Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் அமைதிப் பேச்சுக்களிலிருந்து ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலங்குகிறது: இந்திய அதிகாரிகள்

பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலகிச் செல்லுகிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிப்பதாக "ஏசியா ரைம்ஸ்" ஓன்லைன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கட்டுரையின் தமிழ் வடிவம்:

சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கொழும்பில் தனது தூதரக அதிகாரியை கொல்ல இந்திய உளவு நிறுவனம் முயற்சித்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வரும்நிலையில், தமிழர் பிரதேசங்கள் மீதான விமானக் குண்டு வீச்சில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து இந்திய ஆய்வாளர்கள் கவனமெடுக்கின்றனர்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மையப் பகுதியில் கடந்த ஓகஸ்ட் 14ஆம் நாள் குண்டுவெடிப்பு நடைபெற்றது. அதில் 7 பேர் கொல்லப்பட்டனர். சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக இருந்த பசீர் வலி மொகமெட்டை இலக்கு வைத்து அக்குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இருந்த போதும் அவர் காயமின்றி தப்பியுள்ளார். அவரது 4 சிறிலங்கா பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான இராணுவ கூட்டுறவினால் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு வாரங்கள் கழித்து, கொழும்பிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பிய பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான பசீர் வலி மொகமெட், ஓகஸ்ட் 14 ஆம் நாள் நடந்த குண்டு வெடிப்புச்சம்பவத்துக்கு இந்திய "றோ" தான் காரணம் என்று குற்றம்சாட்டினா. "மூன்றாவது ஒருநாட்டில் நிழல் போரை "றோ" தொடங்கியிருப்பதாக" அவர் குற்றம்சாட்டினார்.

"சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு வளர்ச்சியடைவது குறித்து கவலைகொண்டிருக்கிறது கொழும்பில் உள்ள இந்திய தூதுவரகம்" என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர் ஏசியா ரைம்ஸ் ஓன்லைன் செய்தியாளரிடம் கூறுகையில்,

"சிறிலங்கா அரசாங்கமானது பாகிஸ்தான் உள்ளிட்ட எந்த ஒரு நாட்டிடமிருந்தும் ஆயுதக்கொள்வனவு செய்வதில் இந்தியாவுக்கு எதுவித பிரச்சனையும் இல்லை. அது சிறிலங்கா நாட்டவருக்கானது. ஆனால் புதுடில்லியின் கவலை என்னவெனில் பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவுக்குமான உறவு ஆழமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது மேலும் மேலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களிலிருந்து விலகிச் செல்கிறது" என்றார்.

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்குமான பாதுகாப்பு உறவானது நீண்டகாலமாக இருப்பினும் அண்மைக் காலங்களில் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது. சிறிலங்காவுக்கு பாரிய அளவில் ஆயுதக்கொள்வனவு செய்யும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாக உள்ளது.

ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி அறிக்கையின்படி, 60 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதக் கொள்வனவுக்குரிய பட்டியலை பாகிஸ்தானிடம் சிறிலங்கா கொடுத்திருந்தது. சிறிலங்கா விமானப் படைக்குரிய தளபாடங்கள் மதிப்பு மட்டும் 38.1 மில்லியன் டொலர்.

அண்மைய ஸ்ட்ராட்பொர் அறிக்கையின்படி சிறிலங்காவுக்கு 110 மில்லியன் டொலர் மதிப்பிலான 22 அல்-ஹாலித் டாங்கிகளை சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகள் மீதான விமானக் குண்டுவீச்சுக்களில் பாகிஸ்தானின் விமானப் படை அதிகாரிகள் நேரடியாக இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"4 அல்லது 5 பாகிஸ்தான் விமானப் படையினர் உட்பட 12 முதல் 15 வரையிலான பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொழும்பில் முகாமிட்டு சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழிகாட்டுகின்றனர்" என்று இந்திய றோவின் முன்னாள் அதிகாரி பி. இராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

"தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வான் தாக்குதல்களை சிறிலங்கா விமானப்படையினர் நடத்துவதற்கு பாகிஸ்தானிய விமானப் படையினர் வழிகாட்டுகின்றனர். வானிலிருந்து பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளை வீசுவதன் மூலம் தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலக்கு வைக்கின்றனர்" என்றும் பி. இராமன் கூறியுள்ளார்.

அண்மைய மாதங்களாக தமிழர் பகுதிகளில் சிறிலங்கா விமானப் படை தொடர்ச்சியாக விமானக் குண்டு வீச்சை நடத்தி வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகள் மீதுதான் வான்குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் தமிழ் மக்களின் குடியிருப்புகள் மீதான விமானக் குண்டு வீச்சுக்களே அதிகம் நடந்துள்ளன. இந்த நடவடிக்கையில் குழந்தைகள் உட்பட பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் 14ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப் படையினர் ஆதரவற்றோர் இல்லம் மீது நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 61 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

"வான் வழித் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதலை மட்டும் பாகிஸ்தானியர்கள் மேற்கொள்ளவில்லை. சிறிலங்கா விமானப் படையின் ஜெட் விமானங்களை பாகிஸ்தானிய விமானிகளே ஓட்டிச் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன" என்று இந்திய அதிகாரி தெரிவித்தார். இத்தகைய விமானிகளால்தான் குடியிருப்புக்கள் மீது குண்டு வீசப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இந்திய அதிகாரி தெரிவித்தார்.

அதற்கு முன்னதாகவே பாகிஸ்தானிய ஈடுபாடு இருந்திருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் நம்புகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்நெட் இணையத்தளத்தில் 1997 ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியான செய்தி ஒன்றில், "சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் தலையீட்டை உறுதி செய்திருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்" என்றும் "சிறிலங்காவின் அனுராதபுரம் இராணுவ தலைமையகத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்றனர்" என்றும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.

"சிறிலங்கா- பாகிஸ்தான் இடையேயான இராணுவ உறவு தொடர்பில் இந்தியா ஆச்சரியம் கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் - சிறிலங்கா உறவானது வேறு ஒரு தளத்தில் உள்ளது" என்றும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கு எதிரான நிழல் போரை பாகிஸ்தான் தீவிரமாக நடத்தி வரும் ஜம்மு - காஸ்மீரில் கூட இந்தியா வான்குண்டுத் தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தானில் பலூச் மக்களைப் போல் இலங்கையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானின் இராணுவ வலிமையை சிறிலங்கா பயன்படுத்துகிறது. அதற்குப் பதிலாக இந்தியாவின் தென்பகுதி நுழைவாயிலில் பாகிஸ்தானை உட்கார வைக்க சிறிலங்காவின் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை கவலை கொள்ளச் செய்தியிருக்கிறது.

பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை பல ஆண்டுகாலமாக பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது சிறிலங்காவில் செயற்படுத்துகிறார்கள்.

சிறிலங்காவின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஆதிக்கம் குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது. சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவராக ஏர் வைஸ் மார்சல் செக்சட் அஸ்லம் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் விமானப் படையின் ஓய்வு பெற்ற விமானப் படை பிரதி தளபதி. பலுசிஸ்தான் பிரதேசங்கள் மீதான கடந்த ஆண்டு வான்வழித் தாக்குதல்களை வடிவமைத்தவர் அவர் என்று நம்பப்படுகிறது. அத்தகைய ஒரு நடவடிக்கையில்தான் பலூச் தலைவர் நவாப் புக்தி கொல்லப்பட்டார். அவரது அனுபவத்தை கொழும்பு இப்போது பயன்படுத்த உள்ளது.

சிறிலங்காவின் இராணுவ சாகசங்களை அங்கீகரிக்க முடியாத நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவினால் ஆதரிக்க முடியாது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்க உள்ளார். அத்தகைய சந்திப்பு நடைபெறும் போது அது இந்தியத் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான முதலாவது சந்திப்பாக இருக்கும். இதனால் இந்தியாவின் இலங்கை நிலைப்பாட்டில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் இந்தியா சிறிதளவு செய்ய முடியும். சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் முடிவுக்கு வரும் நிலையில் அதனடிப்படையில் இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொள்ளலாம். அது பாகிஸ்தான் தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பிலான கண்களைத் திறக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.