Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காலங்களில் அவள் வசந்தம்

கலைகளிலே அவள் ஓவியம்

மாதங்களில் அவள் மார்கழி

மலர்களிலே அவள் மல்லிகை

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள் ஒரு பச்சைக்குழந்தை

பாடும் பறவை பருவம் பதினாறு

அவன் ஒரு ராஜகுமாரன்

அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்

மேள தாளங்கள் வாழ்த்துதே

அவன் ஒரு ராஜகுமாரன்

அழகிய மாறன் வாழிய பல்லாண்டு

வாழைப்பருவம் கேட்டது கேள்வி

விடைதர இஙகே வந்தன தேவி

இளமையின் ரகசியம்

இதுவென்ன அறிந்தது நெஞ்சம்

போகப்போக புரிவது என்ன

போதை ஏதோ வருவது என்ன

எனக்கென்ன அதிசயம்

எதுவென்ன விளக்கிடு கொஞ்சம்

இன்பத்தில் நீயும் நானும் ஊமையில்லையோ

மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ

நீ இருக்கும் கண்ணில் நானிருக்க வேண்டும்

கண்ணே கண்ணே என்னை ஏற்றுக்கொள்வாயோ

நினவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்

நெஞ்சே நெஞ்சே என்னை ஏத்திக்கொள்வாயோ

அச்சத்தை ஆசை வந்து வெள்ளக்கூடாதோ

அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை

நான் காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்

கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

(நெஞ்சம்)

காலங்கள் தோறும் உன்மடி தேடி கலங்கும் என் மனமே (2)

வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே

நான் காண்பது உன் முகமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா

நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்

பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

கூடுகட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன்

நாடு விட்டு வந்தபோது நானொருவன் பிழைத்து வந்தேன்

பேதை முகம் காணவில்லை தேடி ஓடக் காலுமில்லை

கண்ணெதிரில் பார்த்தபோது கையணைக்க உரிமையில்லை

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

வீணையொன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்

வேறொருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்

இன்று வரை தொட்டதில்லை கைவிரலும் பட்டதில்லை

இன்னொருவன் வீணை இது சுதிலயம்தான் கெட்டதில்லை

வாழ்க.. நீங்கள் வாழ்க..

வாழ்வின்.. இலக்கணமாக..

என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே

வெண்ணிலவைக் காணவில்லை விடிவிளக்கை ஏற்றி வைத்தேன்

விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலவும் வந்ததம்மா

வெண்ணிலாவைக் கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்ததம்மா

நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா

நெய்விளக்கு போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா

இருகரை நடுவினிலே நதி போல் ஓடுகிறேன்

விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன்

இறைவா... என் இறைவா..

இதற்கொரு பதிலைச் சொல் இறைவா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

(நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்தமானிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மன்றத்தில் ஓடி வரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்

நீ சென்றிடும் வழியினிலே

என் தெய்வத்தை காண்பாயோ

என் நெஞ்சின் ராகம் எங்கே எங்கே

நான் போக வேண்டும் அங்கே அங்கே

ஏ.... தென்றலே என்னை நீ கொண்டுபோ

யார் கண்களும் அதை காணாமலே

மேகமே நில்லாமல் போ

படம் : உதயம்

  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வந்து என்னை தொட்டுவிடும்

சத்தம் இன்றி முத்தம் இடும்

பகலே போய் விடு

இரவே பாய் கொடு

  • கருத்துக்கள உறவுகள்

போய்வா நதியலையே ஏழை

இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே

ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்த ஞாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ

வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ

மறந்ததே என் நெஞ்சமோ?

அந்த நீல நதிக்கரை ஓரம்

நீ நின்றிருந்தாய் அந்திநேரம்

நான் பாடி வந்தேன் ஒரு ராகம்

நாம் பழகி வந்தோம் சிலகாலம்!

இந்த இரவைக் கேளது சொல்லும்

அந்த நிலவைக் கேளது சொல்லும்

உந்தன் மனதைக் கேளது சொல்லும்

நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை

இன்று வந்ததே புதிய பறவை

எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை

நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)

  • கருத்துக்கள உறவுகள்

நீல நிறம், நீலநிறம், வானுக்கும் கடலுக்கும்

நீல நிறம், காரணம் ஏன் கண்ணே!

உன் கண்ணோ நீல நிறம்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்

ஏன் எனக்கு என்ன ஆச்சு...

ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு வரட்டல்

ஏன் இந்த மேல் மூச்சு...

ஏ... இந்த நொடி உனக்குள் விழுந்தேன்

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்

கால் விரலில் வெட்கம் அளந்தேன் மறந்தேன்... ஹோ..

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்...

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க...

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட...

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற...

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊ..ட்டிட...

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்...

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்...

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்...

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்....

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம் பூச்சி ஆவோமா...

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா...

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள் கைதி ஆவோமா...

ஆசை குற்றம் நாளும் செய்து சட்டம் மீறம்மா...

லட்சம் மீன்கள் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்..

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்...

எந்த பெண்னை காணும் போதும் உன்னை காண்கிறேன்...

உன்மை காதல் செய்து உன்னை கொல்லப் போகிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம் (2)

(ஆசை)

என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு

பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு

இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக

வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு

இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2)

தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன்

(ஆசை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே - உன்

பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே

அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே - உன்

அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே

(அள்ளி)

முத்துக்களைச் சிந்திச் சிந்தி புன்னகை என்றாய்

மூடி வைத்த தேன் குடத்தைன் அங்கங்கள் என்றாய்

பத்துத் தரம் தொட்டு தொட்டு பாவனை செய்தாய்

பள்ளி கொள்ளும் முன்பு என்ன சோதனை செய்தாய்..

சோதனை செய்தாய்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளி நிலவே வெள்ளி நிலவே

வீண் சோகம் ஏனடி மானே ஏனடி

முல்ளை மலரே முல்ளை மலரே

உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி

  • கருத்துக்கள உறவுகள்

மானே தேனே கட்டிப்பிடி

மாமன் தோளை தொட்டுக்கடி

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா

கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

கையில் வேல் பிடித்த கருனை சிவ பாலனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்

வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்

வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

நீல மயில் தன்னை நெஞ்சமும் மறக்கவில்லை

நேசமுடன் கலந்த பாசமும் மறையவில்லை

கோலக் குமரன் மனக்கோயிலில் நிறைந்து விட்டான்

குறுநகை தனை காட்டி நறுமலர் சூட்டி விட்டான்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடிகையினில்

வேல் பிடித்த கருணை சிவ பாலனை .........

Edited by Kavarimaan

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் வானம்பாடி ஹ..

பாடும் வானம்பாடி ஹ..

மார்கழி மாதமோ

பார்வைகள் ஈரமோ

ஏனோ ஏனோ

(பாடும் வானம்பாடி)

பாவை வண்ணம் கோவில் ஆகும்

பார்வை காதல் பூச்சூடும்

மாலை வண்ணம் கைகள் ஆகும்

சோலைத் தென்றல் தாலாட்டும்

நெஞ்சில் ஆசை வெள்ளம் - ஆஆஆஆ

நெஞ்சில் ஆசை வெள்ளம்

பொங்கும் நேரம் இன்பம்

காற்றோடு நான் பாடவா..

(பாடும் வானம்பாடி)

மேகம் மஞ்சம் போடும் போது

மின்னல் தீபம் ஏந்தாதோ

வானம் மாலை சூடும் போது

தாகம் கொஞ்சம் தீராதோ

தேவி போதும் போதும்- ஆஆஆஆஆ

தேவி போதும் போதும்

நீயே காதல் வேதம்

மோகங்கள் நீராடுது

(பாடும் வானம்பாடி)

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதைக் கடையில் தேனீர் குடிப்பேன்

வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா - அதை

சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி

எழுப்புது எழுப்புது ஏனம்மா?

இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?

நான் புல்லில் உறங்கவா? இல்லை பூவில் இறங்கவா ?

சிட்சிட்சிட் சிட்சிட் சிட்டுக்குருவி

சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?

பட்பட்பட் பட்பட் பட்டாம்பூச்சி

பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?

இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்

கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்

எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்

பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்

அம்மம்மா...

வானம் திறந்திருக்கு பாருங்க - என்னை

வானில் ஏற்றிவிட வாருங்கள்

படம் : ஆசை

வானம் தரையில் வந்து நின்றதே

பூமி நிலவில் புகுந்துகொண்டதே

திசைகள் எல்லாம் திரும்பிக்கொண்டதே

தென்றல் பூக்களைப் பொழிந்துகொண்டதே

விழிகளை வீசிய இளைய கொடி இந்த

விபத்துக்கள் உன்னால் நேர்ந்ததடி

ஒருமுறை அடி ஒரே முறை ஒரு பார்வை பார்

உலகம் சுழலும் மறுபடி

  • கருத்துக்கள உறவுகள்

இளைய நிலா பொழிகிறது! இதயம் வரை நனைகிறது!

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே! விழாக்காணுமே!

வானமே!

(இளைய நிலா)

வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்.

முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்.

வான வீதியில் மேக ஊர்வலம்!

காணும்போதிலே ஆறுதல் தரும்!

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்!

(இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ?

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்!

ஓடுகின்றதே எண்ண ஜாடைகள்!

விண் வெளியில் விதைத்தது யார் நவ மணிகள்?

(இளைய நிலா)

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ

இசையை மலராய் நானும் சூட்டுவேன்

ஆத்ம ராகம் ஒன்றில்தான் வாழும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜவ.. நாடிதான் ராகம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதல்ல

ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல

எனது ஜவன் ஒன்றுதான் என்றும் புதிது

பாடியவர்: S.P.B

  • கருத்துக்கள உறவுகள்

எது சுகம் சுகம்

அது வேண்டும்

அது தினம் வரும்

மீண்டும் மீண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.