Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

உன் பாடலை நான் தேடினேன்

கேட்காமலே நான் வாடினேன்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

நீ போகும் பாதை என் பூங்காவனம்

நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்

ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ

என் வீடு வாராமல் ஏன் போகுமோ

கைதான போதும் கை சேர வேண்டும்

உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்

என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

ஊரெங்கும் போகும் என் ராகங்களே

உன் வீடு தேடும் என் மேகங்களே

பூ மீது தேன் தூவும் காதல் வரம்

என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்

காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்

ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்

காதல் நிலா தூதாகுமே

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply

நான் தேடிய கவிதை ஒரு பெண்ணாய் வந்தது

நான் தேடிய பெண்ணை ஒரு கவிதை தந்தது

நான் தேடிய கவிதை ஒரு பெண்ணாய் வந்தது

நான் தேடிய பெண்ணை ஒரு கவிதை தந்தது

ரோஜாவின் வண்ணம் கெஞ்சும்

நடை போட்டால் அன்னம் கெஞ்சும்

நிலவுக்கும் இவளை கண்டால்

வெட்கம் தான் வெட்கம் தான்

யாரோ யாரோ இவள் தான் யாரோ

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

  • கருத்துக்கள உறவுகள்

அடி ஆத்தாடி...

அடி ஆத்தாடி... இளமனசொன்று

இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!

அடி அம்மாடி.. ஒரு அலை வந்து

மனசில அடிக்குது அதுதானா..!

உயிரோடு...

உறவாடும்

ஒருகோடி...

ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!

அடி ஆத்தாடி... இளமனசொன்று

இறக்கை கட்டிப்பறக்குது சரிதானா..!

அடி அம்மாடி..

மேலே போகும் மேகம் எல்லாம்

கட்டுப்பட்டு ஆடாதோ..!

உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்

மெட்டுக்கட்டிப் பாடாதோ..!

இப்படி நான் ஆனதில்லை

புத்திமாறிப் போனதில்லை..!

முன்னே பின்னே நேர்ந்ததில்லை

மூக்கு நுனி வேர்த்ததில்லை..!

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள

கத்திச்சண்டை கண்டாயோ..!

படபடக்கும் நெஞ்சுக்குள்ள

பட்டாம்பூச்சி பார்த்தாயோ..

இசை கேட்டாயோ...!

தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள

ஏகப்பட்ட சந்தோசம்..!

உண்மை சொல்லு பெண்ணே -என்னை

என்ன செய்ய உத்தேசம்..!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்

வந்து வந்து போவதென்ன..!

கட்டுமரம் பூப்பூக்க

ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காளை நானே

கன்னுக்குட்டி ஆனேனே..!

தொட்டுத் தொட்டு தென்றல் பேச

தூக்கம் கெட்டுப் போனேனே..!

சொல் பொன்மானே...!

அடி ஆத்தாடி...

இளமனசொன்று இறக்கை கட்டிப்பறக்குது

சரிதானா..!

அடி அம்மாடி..

ஒரு அலை வந்து மனசில அடிக்குது

அது தானா..!

உயிரோடு...

உறவாடும்

ஒருகோடி...

ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன்

(என்ன விலை)

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு

(என்ன விலை)

உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே

உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

(என்ன விலை)

  • கருத்துக்கள உறவுகள்

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?

மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!

சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலாவே வா செல்லாதே வா

என்னாளும் உன் பொன்வானம் நான்

எனை நீதான் பிரிந்தாலும் நினைவாலே அணைத்தேனே

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை

முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு

அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிண்ணை

தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட

கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே

ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே

அகாயம் தாங்காத மேகம் ஏது பெண்ணே

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரல் கேட்டு

இரவில் வந்ததால் இருண்டு போனதால்

இருண்ட வாழ்வும் இனி மாறும்

( நான் )

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா

போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா

கேள்விகள் விடை பெற வேண்டும் - அந்த

விடைகளில் புதுயுகம் தோன்றும்

கேட்க மறந்த மனிதா - உன்

ஊமை வாழ்வும் இனிதா

அழுதவன் சிரித்திட வேண்டும் - அந்த

சிரிப்பினில் தத்துவம் தோன்றும்

சிரிக்க மறந்த மனிதா - நீ

சுமக்கும் பாரம் பெரிதா

தாங்காது இனி தாங்காது

புது போராட்டம் காண

நீ முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு

ஏழையின் அழுகுரம் கேட்டு

இரவில் வந்ததால்.. இருண்டு போனதால்...

கனவுகள் உயிர் பெறவேண்டும் - அது

உயிர் பெற போரிட வேண்டும்

காலம் மீண்டும் வருமா - அது

கனவை மீட்டுத் தருமா

சிறைகளும் உடை பட வேண்டும் - அதை

உடைத்திடத் துணிவுகள் வேண்டும்

துணையும் மீண்டும் வருமா - அது

துணிவை மீட்டுத் தருமா

போதாது இது போதாது

நீ போராட ஓடி வா

( நான் )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலம் நமக்குத் தோழன், காற்றும் மழையும் நண்பன்

பொன்னூஞ்சல் இல்லை, பூமெத்தை இல்லை

நீ வந்த வேளையிலே ..

பொன்னூஞ்சல்தானே தாயின் மனம்

பூமெத்தைதானே தந்தை மனம்

ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம்

கண்ணே நீ துயிலும் மஞ்சமடா..

மஞ்சம்டா... மஞ்சமடா...

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

அதைத் தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்

நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும்

அது பாசத்தில் தள்ளிவிடும்...

அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது,

அப்படியே... விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது!

நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது....

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்

கள்ளத் தனம் செய்து வெறியாட்டம் போடும்

கள்ளைப் பாலாக்கி களியாட்டம் போடும்

கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்

மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு...

கலையின் பெயராலே காம வலை பேசும்

காசு வருமென்றால் மானம் விலை பேசும்

நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்

நிம்மதி இல்லாமல் அலைபோல மோதும்!

மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு

அதைத்தாவ விடடால் தப்பி ஓட விட்டால்

நம்மைப் பாவத்தில் ஏற்றி விடும்

அது பாசத்தில் தள்ளிவிடும்...

  • கருத்துக்கள உறவுகள்

பாச மலரே அன்பில் விளைந்த

வாச மலரே

மணம் முடிக்கும் நாள் வந்ததோ

பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே

மணம் முடிக்கும் நாள் வந்ததோ

உன் மடியினில் தவழ்ந்திடும் வீணை

இனி மயங்கிடும் துணை வரும் ஆணை

உன் மௌனம் இசைக்கும் கீதமே

பாச மலரே அன்பில் விளைந்த வாச மலரே

மணம் முடிக்கும் நாள் வந்ததோ

  • கருத்துக்கள உறவுகள்

வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு

பூணும் வடம் நீயெனக்கு புது வைரம் நானுனக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீ ஆண்டவனா தாய்தந்தைதான் உனக்கில்லையே

கண்ணா நான் உன் ஜாதிதான்

உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத பொது இந்தியன்

நீ என்றால் பொய்யில்லையே

தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்

உன் போலே ஊரில்லையே

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்

ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்

தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே

பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே

உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்

எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்

ஆரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரோராரோ

ஆரோ ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே

வான்வெளியில் தாலாட்டுதே

கரைகின்ற பிறை ஐந்து கைவீசியே

சூரியனை தாலாட்டுதே

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்

முத்தங்கள் தந்து நீ முள்ளானால் சேலையில்

இனி உன் கதை எம் வாழ்வில் வரவா செலவா

முள்ளென்பது ரோஜாவி்ல உறவா பகையா

காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது

கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது

தாலாட்டுதே வானம்

தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது

தார்மீக கல்யாணம்

இது காற்கால சங்கீதம்

அலை மீது ஆடும்

உள்ளம் எங்கும்

ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்

மீன்கள் ரெண்டும்

ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்!

எண்ணம் ஒரு வேகம்

அதில் உள்ளம் தரும் நாதம்

இரு கண்கள் மோதி

செல்லும் போதும்

ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே

பாலை உண்ணும்

ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!

சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்

அது தெய்வம் தரும் கீதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலைமீது விளையாடும் இளம் தென்றலே

அலை பாயும் இள நெஞ்சை கரை சேர்த்து வா

உலகாளும் மாமன்னன் மனதென்னவோ

உயிர் வாழ ஒரு வார்த்தை நீ கேட்டுவா

மாலை அந்தி மாலை வந்து என்னை மயக்கும்

ஓலை அவன் ஓலை பெற உள்ளம் துடிக்கும்

தென்றல் என்னை அழைக்கும்

தேகம் தொட்டுத் துளைக்கும்

அவன் நினைவு எங்கே ஒரு மாது உருக

இள்வேணில் தீண்டும் இளம் தொல்லை பெருக

என் நிலையை அறிவானோ வருவானோ ஓ ஹோ ஓ ஹோ

அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்

எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்

ஹோய் அடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்

எங்கள் தெரு எங்கும் தேரோடும்

நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது

நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது

மாடங்கள் கலைகூடங்கள் யார் செய்தார் அதை நாம் செய்தோம்

நாடாளும் ஒரு ராஜாங்கம் யார் தந்தார் அதை நாம் தந்தோம்

தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே

தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே

தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது

கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது

பூவாரம் இனி சூட்டுங்கள் கற்பூரம் இனி ஏற்றுங்கள்

ஊரெல்லாம் களி ஆட்டங்கள் என்னென்ன இனி காட்டுங்கள்

வீடுதோரம் மங்களம் இன்று வந்தது

காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது

தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

கற்பூர நாயகியே ! கனகவல்லி,

காளி மகமாயி கருமாரியம்மா,

பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,

பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,

விற்கோல வேதவல்லி விசாலாட்சி,

விழிகோல மாமதுரை மீனாட்சி,

சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,

சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,

புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,

நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,

நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,

கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,

காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,

உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,

உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த

உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்

அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,

அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,

கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,

காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,

சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,

சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு (கற்பூர நாயகியே)

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளம் எங்கும் அள்ளி தெளித்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை ஒன்று கேட்பேன்

உண்மை சொல்ல வேண்டும்

என்னப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

என்ன பாடத் தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

னிலவில்லா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

தனிமையில் கானம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னைப் பாடச் சொன்னால்

என்ன பாடத் தோன்றும்

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா

அடடா..

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே

கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே

கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே

காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே

மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு

ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு

ஆரிரரோ இவர் யார் எவரோ

பதில் சொல்வார் யாரோ

கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ

தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ

உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ

உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ

மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்

ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்

யாரிவர்கள் இரு பூங்குயில்கள்

இளங்காதல் மான்கள்

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

"அ" எந்த எழுத்தில் ஆரம்பிப்பது?

"அ" எந்த எழுத்தில் ஆரம்பிப்பது?

மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை

மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை

இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நான் அல்லவா

கண்ணெடுத்தும் பாராமல் கலஙுவதும் வீணல்லவா

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆஅ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா

தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா

என் உடலில் ஆசை என்றால் என்னை நீ மரந்து விடு

என் உயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு

மன்னவா மன்னவா மன்னவா ஆஆஆ

மன்னவனே அழலாமா

கண்ணீரை விடலாமா

உன்னுயிராய் நானிருக்க

என்னுயிராய் நீ இருக்க

மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன

மணி மாளிகை தான் கண்ணே

தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான் கண்ணே

கற்பனையில் வரும் கதைகளிலே

நான் கேட்டதுண்டு கண்ணா - என்

காதலுக்கே வரும் காணிக்கை என்றே

நினைத்ததில்லை கண்ணா

தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில்

தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன்

புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலமாய் விரிந்த கூந்தல்

கன்னத்தின் மீதே கோலமிட

கை வளையும் மை விழியும்

கட்டியணைத்து கவி பாட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.