Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கை" - வலி சுமந்த உண்மைகளும் அழகான கனவுகளும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல், ஆட்சிச் சூழல் மீண்டும் கொதிநிலையில் இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் இலங்கை மீதான விசாரணை, அந்த விசாரணைகளுக்கு சாட்சியங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பகிரங்க அறிவிப்பு என்ற விடயங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை அதிகளவில் கோபம் கொள்ள வைத்திருக்கிறது.

அதன் வெளிப்பாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வார்த்தைகளினூடாகவே வெளிப்பட்டிருக்கிறது. அது, “இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. ஆனால், அவர்கள் (த.தே.கூ) இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன், அம்மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால், அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்” என்றவாறாக அமைந்தது.

இலங்கை ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகள் கலந்து கொண்ட சந்திப்பொன்றிலேயே மேற்கண்ட கூற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருக்கிறார். ஊடகங்களிடமும், ஊடகவியலாளர்களிடமும் இவ்வளவு பதற்றமான வார்த்தைகளோடு அவர் பேசுவது குறைவு. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அல்லது செயற்பாடுகள் அவரை மிகவும் சோர்வடைய வைத்து கோபப்படுத்தியிருக்கின்றது. அதனை அவ்வாறுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முறித்துக் கொண்டது. அரசாங்கம் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்து நாட்டுக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாமல், ஒன்றுபட்ட இலங்கைக்குள், நியாயமான, நிரந்தரமான, நடைமுறைபடுத்தக் கூடியத் தீர்வுகளை அது முன்வைத்தால் நாம் ஏற்றுக் கொள்ளுவோம். பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் நோக்கம் குறித்து நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம்.  அது தொடர்பில், அரசாங்க தரப்பில் வெளியாகியுள்ள கருத்துக்கள் எமக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை” என்றுள்ளார்.

இலங்கை அரசியல் பிணக்குகள் அல்லது இனப்பிரச்சினைகள் ஆரம்பித்த காலம் முதல் அப்போதைய அரசாங்கங்களுக்கும்- பிரதான தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இவ்வாறான அல்லது ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டும் தோரணையிலான கருத்து வெளிப்பாடுகளே அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. மற்றப்படி, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும், அதில் எழுதப்பட்ட விடயங்களும் அப்படியே காணாமற்போயிருக்கின்றன. இலங்கையில் காணாமற்போதல் என்பது மிகவும் சாதாரணமான விடயமாக மாறிவிட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எச்சரிக்கையையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிலையோ அவ்வளவு முக்கியத்துடன் நோக்க வேண்டியதில்லை. ஏனெனில், அவை, இரண்டு மூன்று நாட்கள் ஊடக பரபரப்புக்குப் பின் அடங்கிவிடும். அதன் தாக்கம் அவ்வளவுதான்.

ஆனால், இன்னொரு புறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அல்லது தைரியமான நடவடிக்கையாக, இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளுக்கான சாட்சியங்கள், ஆதாரங்களைச் சேகரிப்பதைக் கொள்ள முடியும். ஏனெனில், போவதற்கு வேறு வழியின்றி இருக்கின்ற தமிழ் மக்களுக்கு தீர்வொன்றை முழுமையாக தந்துவிடாது என்ற போதிலும், மழைகாலத்தில் முளைக்கும் சிறுசெடிகள் போல சிறு நம்பிக்கையை ஐக்கிய நாடுகளின் விசாரணை அளித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த விசாரணைகளுக்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் சேகரிப்பு அல்லது அவற்றை விசாரணைக்குழுவிடம் சேர்ப்பிப்பது என்பது வரவேற்கப்பட வேண்டியதுதான்.

“மக்களுக்கு உண்மையான விடுதலையை கொடுக்க வேண்டும். கடைசியாக ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். உண்மையும், நீதியும் இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இல்லை. தீமை செய்யாத மனிதர்களுக்கு முன்பாக தீமை செய்தவர்கள் வந்து தமது குற்றங்களை ஒப்புக்கொண்டு இரண்டு பகுதியினரும் அழுது கட்டிக்கெஞ்சக்கூடிய நிலைமை ஏற்படும் போது தான் உண்மையான நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானம் ஏற்படும்” என்றொரு கூற்றை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வெளியிட்டிருந்தார்.

காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜராகிய அவர், “ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை“ என்று தெரிவித்து சாட்சியங்களை அளிக்க மறுத்த பின் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்தே அது. அந்தக் கருத்து (இலங்கை) நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஆனால், ஏதாவது ஆச்சரியங்கள் நிகழ்ந்து அது சாத்தியப்பட்டால், ஐக்கிய நாடுகளின் விசாரணை, சர்வதேச அழுத்தங்கள் இன்றி நாடு சமாதானமடையும். அப்போது, புஞ்சிநிலமேயும், புண்ணியமூர்த்தியும் கைகோர்த்து நடக்கலாம். சம்பந்தமும் செய்யலாம். இனநல்லிணக்கத்துடன் வாழலாம். இந்தக் கனவுகள் உண்மையில் எவ்வளவு அழகாக இருக்கின்றன. கனவுகள் என்றைக்குமே யதார்த்தத்தோடு ஒன்றிப்போவதில்லை என்பதுதான் வலிக்கின்ற உண்மை!

http://www.4tamilmedia.com/special/news-review/25050-2014-08-11-07-05-57

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.