Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊனத்தின் வலி....

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்கள் இப்படியானோரை ஒதுக்கி விடுவதில்லை. சக மனிதர்கள் போலே நடத்துவார்கள்.

எம் சமூகத்தை பொறுத்தவரை ஒரு சிறு பகுதி மக்களை தவிர ஏனைய மக்கள் மேலே உடையார் அண்ணா கூறியது போல் புறக்கணிப்பதும் மட்டம் தட்டுவதும் என உள்ளார்கள். அதற்கெல்லாம் சோர்ந்து போகாமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் போராட வேண்டும்.

 

உண்மையாக சொல்லப் போனால் ஒரு சில விடையங்களை  குறிப்பிட்ட வரிகளுக்குள் கட்டுப்படுத்தி எழுதிவிட முடியாது துளசி...அதே நேரம் இப்படியான ஆக்கங்கள் இணைப்பதை நீங்கள் உட்பட நிறைய பேர் விரும்ப மாட்டீர்கள்.ஆனால் சந்தர்ப்பம் அவ்வப்போது ஏதாச்சும் மனக்க கஸ்ரங்கள் வரும் போது ஓரு நான்கு வரியிலாவது கிறுக்க வேண்டும் போல் உள்ளது..எங்கள் மக்கள் படிப்பதற்கு நிறைய இருக்கிறது..ஆனால் அப்படியானவர்களை திருத்திக் கொள்வது மிகவும் கடினம்...எல்லாம் வெள்ளை என்று நடப்பவர்களுக்கு அவ்வப் போது கிடைக்கும் தண்டனை.

 

ம்ம்ம்..பாடல் இணைப்பிற்கு மிக்க நன்றி..

நாம் இந்த வலியை அனுபவிக்காதவரைக்கும் எதுவும் எழுதலாம் சொல்லலாம் :(

அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் கொடூரம் தெரியும்.

யாயினி தயவு செய்து இனி இந்த ஊனம் என்ற வார்த்தையை மட்டும் பாவிக்காதீர்கள்.......

அவர்கள் மாற்றுத்திறனாளிகள்......எம்மை விட எல்லாவிதத்திலும் எவ்வளவோ திறமையானவர்கள் !!!!!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஏதும் துன்பம் வந்தால் முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களை நினைக்கும்படியும் அவர்களுடன் ஒப்பிடுகையில் எமக்கு ஏற்படும் துன்பங்கள் எல்லாம் துன்பங்கள் அல்ல என தோன்றும் எனவும் யாழ் இணையத்தில் ஒரு அண்ணா அடிக்கடி கூறுவார்.

 

ஓம் துளசி நானும் ஊரில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களை எப்போதும் நினைப்பதுண்டு.. நிறைய விடையங்களில்  பொறுமை காப்பவள்...நிறையவே மற்றவர்கள் என்ன பொய்,புரட்டை சொன்னாலும் உண்மை என்று நம்பியும் விடுவேன்..அந்த மற்றவர்களை எதற்கு எல்லாம் நம்பணும், நம்பக் கூடாது என்ற ஒரு தன்மை இல்லாத காரணத்தினால் நிறையவே மனம் நொந்துவிடுகிறது..மற்றப்படி நீங்கள் பழகியவரையில் என்ன தப்பை என்னில் கண்டீர்கள்..தப்பு கண்டு பிடிக்கனும் தள்ளி விழுத்தனும் என்று நினைத்துப் பழகியவர்களுக்கு நான் என்ன செய்ய........??

ஆதங்க கவி அக்கா எல்லோரும் எதோ ஒரு விதத்தில் ஊனமா தான் இருக்கிறர்கள் தன்னம்பிக்கை தளராமல் இருந்தால் போதும் . :(

 

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சரன்.

 

படித்ததில் பிடித்த கவிதை............

 

5.jpg

 

 

ஊனம் இவரை பார்த்து

ஊமையாய் போனது!

கால்கள் இல்லையென்றாலும்,

இருக் கைகள், கைக் கொடுக்கவே

தன்னம்பிக்கை தலையாட்டுகிறது!

இவரோடு வாழவேண்டும்

இருக்கும் வரை இருக்க வேண்டும்

என்று நம்பிக்கை அடம்பிடிக்கிறது!

கண்ணீரோடும் , வாழ்க்கையோடும்,

இவர் போட்ட எதிர் நிச்சல் கண்டு,

ஊனம் ஓடி ஒழிய

குறித்த நாட்கள் கூட

கூனி குறுகிப்போனது!

 

      -x-x-x-x-x-

 

இணைப்பிற்கு நன்றி தமிழினியக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் இந்த வலியை அனுபவிக்காதவரைக்கும் எதுவும் எழுதலாம் சொல்லலாம் :(

அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் கொடூரம் தெரியும்.

யாயினி தயவு செய்து இனி இந்த ஊனம் என்ற வார்த்தையை மட்டும் பாவிக்காதீர்கள்.......

அவர்கள் மாற்றுத்திறனாளிகள்......எம்மை விட எல்லாவிதத்திலும் எவ்வளவோ திறமையானவர்கள் !!!!!

 

நீங்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க தலைப்பில் உள்ள வார்த்தையை இனிமேல் எடுக்கவே மாட்டேன்,எழுதவே மாட்டேன்...நான் யாருக்கும் பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்....கவலைப்படாதீர்கள்.யாயினி இப்படித் தான் அடிக்கடி புரளி கிள்ப்பி விடாட்டி சரிப்பட்டு வராது என்று நினைத்துக் கொள்ளுங்களேன்.என்ன அக்கா செய்ய.......???

 

 

உண்மையாக சொல்லப் போனால் ஒரு சில விடையங்களை குறிப்பிட்ட வரிகளுக்குள் கட்டுப்படுத்தி எழுதிவிட முடியாது துளசி...அதே நேரம் இப்படியான ஆக்கங்கள் இணைப்பதை நீங்கள் உட்பட நிறைய பேர் விரும்ப மாட்டீர்கள்.ஆனால் சந்தர்ப்பம் அவ்வப்போது ஏதாச்சும் மனக்க கஸ்ரங்கள் வரும் போது ஓரு நான்கு வரியிலாவது கிறுக்க வேண்டும் போல் உள்ளது..எங்கள் மக்கள் படிப்பதற்கு நிறைய இருக்கிறது..ஆனால் அப்படியானவர்களை திருத்திக் கொள்வது மிகவும் கடினம்...எல்லாம் வெள்ளை என்று நடப்பவர்களுக்கு அவ்வப் போது கிடைக்கும் தண்டனை.

நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இப்படியான பதிவுகள் போடுவதை நான் விரும்ப மாட்டேன் என்பது தவறு. நானே சில பதிவுகள் போட்டிருக்கிறேன். :D

ஆனால் அனைவரும் விரும்புவார்கள் என்றில்லை. அதிலும் சிறு வித்தியாசம் உள்ளது.

யாழ் இணையத்தையும் முகநூலையும் எடுத்துக்கொண்டால் வேறு யாருடையதும் கவலைகளை நாம் பகிர்ந்தால் ஆறுதல் கருத்துக்கூறும் பலர் எமது சொந்த கவலைகளை பகிர்ந்தால் எம்மேல் மற்றவர்கள் அனுதாபப்பட வேண்டும் என்பதற்காக நாம் எழுதுகிறோம் என நினைப்பார்கள். அல்லது எமக்கு வேறு வேலையே இல்லையா, சந்தோசமாக இருப்பதற்கு தானே இங்கு வருகிறோம். இங்கேயும் இவ்வாறான பதிவுகளா என கேட்பார்கள், கேட்டிருக்கிறார்கள். எனக்கு யாழில் அவ்வாறு நடந்தது உங்களுக்கே தெரியும். அதை பார்த்து நீங்கள் பதிய வந்த ஒரு பதிவை பதியாமல் நிறுத்தி விட்டிருந்தீர்கள். ;) (2012 இல் நடைபெற்றது. மறந்திருந்தால் கூறுங்கள். தனிமடலில் நினைவுபடுத்துகிறேன்)

அதே போல் பகி அண்ணா, கவிதை அண்ணா போன்றோர் முன்னர் சில கவிதை எழுதும் போது திண்ணையிலேயே சிலர் விமர்சனம் வைத்ததுண்டு.

ஒரு சில நல்ல உள்ளங்கள் மட்டும் எப்பொழுதும் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள். :)

சொந்த கவலைகளை எழுதினால் என்றாவது ஒருநாள் அதையே எமக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்துவார்கள். அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும்.

மற்றபடி பொதுவான பிரச்சினைகள் பற்றி எழுதலாம்.

இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவாக கூறினேன். மற்றபடி இப்படியான பதிவுகளை எழுத வேண்டாம் என கூறவில்லை. :)

Edited by துளசி

ஓம் துளசி நானும் ஊரில் முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட மக்களை எப்போதும் நினைப்பதுண்டு.. நிறைய விடையங்களில் பொறுமை காப்பவள்...

நிறையவே மற்றவர்கள் என்ன பொய்,புரட்டை சொன்னாலும் உண்மை என்று நம்பியும் விடுவேன்..அந்த மற்றவர்களை எதற்கு எல்லாம் நம்பணும், நம்பக் கூடாது என்ற ஒரு தன்மை இல்லாத காரணத்தினால் நிறையவே மனம் நொந்துவிடுகிறது..மற்றப்படி நீங்கள் பழகியவரையில் என்ன தப்பை என்னில் கண்டீர்கள்..தப்பு கண்டு பிடிக்கனும் தள்ளி விழுத்தனும் என்று நினைத்துப் பழகியவர்களுக்கு நான் என்ன செய்ய........??..

இதுதான் இப்பொழுது பலருக்குள்ள பிரச்சினை. இதை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை யோசியுங்கள்.

உங்களை போலே மற்றவர்களும் என நம்பாதீர்கள்.

எம்முடன் நன்றாக பழகியவர்கள் நாம் தவறேதும் விடாத போதும் எம்மை குற்றம் சாட்டினால் அல்லது எம்மை விட்டு விலகினால் அதனால் நாம் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டால் இவர்களை நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்ற வலி நாம் உயிருடன் இருக்கும் வரை இருக்கும்.

ஆனால் எம்மை குற்றம் சாட்டியோரை அல்லது எம்மை விட்டு விலகியவர்களை நினைத்து நினைத்து கவலைப்பட்டால், அவர்களுக்கு வெற்றி, எமக்கு தோல்வி. அவர்களை மனதில் திட்டி எந்த பிரயோசனமும் இல்லை. எமது உள்ளம் குமுறுவது தான் நடக்கும்.

இவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் தன்னம்பிக்கை முக்கியம்.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். இப்படியான பதிவுகள் போடுவதை நான் விரும்ப மாட்டேன் என்பது தவறு. நானே சில பதிவுகள் போட்டிருக்கிறேன். :D

ஆனால் அனைவரும் விரும்புவார்கள் என்றில்லை. அதிலும் சிறு வித்தியாசம் உள்ளது.

யாழ் இணையத்தையும் முகநூலையும் எடுத்துக்கொண்டால் வேறு யாருடையதும் கவலைகளை நாம் பகிர்ந்தால் ஆறுதல் கருத்துக்கூறும் பலர் எமது சொந்த கவலைகளை பகிர்ந்தால் எம்மேல் மற்றவர்கள் அனுதாபப்பட வேண்டும் என்பதற்காக நாம் எழுதுகிறோம் என நினைப்பார்கள். அல்லது எமக்கு வேறு வேலையே இல்லையா, சந்தோசமாக இருப்பதற்கு தானே இங்கு வருகிறோம். இங்கேயும் இவ்வாறான பதிவுகளா என கேட்பார்கள், கேட்டிருக்கிறார்கள். எனக்கு யாழில் அவ்வாறு நடந்தது உங்களுக்கே தெரியும். அதை பார்த்து நீங்கள் பதிய வந்த ஒரு பதிவையும் பதியாமல் நிறுத்தி விட்டிருந்தீர்கள். ;) (2012 இல் நடைபெற்றது. மறந்திருந்தால் கூறுங்கள். தனிமடலில் நினைவுபடுத்துகிறேன்)

அதே போல் பகி அண்ணா, கவிதை அண்ணா போன்றோர் முன்னர் சில கவிதை எழுதும் போது திண்ணையிலேயே சிலர் விமர்சனம் வைத்ததுண்டு.

ஒரு சில நல்ல உள்ளங்கள் மட்டும் எப்பொழுதும் ஆறுதல் வார்த்தை கூறுவார்கள். :)

சொந்த கவலைகளை எழுதினால் என்றாவது ஒருநாள் அதையே எமக்கெதிரான ஆயுதமாக பயன்படுத்துவார்கள். அதை எதிர்கொள்ளும் தைரியம் இருக்க வேண்டும்.

மற்றபடி பொதுவான பிரச்சினைகள் பற்றி எழுதலாம்.

இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவாக கூறினேன். மற்றபடி இப்படியான பதிவுகளை எழுத வேண்டாம் என கூறவில்லை.

 

 நான் தவறாக எடுத்துக்கொள்ள இல்லை...எழுதிய விதம் தவறான கருத்தை தந்துள்ளது என்று நினைக்கிறன்..அது ஒவ்வொருத்தர் எடுக்கும் விதத்தில் இருக்கிறது...விடுங்க துளசி....எல்லாத்தையுமே அது தப்பு,இது தப்பு என்று சொல்லிட்டு இருந்தால் அப்புறம் நாங்கள் நடமாடித் திரிவதிலயே அர்த்தம் இல்ல.உண்மையாக தப்பாக எடுக்க நிறைய விடையங்கள் இருக்கிறது..எல்லாம் பேச இந்தப் பகுதி உகந்தது அல்ல.

 

என்னைப் பொறுத்த மட்டில் நான் சரியாக நடந்தால் போதும்...நான் எப்படி மற்றவர்களுக்கு உண்மையாக இருக்கிறனோ அதைப் போல் நான் அன்பாக,பண்பாக பழகும்  உறவுகளும்  இருக்கவேண்டும் என்று விரும்பினான்..அதை சிலரிடம் துளியளவும் எதிர் பார்க்க முடிய இல்லை.

அதற்காக நான் எப்போதும் கண்டதையும் பற்றி எழுதிக் கொண்டு இருக்கப் போறவள் அல்ல..எப்பவாவது தான் எழுத்து வரும்..

பாக்கிறவர்கள் கண்களுக்கு எல்லாம் தப்பு என்றால் யார் என்றாலும் என்ன என்றாலும் சொல்லிட்டு போகட்டும் எழுதிட்டுப் போகட்டும்.உண்மையாக மற்றவர்களில் அக்கறை உள்ளவர்கள் சற்றேனும் மற்றவர் மனங்களை நோகடிக்க விரும்பாதவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் மற்றவர்களை குற்றம் காண மாட்டார்கள்..என்ன செய்வது  அவே,அவேக்கு வந்தால் தான் தெரியும்.

நான் தவறாக எடுத்துக்கொள்ள இல்லை...எழுதிய விதம் தவறான கருத்தை தந்துள்ளது என்று நினைக்கிறன்..அது ஒவ்வொருத்தர் எடுக்கும் விதத்தில் இருக்கிறது...விடுங்க துளசி.....

எனது முதல் இரு பதிவிலும் நீங்கள் இப்படிப்பட்ட பதிவுகளை போடுவது எனக்கு விருப்பமில்லை என்ற அர்த்தம் தரக்கூடிய வகையில் நான் எதுவும் எழுதவில்லை. :unsure:

மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள். சரியான அர்த்தம் புரியும். :)

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது முதல் இரு பதிவிலும் நீங்கள் இப்படிப்பட்ட பதிவுகளை போடுவது எனக்கு விருப்பமில்லை என்ற அர்த்தம் தரக்கூடிய வகையில் நான் எதுவும் எழுதவில்லை. :unsure:

மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள். சரியான அர்த்தம் புரியும். :)

 

.உடல் நிலை  பற்றி எழுதுவது உங்களுக்கும் மற்றைய உறவுகளுக்கும் பிடிக்காது இருக்கலாம் என்ற பொருள்படவே எழுதினேன். காரணம் எல்லாருக்கும் எல்லாம் பிடிக்காது என்று தெரியும்...

உங்களுக்கு மட்டும் நான் எழுதினேன், உங்களை மட்டும் தான் சுட்டிக் காட்டி இருந்தேன்  என்றால் மன்னித்துக் கொள்ளவும்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இப்பொழுது பலருக்குள்ள பிரச்சினை. இதை எதிர்காலத்தில் எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பதை யோசியுங்கள்.

உங்களை போலே மற்றவர்களும் என நம்பாதீர்கள்.

எம்முடன் நன்றாக பழகியவர்கள் நாம் தவறேதும் விடாத போதும் எம்மை குற்றம் சாட்டினால் அல்லது எம்மை விட்டு விலகினால் அதனால் நாம் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டால் இவர்களை நல்லவர்கள் என நினைத்து ஏமாந்து விட்டோமே என்ற வலி நாம் உயிருடன் இருக்கும் வரை இருக்கும்.

ஆனால் எம்மை குற்றம் சாட்டியோரை அல்லது எம்மை விட்டு விலகியவர்களை நினைத்து நினைத்து கவலைப்பட்டால், அவர்களுக்கு வெற்றி, எமக்கு தோல்வி. அவர்களை மனதில் திட்டி எந்த பிரயோசனமும் இல்லை. எமது உள்ளம் குமுறுவது தான் நடக்கும்.

இவற்றை எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்திற்கும் தன்னம்பிக்கை முக்கியம்.

 

கண்டிப்பாக உண்மை..

.உடல் நிலை பற்றி எழுதுவது உங்களுக்கும் மற்றைய உறவுகளுக்கும் பிடிக்காது இருக்கலாம் என்ற பொருள்படவே எழுதினேன். காரணம் எல்லாருக்கும் எல்லாம் பிடிக்காது என்று தெரியும்...

உங்களுக்கு மட்டும் நான் எழுதினேன், உங்களை மட்டும் தான் சுட்டிக் காட்டி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும்..

"எழுதிய விதம் தவறான கருத்தை தந்துள்ளது என்று நினைக்கிறன்.."

என்று நீங்கள் எழுதியதும் நான் எழுதியது தவறான அர்த்தத்தை தந்து விட்டதென நீங்கள் நினைப்பதாக நினைத்து விட்டேன். அதுதான் அவ்வாறு கேட்டிருந்தேன்.

இதுபற்றி எனக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது. சொல்லிட்டன். :lol:

இப்பொழுது புரிந்து கொண்டேன். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, உங்கள் கவிதையை நீங்கள் பகிர்ந்த அன்றே பார்த்துவிட்டேன்!

 

விலங்குகள் கூட, தங்களுக்குள் ஊனமடைந்த விலங்குகளையும், இயலாத இளங்கன்றுகளையும், முதிய விலங்குகளையும் பாதுகாப்பாக அணைத்துச் செல்வதை அவதானித்திருக்கிறேன்!

 

அதிகமாக யானைகளில் இந்தக் குணத்தை அவதானிக்கலாம்!

 

மனிதனைத் தவிர்ந்த, அனைத்து சமூக விலங்குகளும் இவ்வாறே உள்ளன!

 

உங்கள் கவிதையில் நிரம்பவும் ' வலி' கலந்திருக்கின்றது!

 

தொடர்ந்து ஆக்கங்களைத் தாருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"எழுதிய விதம் தவறான கருத்தை தந்துள்ளது என்று நினைக்கிறன்.."

என்று நீங்கள் எழுதியதும் நான் எழுதியது தவறான அர்த்தத்தை தந்து விட்டதென நீங்கள் நினைப்பதாக நினைத்து விட்டேன். அதுதான் அவ்வாறு கேட்டிருந்தேன்.

இதுபற்றி எனக்கு புரிய வைக்க வேண்டுமே தவிர இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்க கூடாது. சொல்லிட்டன். :lol:

இப்பொழுது புரிந்து கொண்டேன். :)

 

 

இப்பவாவது புரிந்தி விட்டீர்கள் என்பதறிந்து மிகுந்த சந்தோசம்...நான்(ம்) விட்ட பிழையினால் ஏற்பட்ட குளப்பம் என்றால் சின்னக் குழந்தையிடம் கூட சொறி சொல்வதில் தப்பில்லை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி, உங்கள் கவிதையை நீங்கள் பகிர்ந்த அன்றே பார்த்துவிட்டேன்!

 

விலங்குகள் கூட, தங்களுக்குள் ஊனமடைந்த விலங்குகளையும், இயலாத இளங்கன்றுகளையும், முதிய விலங்குகளையும் பாதுகாப்பாக அணைத்துச் செல்வதை அவதானித்திருக்கிறேன்!

 

அதிகமாக யானைகளில் இந்தக் குணத்தை அவதானிக்கலாம்!

 

மனிதனைத் தவிர்ந்த, அனைத்து சமூக விலங்குகளும் இவ்வாறே உள்ளன!

 

உங்கள் கவிதையில் நிரம்பவும் ' வலி' கலந்திருக்கின்றது!

 

தொடர்ந்து ஆக்கங்களைத் தாருங்கள்!

 

உங்கள் வருகைக்கும்,கருத்துப் பகிர்வுக்கு நன்றி புங்கையண்ணா..பொதுவாக சொல்லப் போனால் அனைவருமே மனிதர்கள் சகல உணர்வுகளுக்கும் கட்டுப் பட்டவர்கள் என்பதை சக தோழியாக,தோழனாக பழகுபவர்கள் புரிந்து கொள்ளாதவிடத்து ஒன்றும் செய்ய இயலாது..

காரணம் ஒருவர் பழகும் மட்டும் பழகி விட்டு தனக்கு என்று முன்னேற்றம் வரும் போது நீர் இப்படித் தான் இருக்கனும் உமக்கு விதிக்கபட்டது இது தான்...மற்றவர்களோடு பழக தகுதியற்றவர் போன்ற சொற் பிரயோகங்களை, மற்றும் வேண்டாத நடவடிக்கைகளில் இறங்கும்  போது தான் அட இப்படியானவர்களையா நம்பித் தொலைச்சோம் என்று வேதனைப்பட வேண்டியதாக இருக்கிறது புங்கையண்ணா... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.