனன் குடா படைத்தளம் சிறிய விமானப்படைத் தளத்தைக் கொண்ட கூட்டுப்படைத் தளமாகும். திரிகோணமலைத் தளத்தின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பின்தளப் பகுதியாகும். தற்போது திரிகோணமலைத் தளமும் சீனன் குடா படைத்தளமும் செயல் இழந்து போகும் நிலையில் உள்ளன. இந்தத் தளங்களின் இழப்பு கிழக்கு மாநிலத்தை மட்டுமல்ல வடக்கில் யாழ் குடா நாட்டில் உள்ள நாற்பதினாயிரம் படையினரையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்கும் பாதையும் அதன் பின்தளமும் திரிகோணமலை கடற்படைத் தளம்தான்.

எனவே இந்தத் துறைமுகத்தின் அழிவு தொடர்ந்து பல அழிவுகளை ஏற்படுத்து:ம். திரிகோணமலை கடற்படைத் தளம் வீழ்ந்தால் யாழ் குடா நாடு வீழ்ச்சியடையும். யாழ்குடா வீழ்ந்தால் சிங்கள அரசின் போரிடும் வலிமை முற்றாக அழிந்துபோகும். எனவே தற்போது எப்படியா வது மூதூர்ப் பகுதியை மீட்டுவிடவேண்டும் என்று சிங்களப்படை கடும்முயற்சியில் இறங்கியது. ஆனால் இதை எதிர்ப்பார்த்துத் தயார் நிலையில் இருந்த புலிகள் இந்தத் தாக்குதலை எளிதாக முறியடித்ததுடன். படையினருக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளனர். கடற்படையின் தரை யிறங்கும் கப்பல் மூழ்கடிக்ககப்பட்டதுடன். கொல்லப்பட்ட படையினரின் 40 சடலங்களும் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புலிகளின் முன்னணித் தளபதிகளான சொர்ணம், கர்னல் பானு ஆகியோர் திரிகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் முன்கூட்டியே அனுப்பப்பட்டிருந்தனர். அத்துடன் மக்கள் படையணியும் உருவாக்கப்பட்டிருந்தது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முன்னேற்பாடுகளைச் செய்திருந்ததால் சிங்களரின் தாக்குதலை எளிதாக முறியடிக்க முடிந்தது.

விடுதலைப் புலிகளின் போர்த்தந்திரம் என்ன என்பதையே புரியாத நிலையில் சிங்கள இராணுவத் தரப்பு தடுமாறுகிறது. மாவிலாறு அணையைக் கைப்பற்றவேண்டும் என்று திட்டமிட்டு இராணுவத் தொகுதி ஒன்றையே சிங்கள இராணுவம் அனுப்பியது. அந்த இராணுவம் அங்கிருந்து திரும்ப முடியாமல் முடக்கப்பட்டுள்ளது. இதைப்போல சம்பூர் பகுதியிலும் மற்றொரு இராணுவத் தொகுதி முடக்கப்பட்டுள்ளது.

மண்டைத் தீவில் தாக்குதலை மேற்கொண்ட கடற்படையினர் பின்வாங்கி ஓடியபோதும் அங்கு நிலைகொள்ளாமல் அந்தத் தளத்தை அழித்துவிட்டு புலிகள் திரும்பினார்கள். முகமாலையில் இராணுவத்தின் முன்னரணை முற்றிலுமாக அழித்துவிட்டு பிறகு திரும்பினார்கள். இதெல்லாம் ஏன் என்பது புரியாமல் இராணுவத் தரப்பு பெரும் குழப்பத்தில் அழ்ந்துள்ளது.

போர்நிறுத்தத்தை சிங்கள இராணுவம்தான் அப்பட்டமாக மீறியுள்ளது என்ற உண்மையை விடுதலைப்புலிகள் சர்வதேச சமுதாயத்தின் முன் அம்பலமாக்கியிருக்கிறார்கள். சர்வதேச சமுதாயம் இதில் தலையிட்டு சிங்கள அரசைக் கண்டிக்காவிட்டால் புலிகள் பதிலடி கொடுக்கும்போது அதை யாரும் குற்றம் சொல்ல முடியாது.

விடுதலைப் புலிகளின் வலிமை 2002ம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது ஆள் எண்ணிக்கையிலும் சரி, படைக்கல வலிமையிலும் சரி அதிகமாயிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏற்கனவே சிங்கள இராணுவத்தை பல முனைகளில் புலிகள் படுதோல்வியடையச் செய்திருக்கிறார்கள். சிங்களக் கடற்படையை கடற்புலிகள் தாக்கி சின்னாபின்னாமாக்கியிருக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.