Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிக்கமுடியவில்லை என்பது அறிவுத்திறனின் பிரச்சினை அல்ல. ஒருவரின் இயல்பும் அல்ல. பழக்கம் இல்லாமலாகிவிடுவதுதான் அது. அதை வெல்ல ஒரே வழி தொடர்ச்சியாக வாசிப்பதுதான்.

நாம் வாசிக்கும்போது ஒருவேளை ஆரம்பத்தில் வெறுமே தகவல்களை மட்டுமே கவனிக்கக்கூடிய வாசிப்பை நிகழ்த்தலாம். வெறுமே கதைச்சுவாரசியத்தைமட்டும் வாசித்துச்செல்லலாம். ஆனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கோண்டே இருந்தோமென்றால் மெல்லமெல்ல நம் அகம் மேலதிக வாசிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருப்பதைக் காண்போம். நாம் அதை வலிந்து செய்யவேண்டியதில்லை. அதுவே நிகழ ஆரம்பிக்கும்.

- ஜெயமோகன்

 

 

 

Edited by யாயினி

  • Replies 3.9k
  • Views 331.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அன்பிற்கு

ஏமாற்றத் தெரியாது

ஏமாற மட்டுமே

தெரியும்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மத்திய வங்கியால் . புதிய வடிவமைப்பில் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்ட .
10 ரூபா குற்றிகள்..சில

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

இலங்கையின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தினதும் தனித்துவம் வாய்ந்த பண்புகளையும் முக்கியத்துவம் மிக்க அடையாளங்களையும் அங்கீகரித்து அவற்றினை விபரணப்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி 10 ரூபா நாணயக்குற்றிகளைக் கொண்ட புதிய தொடரொன்றினை வெளியிட்டுள்ளது.

 

யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முகப்பையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை மற்றும், பாடும் மீன்களையும், கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்களஞ்சியத்தையும், மன்னார் மாவட்டத்தில் மடுமாதா தேவாலயத்தையும், திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர விகாரை, கோணேஸ்வரம் கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றையும், முல்லைத்தீவு மாவட்டத்தில், மீன்பிடியையும், வவுனியா மாவட்டத்தில் நெல் மற்றும் மரக்கறி உற்பத்தியையும் குறிக்கும் வகையில் நாணயக் குற்றிகள் அச்சிடப்பட்டுள்ளன.

 

10404497_763279890411396_76214083748608416797_763279880411397_899448773113952193

 

1378619_763279883744730_25241485873136021920549_763279887078063_8713309721438369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் வாழ்வின் முதல்

நாள் என்று வாழுங்கள்,

இது தான் வாழ்வின்

கடசி நாள் என்று

அன்பு செலுத்துங்கள்...

 

கவிஞர் வைரமுத்துவின் வரிகளிலிருந்து..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

63739_395068010649177_800736108554018560

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் Buffalo வில் ஆறடிக்கும் மேற்பட்ட பனிப் பொழிவு..

 

 

1502244_688067571291359_3423779200192333

 

10647138_688067394624710_290312674183141

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10416571_589666067846121_662204369608359

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக குழந்தைகள் நாள் (Universal Children's Day) டிசம்பர் 14 1954  இலிருந்து, ஐக்கிய நாடுகள் மற்றும் யுனிசெவ் அமைப்புகள் ஆண்டு தோறும் நவம்பர் 20 அன்று கொண்டாடுகின்றன. உலகெங்கணும் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக இந்நாள் ஐநா அவையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் குழந்தைகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநல திட்டங்களை உலகெங்கும் நடாத்துவதற்கும் இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

10527710_537705703042158_758593707906918

 

 

பன்னாட்டு குழந்தைகள் நாள் (International Children's Day, ICD) பல நாடுகளில் ஜீன் 1 ம் நாள் கொண்டாடப்படுகிறது. உலக சிறுவர் தினமும் முதியோர் தினமும் இலங்கையில் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்றன.குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பான காலை வணக்கங்கள்...அனைவருக்கும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!.இன்று முதல் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்.

 

 

 

 

 

1399554_920632717948754_6863652622155204

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கம்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்லம்.

10815652_10203855440158972_1500340361_n.

1622797_10152414156132944_86145998823579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலரின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட மாவீரர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுக்கு சென்று பார்வையிடலாம்.

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/148506-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2014-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தின் முதல் நாள் ......10408631_863891336957155_381815767103095


10178069_1478139939109227_10205499346707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

381280_1952312707325_1074136775_n.jpg?oh

 

317542_1952839080484_333654244_n.jpg?oh=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்...

 

10388176_831046050281016_723239926577834

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நான் இல்லை எனினும் என் நினைவுகள் இருந்தால் சரி ..அது போதும் ....

என வித்தாக்கிப்போன வீர மறவர்களின் கல்லறைகளை தட்டி எழுப்பும் பிஞ்சு.

 

10433212_355633507950869_737985704276102

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கும் அனைத்து இதயங்களையும் கண்ணீர் வர வைக்கும் காட்சி இது. :(

250341_806545839384109_90496912044472163

 

 

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

33698_446165676550_218441_n.jpg?oh=fd8d2

535948_756146771127315_14161927899957918

யாழ்ப்பாணம்.மாவீரர் தின பதாகை..

 

10653504_744309085661843_204552343861845

10648986_744307775661974_731310074989038

 

 

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அன்று.2003

 

1553472_744305908995494_5423001809514863

10680078_744305578995527_427459452265544

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் நுழைவாயில்......

 

10423824_744305412328877_282302126697988

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1461315_946386828723619_5845757097425777

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அன்று ஒரு பொழுதில் இப்படித் தான் மாவீரர் தினம் அனுஷ்டிக்கபட்டது...

 

10694286_10203865046399122_3029873734866

 

Kalarai-12-600x450.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10157249_505714812904871_257588023993467

 

இந்தப் புகைப்படத்தில் இடது புறம்

இருப்பது யாரென்று எவரிடமாவது கேட்டால்,

மாவீரன் என்ற சொல்லுக்கு சரியான உதாரணம்,

வீரம் என்ற சொல்லுக்கு புது அர்த்தம படைத்தவன்

என்று சொல்வர்...

அதே வலது புறம்

இருப்பது யாரென்று கேட்டால் எவரிடமும்

பதில் இருக்காது...

காரணம் இவன் தமிழன்... உலகம் கொண்டாட மறந்த

மாவீரர்களுள் முதன்மையானவன் இவன்...

300 # spartans படம் கிரேக்க

புராணங்களை தழுவி எடுக்கப்பட்டது... அதில்

கூறப்பட்டிருக்கும் வீரம் மட்டும் அல்ல, உலகில்

படைக்கப்பட்ட வீர காவியங்கள் அனைத்தையும் நம்

சமகாலத்தில் நடத்திக் காட்டியவன் தான் இவன் ...

சமதளங்களின் சமரன் என்று அழைக்கப்பட்ட

ப்ரிகடியர் பால்ராஜ்...

# போர் உச்சத்திலிருந்த காலத்தில், இலங்கைத்

ராணுவத் தளபதி ராணுவ மந்திரியிடம்

பால்ராஜைப் பற்றி இப்படியாய்க் கூறுகிறார்...

"நீங்கள் கொடுத்த 45000

ராணுவத்தினரை வைத்து பிரபாகரன்

வந்து இருந்தால் கூட

எதிர்கொண்டு விடுவோம்... ஆனால்

அங்கே நிற்பது பால்ராஜ்... நம் ஒட்டுமொத்த

ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தினாலும்

அவனை வெல்ல முடியாது..."

வெறும் 1200 புலிகளை வைத்துக்

கொண்டு உள்ளும் வெளியுமாய் 45000 சிங்கள

ராணுவ வீரர்களை எதிர்கொண்டான்... அதுவும்

ஒரு நாள், இரண்டு நாள் அல்ல 34 நாட்கள்... ஆம்

புலிகள் ஆனையிறவை மீட்பதற்காய் களமாடிக்

கொண்டிருக்கையில், பால்ராஜ் தலைமையில்

1200 புலிகள் காடுகளும், மரங்களும் அற்ற

சமவெளியில், கடல் வழியாய் களமிறக்கப் பட்டனர்...

எந்த வித உதவியும் இல்லை. உணவு, குடிநீர்,

மருத்துவம் என எதற்கும், எங்கும் செல்ல

முடியாது... அவர்களை தரைப்படை, கடற்படை,

வான்படை என 45000 ராணுவத்தினர்

சுற்றிவளைத்து தாக்கியும் 'வதிரையன்

பாக்ஸ்' என்ற தாக்குதல்

உத்தியை கையாண்டு அத்துனை ராணுவத்தினரையும

் தலைதெறிக்க ஓடவைத்தவன்...

# இவன் கையாண்ட 'வதிரையன் பாக்ஸ்' மற்றும்

அவன் இருந்த ராணுவச் சூழல்கள் இன்றும்

உலகெங்கிலும் உள்ள ராணுவக் கல்லூரிகளில்

முக்கியப் பாடமாய் உள்ளது...

# புலிகளின் பிரதிநிதி, அமெரிக்க ராணுவக்

கல்லூரிக்குச் ஒரு முறை சென்றிருக்கையில்,

அங்கு பயின்ற மாணவர்கள் வியந்துப்

பாரட்டியது பால்ராஜையும், அவன் கையாண்ட

வதிரையன் பாக்ஸ் யுக்தியையும் தான்...

# யுத்த நிறுத்த காலத்தில் ஒரு முறை,

பால்ராஜ் கொழும்பு விமான நிலையம்

சென்றிருக்கையில் அவனை சூழ்ந்த ராணுவத்

தளபதிகள் ராணுவ உடையுடன்

வந்து அவனுக்கு மரியாதை செலுத்தி,

அவனிடம் கூறியது,

"நாங்கள் நூற்றுக் கணக்கான தளபதிகள்

போரை வழிநடத்திக் கொண்டிருக்கையில்,

எங்களுக்கு எதிராய் ஒரே ஒருவன்

களமிறக்கப்பட்டு நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.

அவனை எங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும்

காணவேண்டும் என்று விரும்பினோம்... எங்கள்

அனைவரின் கனவு நாயகன் நீங்கள்..."

இப்படியாய் இவன் விட்டுச் சென்ற சரித்திர

முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்கள்

ஏராளம்...

எதிரிகளின் சிம்மசொப்பனமாய் திகழ்ந்த இந்த

மாவீரன், மாரடைப்பால் 2008 ஆம்

ஆண்டு இதே நாளில் இயற்கையால்

நம்மிடமிருந்து பறிக்கபட்டான்...

தமிழீழ மக்கள் மட்டுமல்ல, தலைவர்

பிரபாகரனே ஆசைப்பட்டது, இவன் களத்தில்

விளையாடியதை திரையில் காணவேண்டும்

என்று.....

இங்கு, காசுக்காய் அரை நிர்வாணமாய் வந்த

நடிகைகளின் வாழ்கையை எல்லாம் திரையில்

காண்பிக்க ஆட்கள் இருகிறார்கள்...

ஆனால் இனம் காத்த குல

தெய்வங்களை பற்றி பேசக்கூட ஒருவரும்

இல்லை...

நாமாவது, இந்த நாளில் உலகம் கொண்டாட மறந்த

இந்த மாவீரனை மறவாது நினைப்போம்... நம்

பிள்ளைகளுக்கும் இவன் போன்ற மாவீரர்களின்

வாழ்கையை எடுத்துக் கூறுவோம்...

'தமிழர்களின் தாகம் தமிழ்தேசத் தாயகம்'

நான் வாசித்த நேசித்த உண்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10340144_1523641367892503_36339727493874

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.