Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் மீண்டும் வா

வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி

பாவையோ ஓர் மாதிரி

அழகு ஏராளம்

அதிலும் தாராளம்

ஆண்மையென்னும் வார்த்தை கேட்க

தோற்றம் நீ தானா

தேக்கு மரத்தில் ஆக்கிவைத்த

தேகம் இதுதானா

செந்நிறம் பசும்பொண்ணிறம்

தேவதை வம்சம்

தேய்பிறை விரல் தீண்டினால்

சந்திரன் அம்சம்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக

ஆடிவரும் தீபமென தேவமகள் வாழ்க

இளையமகள் போல வரும் புதியமகள் வருக

இன்பமனை ஆளவரும் அன்புமனம் வாழ்க

பூங்கொடி விளையாட எங்கள் பூமியில் இடமுண்டு

பொன்மணிச் சரத்தோடு வாழ்த்தும் புன்னகை முகமுண்டு

தாய்வழி உறவென்று நினைத்து வாழிய நலங்கொண்டு

தாங்கிட கிளை உண்டு மயிலைத் தழுவிடத் துணையுண்டு

அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே எந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்

ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்

நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து

காய் கணியாகும் நமக்கென வளர்ந்து

படம் : நாளை நமதே

  • கருத்துக்கள உறவுகள்

சோலை குயிலே காலை கதிரே

அள்ளும் அழகே துள்ளும் ராகமே

துள்ளும் ராகமே

வண்ண தேன் கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா...

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

வண்ணப் பூங்காவைப்போல் எங்கள் வீடல்லவா

எங்கள் பொன் மாதா பூக்களுக்கும் தாயல்லவா

இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே

அண்ணன்களோ எந்தன் உயிர்தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத் தேனே

மானே இள மானே

நீதான் செந்தாமாரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை

ஆரீராரோ

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே

ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே

நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம்

மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலம்

ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே

பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே

பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா

தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா

ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

  • கருத்துக்கள உறவுகள்

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்

கை தேடுதே சொர்க்கம் கண் மூடுதே வெட்கம்

பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம்

(ராஜாவின்)

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே

பூரண நிலவோ புன்னகை மலரோ

அழகினை வடித்தேன் அமுதத்தைக் குடித்தேன்

அணைக்கத் துடித்தேன்

(ராஜாவின்)

ஆசையில் விளைந்த மாதுளன்க்கனியோ

கனி இதழ் தேடும் காதலன் கிளியோ

உனக்கெனப் பிறந்தேன் உலகத்தை மறந்தேன்

உறவினில் மலர்ந்தேன்

(ராஜாவின்)

பாவலன் மறந்த பாடலில் ஒன்று

பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று

தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்

தழுவிடக் குளிர்ந்தேன்

(ராஜாவின்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறி போகுமா

மொகலாய சாம்ராட்சிய தீபமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்

தேகம் ரெண்டும் சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை கண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலை இல்லை இன்று போ

பேசுகின்ற வெண்ணிலா பெண்மை இல்லை ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே கூந்தல் இல்லை தேய்ந்து போ

பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ

பாவை இல்லை பாவை தேவை என்ன தேவை

ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன மூக்குத்தியாம்

சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்

  • கருத்துக்கள உறவுகள்

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம.... ம் ம்ம்

அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்ம... ஆஹா..

அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே

ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்

அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..

அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே

ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே

மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மேற்க்காலே போகின்ற மேகங்களே

மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா

மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா

வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம

நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்

திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்

திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ

திருனாளும் தானே வரும்

உனைதேடி தேனே வரும்

வரும்போது ஓலை வரும்

அது வந்தா மாலை வரும்

அட நானும் உன்போலத்தான்

அத கொண்டாடத்தான்

எதிர்பார்த்தேனே அன்னாளை தான்... ஆமா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

ஸ்ருதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசமொரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னைச் சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கு நெஞ்சோடு இருக்கு

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம் போல பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடு தான்...

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

மனமே நினைவை மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி என் மார்பில்

வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

நானே உன் சுமையாக ஏன் வந்தேன்

சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

நான் உறங்கும் நாள் வேண்டும்

சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்

என் கண்ணில் நீர் வேண்டும்

சுகமாக அழ வேண்டும்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

இருள் மூடும் கடலோடு நான் இங்கே

என் தோணி கரை சேரும் நாள் எங்கே

பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்

நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

மனமே நினைவை மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி என் மார்பில்

வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அழகு எத்தனை அழகு

கோடி மலர் கொட்டிய அழகு

இன்றெந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு

சிறுநெஞ்சைக் கொத்திய அழகு

இன்றெந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்

ஒரே சொல்லில் மனசைத் தைத்தாள்

சுட்டும் விழிப் பார்வையில் சுகம் வைத்தாள்

நான் காதலின் கடலில் விழுந்து விட்டேன்

நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

அன்பே உன் ஒற்றைப் பார்வை

அதைத் தானே யாசித்தேன்

கிடையாதென்றால் கிளியே

என் உயிர்போக யோசித்தேன்

நான்காண்டுத் தூக்கம் கெட்டு

இன்றுன்னைச் சந்தித்தேன்

காற்றும் கடலும் நிலவும் அடி

தீக்கூடத் தித்தித்தேன்

மாணிக்கத் தேரே உன்னை

மலர் கொண்டு பூஜித்தேன்

என்னை நான் கிள்ளி இது

நிஜம்தானா சோதித்தேன்

இது போதுமே இது போதுமே

இனி என் கால்கள் வான் போகுமே

நான் கொண்ட ஆசையெல்லாம்

நான்காண்டு ஆசைதான்

உறங்கும் போதும் ஒலிக்கும் அடி

உன் கொலுசின் ஓசைதான்

நீ வீசும் பார்வை இல்லை

நெருப்பாச்சி நெஞ்சம்தான்

வலியின் கொடுமை முடிய அடி

தமிழ்வார்த்தை கொஞ்சம்தான்

இன்றேதான் பெண்ணே உன்

முழுப்பார்வை நான் கண்டேன்

கைதொட்ட நேரம் என்

முதல் மூச்சும் நான் கொண்டேன்

மகராணியே மலர்வாணியே இனி

என் ஆவி உன் ஆவியே

பெண்ணே நீயும் பெண்ணா

பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி

பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ

நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ

நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை என்பவள் அருகில் வந்துமே

பிள்ளை அறியவே இல்லையே..

பிள்ளை அன்னையை அறிந்தவேளையில்

அன்னை உலகில் இல்லையே..

ஓரக் கண்ணிலே உயிரை சுமந்தவள்..

உன்னைத் தேடியே உலகில் அலைந்தவள்..

சேரும் இடத்திலே சேர்ந்துவிட்டாள்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பது

வகுத்த நெறியடா மகனே..

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே.

அண்ணன் தந்தவள் அனலில் வேகிறாள்

அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்

சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

நீ இல்லாமல் நானும் நானல்ல (2)

(உன்னைக்)

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்

காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை

ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை

நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்

தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்

வாரியணைத்தேன் ஆசையினாலே

நீ தருவயோ நான் தருவேனோ

யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல

(உன்னைக்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன? காதல் வாழ்க

காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்ல......வா

என்னை நான் தேடித் தேடி

உன்னிடம் கண்டுகொண்டேன்

பொன்னிலே பூவையள்ளும் புன்னகை மின்னுதே

கண்ணிலே காந்தம் வைத்து

கவிதையைப் பாடுதே

அன்பே இன்பம் சொல்ல......வா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா - என்

காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலமாய் விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும் கட்டியணைத்து கவி பாட

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க

பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க

கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க

கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க

முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே

திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே

கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே

அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே

ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ

ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ

ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்

இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்

இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்

ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்

உண்மையை அதிலே உறங்க வைத்தான்

உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்

ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ

ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ

ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்

கதை சொல்லுவான்

வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்

குழலெடுப்பான்

பாட்டிசைப்பான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை

சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை

கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை

நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை

தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது

மங்கை நெஞ்சம் பொங்கும்போது விலங்குகள் ஏது

நான் வானிலே மேகமாய்ப் பாடுவேன் பாடல் ஒன்று

நான் பூமியில் தோகைபோல் ஆடுவேன் ஆடல் ஒன்று

கன்றுக்குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு

காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்

ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்...

ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா...ஸ்ஸ்ஹா...ஸ்ஸ்ஹா...ஸ்ஸ்ஹ

  • கருத்துக்கள உறவுகள்

பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்றது - எழில்

பொங்கிடும் அன்பு தங்கையின் நெற்றியில்

குங்குமம் சிரிக்கின்றது - மங்கல

குங்குமம் சிரிக்கின்றது

கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்

ஊரெங்கும் கொண்டாட்டமா - உனைக்

கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு

சிங்காரத் தேரோட்டமா

தோழி அத்தானைப் பாரென்று உனைக் கிள்ள

முகம் நாணத்தில் செந்தூர நிறங்கொள்ள!

(பூமழை)

வெண்சங்குக் கழுத்தோடு பொன்மாலை அசைந்தாட

நான் கண்ட பொருள் கூறவா - என்

அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது

என்றாடும் இதமல்லவா-

நீ வாழ்கின்ற நாளெல்லாம் திருநாளே

என உனைக்கொண்ட மணவாளன் தினம் பாட!

(பூமழை)

கால்பட்ட இடமெல்லாம் மலராக கைபட்ட

பொருளெல்லாம் பொன்னாகணும் - உன்

கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்தக்

கண்ணீரே என்றாகணும்

ஒரு பதினாறும்தான் பெற்று நீ வாழ

அதைப் பார்க்கின்ற என்னுள்ளம் தாயாக!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.