Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார்: முன்னாள் உள்துறைச் செயலர் புத்தகத்தில் திடுக்கிடும் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

newPic_740_jpg_2048449h.jpgராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார்.

இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது:

1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார். சோனியா காந்தியும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ராஜீவுக்கு நெருக்கமானவர்கள் அந்த உளவாளியிடம் முக்கிய மான தகவலை பரிமாறியி ருக்கக்கூடும் என்று கருதுகிறேன். எனினும் என்னால் அந்த உளவாளியை அடையாளம் காண முடியவில்லை.

இவ்வாறு பிரதான் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article6298118.ece#comments


இதில் சில கருத்துகள்.

THAYALAN  

அப்படி ஒரு ஒற்றன் இருந்தான் என்றால் இவரும் பாதுகாப்பு குறைபாட்டுக்கு முக்கிய காரணம். இவரையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும்.

about 4 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)

   

P.Padmanabhan  

"ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார். சோனியா காந்தியும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்." ஆனால இவரே " ராஜீவுக்கு நெருக்கமானவர்கள் அந்த உளவாளியிடம் முக்கிய மான தகவலை பரிமாறியி ருக்கக்கூடும் என்று கருதுகிறேன். எனினும் என்னால் அந்த உளவாளியை அடையாளம் காண முடியவில்லை." என்றும் சொன்னால் எப்படி? அப்புறம் இதிலே என்ன திடுக்கிட உள்ளது? இதெல்லாம் திரு.நட்வர் சிங் அவர்கள் வெளியிட்டுள்ள ராஜீவின் வடுதலை புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்த குறைகளையும் , அன்றய சிங்கள நாடு அதிபர் ஜெயவர்தனே -விடம் ராஜீவ இளிச்சவாய் தனமாக ஏமாந்ததையும் மறைக்க எழுதப்பட்டது என்று நான் கருதுகிறேன்!!! (வாங்க நண்பர் ஆர். சுப்ரமணியம் ! ஒரு பிடி பிடியுங்க சார்-"கொஞ்சமாவுது உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா ? .துளியாவது மனிதாபிமானம் இருக்கா? ..மண்ணை வாரி தூற்றி சாபம் இடுவேன்!. மனசாட்சி குற்ற உணர்வு இருக்கிறதா? .. வயிறு எரிந்துசாபம் கொடுபேன்! ." !

Points
10390

about 4 hours ago ·   (4) ·   (0) ·  reply (0)

   

amjath  

ஆர்.டி. பிரதான் கொடுத்த இந்த தகவல் தஞ்சாவூர் கல் வெட்டில் பொரிக்க பட வேண்டிய ஒன்று...400 வருடம் கழித்து வரும் நம் சந்ததிகள் படித்து பயன் பெரும் வகையில் வெளி இட்டுள்ளார்.. து..சக்தி மிக்க ஆண்மை மிக்க ஒரு தலைவரை பரி கொடுத்து விட்டு... தனது சந்தேகத்தை 25 வருடம் கழித்து வெளி இடுகிறார் .. இவர் தான் தேச துரோகி..

about 4 hours ago ·   (10) ·

  • கருத்துக்கள உறவுகள்

"இவர் தான் தேச துரோகி...." இவர் தான் அந்த உளவாளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.