Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினர் கட்டுப்பாட்டில் அரசா? அரச கட்டுப்பாட்டில் படையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை அரசாங்கத்தை கொண்டு நடத்துவது படையினரா? அன்றோல் படையினரை கொண்டு நடத்துவது அரசாங்கமா ? என்ற கேள்வி தற்போது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்ஸீம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் உள்ள இரத்தல் அடி என்னும் இடத்தில் இடம் பெற்ற பத்து முஸ்ஸீம் இளைஞர்கள் படுகொலையை விசேட அதிரடிப் படையினரே மேற் கொண்டார்கள் என்பதில் முஸ்ஸீம் மக்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.

இந்த நிலமையில் அரச தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் சரி இராணுவ ஊடகப் பேச்சாளரும் சமரசிங்கவும் இந்தக் கொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் மேற் கொண்டார்கள் என்று கூறி தம்மாலும் படையினராலும் செய்யப்பட்ட அப்பாவி முஸ்ஸிம் இளைஞர்களின் கொலையை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இதற்கு கடந்த காலங்களைப் போன்று இம் முறை முஸ்ஸீம் மக்கள் எடுபடத் தயார் இல்லையென்பதை உணர்த்தியுள்ளார்கள் இத்துடன் அம் பாறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் இந்தக் கொலைகளுடன் ஸ்ரீ லங்கா அதிரடிப் படையினருக்கு தொடர்புகள் உண்டு அதற்கான போதிய ஆதாரங்களும் உண்டு ஆகையினால் குறிப்பிட்ட கொலை சம்பந்தமாக சர்வதேச விசாரணை இடம் பெற வேண்டும் என வேண்டுதல் விட்டுள்ளதுடன் கடந்த காலத்தைப் போன்று அரசின் ஏமாற்றும் செயலுக்கு பக்கத் துணையாக செல்லவும் மறுத்து நிற்க்கின்றார்.

இத்தகைய நிலையில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீமுக்கு விசேடமாக வழங்கப்பட்டு இருந்த விசேட அதிரடிப் படையினர் தாம் குறிப்பிட்டவருக்கு வழங்கிய பாதுகாப்பை வழங்க முடியாதெனக் கூறி விலகிக் கொண்டுள்ளார்கள்.

யார் யாருக்கு எத்தகைய பாதுகாப்பை வழங்குவது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பும் கடமையும் பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்ததாகும். ஆனால் இவருடைய பாதுகாப்பை அதிரடிப் படையினர் தாமாகவே விலக்கிக் கொண்டுள்ளார்கள். இது எதனைக் காட்டுகின்றது என்றால் படையினர் அரச கட்டுப்பாட்டில் இல்லையென்பதையும் அதே நேரம் படையினரே அரசாங்கத்தை அதாவது தென்னிலங்கையை நடத்தி வருகின்றார்கள் என்ற உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசாங்கம் என்று கூறிக் கொள்பவர்கள் போடும் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய படையினர் தாமாகவே விலகிக் கொள்வதாக தெரிவித்தால் பாதுகாப்பப் படையினர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள் என்று கருத முடியுமா?

இதே நேரம் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்hளரான ஹெகலிய ரம்புக்வெல ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டார் எக்காரணத்தினாலும் அரசாங்கம் குறிப்பிட்ட இளைஞர்களின் கொலையை அதிரடிப் படையினர்தான் மேற் கொண்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென தெட்டத் தெளிவாக குறிப்பிடட்டும் உள்ளார். இதன் மூலம் படையினரைக் காப்பாற்றி தமது அரசியல் கதிரைகளை காப்பாற்றிக் கொள்ளவும் முனைந்துள்ளார் என்பதே உண்மையாகும்.

அதிரடிப் படையினர் பாதுகாக்கப்படாவிட்டால் பல விடயங்கள் கிழக்கு மாகாணத்தில் அரசினால் மேற் கொள்ளப்பட்வைகள் வெளிவரக் கூடிய வாய்ப்பக்களும் உண்டு இதனையும் கருத்தில் கொண்டே தற்போதைய நிலையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்பதே உண்மையாகும்.

இதே நேரம் முஸ்ஸீம் மக்கள் முன்னர் கடந்த காலங்களைப் போன்ற அமைதி சமாதானம் எனக் கூறி ஸ்ரீலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் காலத்தைக் கடத்தவும் முஸ்ஸிம் மக்கள் தயார் இல்லையென்பதையும் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்ஸீம் காங்கிரசின் செல்வாக்கு படிப்படியாக சரிந்து கொண்டு செல்கிறது. இந்த வகையில் அரசின் உடைய பேச்சுக்கு முஸ்ஸீம் மக்கள் செவிமடுக்கத்தயார் இல்லையென்பதுடன் அரசியல் தலைமைகளுக்கும் மதிப்பளிக்கத் தயார் இல்லையென்ற நிலமையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் சாவதேச விசாரனையை வலியுறுத்தி நிற்கின்றது.

இதில் இருந்து விடுபட தற்போது ஸ்ரீலங்கா முஸ்ஸீம் காங்கிரஸ் தலைமைக்கு அரச தரப்பில் இருந்து மறைமுகப் பயமுறுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் கட்டமே விசேட அதிரடிப் படையினர் தம்மால் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்க மறுப்பதும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதும்

மறு புறத்தில் தற்போது ஸ்ரீலங்காவின் அரச புலனாய்வாளர்கள் ஸ்ரீ லங்கா முஸ்ஸீம் காங்கிரசின் தலைமைக்கு கொலை அச்சுறுத்தல் உண்டென வெளியிட்டுள்ள கருத்தும் ஆகும் இவைகள் மூலம் விசேட அதிரடிப் படையினரினால் மேற் கொல்லப்பட்ட கொலையை மறைக்கும் முயற்சியில் அரசாங்கமும் படையினரும் ஈடுபட்டுள்ள அதே வேளையில் ஸ்ரீலங்கா முஸ்ஸீம் காங்கிரசின் தலைமையின் கொலைக்கும் தயார் ஆகி வருகின்றார்கள் என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்கள் எனவும் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

pathivu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.