Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும

Featured Replies

சிறுமைப்படும் பதவிகளும், விருதுகளும்!

(ஈழநாதம் நாளேட்டில் 01.10.06 வெளிவந்த ஆசிரியர் தலையங்கம)

ஐ.நா. அமைப்புக்களின் பதவி நியமனங்கள், ஐ.நா அமைப்புக்கள் வழங்கும் விருதுகள் என்பவை குறித்து இன்று பெரும் சந்தேகங்கள் எழத்தொடங்கியுள்ளன. இச்சந்தேகங்கள் ஐ.நா அமைப்புக்கள் மீதான நம்பிக்கைத்தன்மையைச் சிதைப்பதாகவும் அவற்றின் மீதான மதிப்பைக் குறிப்பவையாகவும் உள்ளன.

இதில் குறிப்பாகச் சிறிலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு தென்னாசியப் பிராந்தியத்திற்கான யுனிசெப் பணிப்பாளராக வழங்கப்பட்டுள்ள பதவியும் வி.ஆனந்தசங்கரிக்கு யுனஸ்கோவினால் வழங்கப்பட்ட விருதும் இத்தகைய சந்தேகங்களுக்கு அடிப்படையாகியுள்ளன.

சிறிலங்காவின் சனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்த காலத்தில் அதிகாரத்தை மிக மோசமாகத் துஸ்பிரயோகம் செய்தவர் எனப் பெயர் பெற்றவர் 'சேலை கட்டிய ஹிட்லர்" எனச் சிங்கள அரசியல் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் விமர்சிக்கப்பட்டவர். சமாதானப்பாதையில் நாட்டை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்துப் பதவிக்கு வந்ததன் பின் என்றுமில்லாத அளவிற்கு நாட்டை யுத்தத்திற்குள் இட்டுச் சென்றவர்.

'சமாதானத்திற்கான யுத்தம்" என அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு, இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ வேண்டியதான மிக மோசமான சூழ்நிலை ஒன்றிற்கும் வழிவகுத்தவர்.

சனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்திலேயே தமிழர் தாயகத்தில் மிகப்பெரும் படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. இவற்றில் முன்னேறிப்பாய்தல், ரிவிரச, சத்ஜெய, ஜயசிக்குறு, ரணகோஷ என்பன முதன்மையாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நடவடிக்கைகள் காரணமாக, ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் சிறுவர்கள், பெண்கள் எனப்பலரும் அடங்கியிருந்தனர். மக்கள் அடைக்கலம் தேடி ஓடிய தேவாலயங்கள், பொது இடங்களின் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாகிக் காடுகளிலும், வீதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

இதனைத் தவிர தமிழர் தாயகத்தின் மீது இறுக்கமான பொருளாதாரத்தடையும் மருந்துப் பொருட்கள் மீதான தடையும் அமுல் செய்யப்பட்டன. இதனால் குழந்தைகளும் நோயாளர்களும் பெரும் அவலத்திற்கு உள்ளாக நேரிட்டது. ஒரு வகையில் மனித இனத்திற்கே எதிரான செயற்பாட்டைக் கொண்டவராக சந்திரிகா குமாரதுங்க தனது பதவிக்காலத்தில் செயற்பட்டவர்.

இத்தகையவருக்கு தற்பொழுது யுனிசெவ் அதாவது ஐ.நா சிறுவர்கள் பாதுகாப்பு நிதியத்தின் தென்னாசியப் பிராந்தியத்தின் பணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சிறுபான்மை இனம் ஒன்றின் உரிமைகள் தொடர்பாக எத்தகைய மதிப்புமளிக்காதவர், சிறுவர், பெண்கள் உட்படப் பல்லாயிரக்கணக்கானோரின் படுகொலைக்குக் காரணமானவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக யுனஸ்கோ மதன்ஜித்சிங்கின் விருதை வி.ஆனந்தசங்கரிக்கு வழங்கியிருப்பதன் மூலம் விருதின் பெயருக் குரியவரான மதன்ஜித்சிங்கை மட்டுமல்ல, யுனஸ்கோ நிறுவனத்தையும் சிறுமைப்படுத்திக் கொண்டுள்ளது.

ஏனெனில், வி.ஆனந்தசங்கரிக்கு விருது வழங்குவதற்காகக் கூறப்பட்ட தகைமைகள் அவரிடம் இருப்பதாக யுனஸ்கோ எவ்வாறு கண்டுகொண்டது என்பது ஆச்சரியத்திற்குரியதொன்றே.

சிலவேளை அகிம்சை, சகிப்புத்தன்மை எனக் கூறி வி.ஆனந்தசங்கரிக்கு விருது வழங்க யுனஸ்கோ முன்வந்துள்ளமையானது தமிழ் மக்கள் மீது ஈவிரக்கமற்ற வகையில் சிங்களப் பேரினவாதிகளால் இனப் படுகொலை மேற்கொள்ளப்படுகையில் அவற்றிற்கு ஆதரவு அளிப்பதோடு,அதனைச் சகித்துக்கொண்டு அரசை ஆதரித்து வருகின்றமையை அவரது சகிப்புத்தன்மையின் வெளிப் பாடாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் போலுள்ளது. சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பதவிகளும் விருதுகளும் பெறுபவர்கள் எவரும் மகிழ்ச்சியும், பெருமையும் அடையலாம்.

ஏனெனில் அது அவர்களுக்குக் கௌரவத்தையும் பாராட்டுதல்களையும் வழங்கக்கூடியதாகவும் இருக்கலாம். அத்தோடு, அவர்களின் பொருளாதாரத்தையும் வளப்படுத்துவதாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு பதவிக்கும் விருதிற்கும் உள்ள பெருமை அது உரியவருக்கு வழங்கப்படும் போதே ஏற்படுகின்றது. அதாவது இவற்றைப் பெறுபவர்களால் பதவிகளும், விருதுகளும் பெருமையடைதல் வேண்டும்.

ஆனால் சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வி.ஆனந்தசங்கரிக்கும் ஐ.நா அமைப்புக்கள் வழங்கியுள்ள பதவியும், விருதும் அவர்களால் புகழடைய எதுவுமே இல்லை. மாறாக, அவை சிறுமைப்படுத்தப்படவே வாய்ப்புக்கள் உள்ளன.

ஏனெனில் இவர்களுக்கு வழங்கப்பட்டதன் மூலம், பதவிகளும், விருதுகளும் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதோ

அண்ணா எனக்கு ஒரு டவுட் இந்த ஜ.நா செயாளர் பதவிக்கு நான் போட்டியிட கூடாதோ

:wink: :wink: :wink:

என்னாச்சு ஜமுனா உங்களுக்கு நீங்கள் இணைத்த மேற்கோளுக்கும் உங்கள் கேள்விக்கும் என்ன சம்பந்தம்????? :roll: :roll: :roll: :roll:

ஓ சொரி வசம்பு அண்ணா படித்து கொண்டு இதுவும் செய்தனான் அது தான் இப்படி

:wink: :wink:

ஆகா கவனம் பிறகு பரீட்சையிலும் மாறி யாழ்க் கள கருத்துக்களை எழுதி விடப் போகின்றீர்கள். :lol: :P :D :P

ஆகா கவனம் பிறகு பரீட்சையிலும் மாறி யாழ்க் கள கருத்துக்களை எழுதி விடப் போகின்றீர்கள். :lol: :P :D :P

யாழ் களம் இருப்பதால் தான் என்னால் இரவில் படிக்க கூடியதாக உள்ளது

:wink: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.