Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார்

Featured Replies

பாகிஸ்தான் பவுலர் சயீத் அஜ்மல் பந்துவீச்சு மீது புகார்
 

 

சந்தேகத்திற்கிடமான முறையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசுகிறார் என்று ஐசிசி-யிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி அவர் 21 நாட்களுக்குள் பரிசோதனைக் கூடத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம் என்று ஐசிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் இருந்த ஆட்ட அதிகாரிகள் அஜ்மல் வீசிய பல பந்துகள் விதிமுறைகளை மீறியதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த புகார் அறிக்கையை பாகிஸ்தான் அணி மேலாளர் மொயின் கானுக்கும் அனுப்பியுள்ளனர்.

இது அஜ்மல் மீதான 2வது புகாராகும். முன்னதாக 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது தூஸ்ரா பந்து வீச்சு மீது புகார் எழுப்பப்பட்டு பின்பு அவரது பந்து வீச்சு முறையாக இருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article6304221.ece

 

  • தொடங்கியவர்

சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக எழுந்த புகாரின் பின்னணியில்...
 

 

பாகிஸ்தான் புதிர் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீசும் போது கணிசமான பந்துகளை த்ரோ செய்கிறார் என்று புகார் எழுந்துள்ளதன் பின்னணியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருக்கலாம் என்று செய்தி வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

ஆஸ்திரேலியா, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சயீத் அஜ்மல் சிறப்பாக வீசி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 36 விக்கெட்டுகளை 19.61 என்ற சராசரியில் எடுத்துள்ளார் சயீத் அஜ்மல்.

 

மைக்கேல் கிளார்க் தலைமையில் ஆஸ்திரேலியா அணியை மீண்டும் வெல்ல முடியாத ஒரு அணியாகக் கட்டமைக்க ஆஸ்திரேலியா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா அணி துபாய் வருகிறது. ஆகவே அஜ்மல் மீது இந்தத் திடீர் மற்றும் அகாலப் புகாரின் பின்னனியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இருக்கலாம் என்று கிரிக்கெட் ஆட்டத்தின் சில தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சயீத் அஜ்மல் த்ரோ செய்வதாக புகார் எழுப்பிய நடுவர்கள் இயன் கோல்ட் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களாக இருக்க, புரூஸ் ஆக்ஸென்போர்டு என்ற நடுவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது தற்செயலானதல்ல என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தைச் சேர்ந்த சிலர் கருதுகின்றனர்.

மேலும் இலங்கை வென்ற கால்லே டெஸ்ட் போட்டியில் நடுவர்கள் 12 தவறான தீர்ப்புகளை வழங்கினர். காரணம் அவரது கவனம் அஜ்மலை நோட்டம் விடுவதிலேயே இருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

 

இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் கூட மே மாதம் 21ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவில் ‘பரிசோதனைச் சாலையில் இவர்கள் சரியாக வீசி விட்டு தங்கள் பந்துவீச்சிற்கு அங்கீகாரம் வாங்கி விட்டு மைதானத்தில் மீண்டும் பழைய முறையிலேயே வீசினால் யாருக்குத் தெரிந்து விடப்போகிறது” என்று அஜ்மல் கவுண்டி போட்டி ஒன்றில் 19/7 என்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதற்கு பிராட் கேலிப் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியதும் நினைவிருக்கலாம்.

அஜ்மல் இதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார். அதாவது வர்ணனையாளர்கள் ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்கள், ஆனால் ஆடும் ஒரு வீரர் சக வீரரைப் பற்றி இவ்வாறு கூறலாமா? என்று வருத்தம் தெரிவித்திருந்தார்

 

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இப்போது ஐசிசியின் நிர்வாகப் பொறுப்பை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சு என்ற விஷயம் ஊதிப் பெருக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சேனநாயகே, நியூசிலாந்தின் வில்லியம்சன், தற்போது அஜ்மல் ஆகியோர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.

மொயீன் அலி வீசும் லாலிபாப் ஸ்பின்னிற்கே மடிந்து போகும் இந்திய அணி பாகிஸ்தானுடன் சில டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களைத் தொடர்ந்து விளையாடவிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக உலகக் கோப்பை கிரிக்கெட் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

 

இந்த நிலையில் அஜ்மலைக் கொஞ்சம் மனோவியல் ரீதியாக கவலைக்குட்படுத்தினால் அவரை நொய்மையாக்கி விடலாம் என்று மற்ற அணிகள் நினைக்கிறது என்ற விமர்சனங்களையும் முற்றிலும் மறுப்பதற்கில்லை.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article6308583.ece

  • 3 months later...
  • தொடங்கியவர்

சைட் அஜ்மலின் பரிசோதனை தோல்வி
ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014

பாகிஸ்தான் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல் உத்தியோகபற்றற்ற பரிசோதனையில் தோல்வியடைந்த்துள்ளார். சைட் அஜ்மல் இங்கிலாந்தில் உத்தியோகபூர்வ பரிசோதனை செய்வதற்கு முன்னர் குறித்த பரிசோதனையை, உயிரியல் இயந்திர தொழில்நுட்பத்தின் மூலம் சைட் அஜ்மல் பரிசோதனை செய்து கொண்டார். ஆனாலும் இந்த பரிசோதனை அவருக்கு தோல்வியை வழங்கியுள்ளது. இந்த அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து சைட் அஜ்மலை மேலும் ஒரு வார காலம் இங்கிலாந்தில் தங்கி அவருக்கு பயிற்சிகளை வழங்கிய சக்லைன் முஸ்டாகிடம் பயிற்ச்சிகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

குறித்த பரிசோதனையில் சர்வதேசக் கிரிக்கெட் சபைக்காக சோதனைகளை மேற்கொள்ளும் வைத்திய நிபுணர் மார்க் கிங் அவரின் குழுவினருடன் இணைந்து குறித்த சோதனைகளை மேற்கொண்டார். இந்த சோதனையில் 18 வீடியோ படப்பிடிப்பு கருவிகளை வைத்து குறித்த சோதனைகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் மீள பந்துவீச அஜ்மலால் முடியும் என அனைவரும் நம்பி இருந்த போதும். இந்த சோதனையில் அவர் தொல்வியடைந்துள்ளது அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உலகக்கிண்ணத்திற்கு அஜ்மலை தயார் செய்ய முயற்சித்து வருகின்றது. ஆனாலும் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் தோல்வியை ஏற்படுத்தியுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/133562-2014-11-16-06-42-18.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எறிகிறார் என்பதாகவே நானும் உணர்ந்துள்ளேன். பலகாலமாக தப்பிப் பிழைத்துள்ளார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தனது பந்துவீச்சு பாணி குறித்து சயீட் அஜ்மால் திருப்தி
 

 

தனது பந்துவீச்சு பாணியை சீர்படுத்தும் முறைகள் குறித்து திருப்தி அடைவதாக பாகிஸ்தான் சுழல்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மால் தெரிவித்துள்ளார்.


2015 உலகக் கிண்ணப் போட்டிகளின் மூலம் சர்வதேச அரங்கில் மீள் பிரவேசம் செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் லூபரோவில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பந்துவீச்சு ஆய்வு நிலையத்தில் சீர்படுத்தும் பயிற்சிகளில் உத்தியோகப்பற்றற்ற வகையில் அஜ்மால் ஈடுபட்டுவந்தார். அவரது முழங்கை 15 பாகைக்கு மேல் வலைகின்றபோதிலும் அவரது பந்துவீச்சுப் பாணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக டொக்டர் மார்க் கிங் தெரிவித்துள்ளார்.


"டொக்டர் மார்க் கிங் எனது பந்துவீச்சு பாணி குறித்து ஆய்வு நடத்தியுள்ளமை எனக்கு திருப்தி தருகின்றது. எனது பெரும்பாலான பந்துவீச்சு பாணிகள் குறிப்பிட்ட 15 பாகைக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. எனவே நான் பூரண திருப்தி அடைகின்றேன். பாகிஸ்தான் முன்னாள் சுழல்பந்துவீச்சாளர் சக்லெய்ன் முஷ்தாக்கின் உதவியுடன் உரிய இலக்கை அடைவேன் என நம்புகின்றேன்|| என அஜ்மால் கூறியுள்ளார்.

ஷஷதூஸ்ரா பந்துவீச்சின்போது மாத்திரமே எனது முழங்கை 15 பாகைக்கு மேல் மடிகின்றது. மற்றைய பந்துவீச்சு பாணிகள் யாவும் உரிய விதிகளின் பிரகாரம் அமைந்துள்ளது'' என்றார் அஜ்மால்.

இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியின்போது அவரது பந்துவீச்சு பாணி குறித்து மத்தியஸ்தர்களால் புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியாதவாறு சயீத் அஜ்மாலுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் கடந்த செப்டெம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7842#sthash.qMGDgD3Y.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.