Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்கான போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. செயலாளர் நாயகம் தெரிவுக்கான போட்டி

இவ்வருட இறுதியுடன் தனது பதவிக்காலத்தை முடிவுசெய்யும் கொபி அனானுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வதற்கான பந்தயம் முடிவுக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. வேட்பாளர்களுக்கு இருக்கக்கூடிய ஆதரவை அறிந்து கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பு நாடுகள் மத்தியில் நடத்தப்படும் பரீட்சார்த்தமான முறைசார வாக்கெடுப்பின் (ஸ்ட்ரந் Pஒல்ல்ச்) நான்காவது சுற்று இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.

கடந்த வியாழனன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று வாக்கெடுப்பில் 13 ஆதரவு வாக்குகளையும் ஒரு எதிர்ப்பு வாக்கையும் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவிக்காத ஒரு வாக்கையும் பெற்ற தென்கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி-மூன் அடுத்த செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்படுவதற்கான பிரகாசமான வாய்ப்பை கொண்டிருக்கின்றார் என்றபோதிலும், அவருக்கு கிடைத்திருக்கும் ஒரு எதிர்ப்பு வாக்கு காரணமாக அவரது வெற்றியையும் நிச்சயப்படுத்திக் கூறமுடியாத ஒரு நிலை காணப்படுகிறது. அந்தச் சர்ச்சைக்குரிய ஒரு எதிர்ப்பு வாக்கு பாதுகாப்புச் சபையில் வீட்டோ (ரத்து) அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா) ஏதாவது ஒன்றினால் அளிக்கப்பட்டதா அல்லது இரு வருடங்களுக்கு ஒரு தடவை அச்சபைக்குத் தெரிவு செய்யப்படுகின்ற - வீட்டோ அதிகாரமற்ற - 10 நாடுகளில் ஏதாவது ஒன்றினால் அளிக்கப்பட்டதா என்பதே நியூயோர்க்கில் பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கும் கேள்வி. அந்த வாக்கு நிரந்தர உறுப்பு நாடொன்றினால் அளிக்கப்பட்டதாக இருந்தால் கொரிய வெளியுறவு அமைச்சருக்கு பிரச்சினை தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

செயலாளர் நாயகம் பதவிக்கு போட்டியிட்ட ஏழு பேரில் இந்தியாவின் வேட்பாளரான ஐ.நா. இணைச் செயலாளர் நாயகம் சஷி தரூர் 8 ஆதரவு வாக்குகளையும் 3 எதிர்ப்பு வாக்குகளையும் எந்த அபிப்பிராயத்தையும் தெரிவிக்காத 4 வாக்குகளையும் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறார். முன்னெப்போதையும் விட இத்தடவை ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கான தெரிவுப்போட்டி இலங்கையர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அதற்குக் காரணம் இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி ஜெயந்த தனபால பந்தயத்தில் இறங்யிருந்தமையேயாகும். ஆயுதப்பரிகரணத்துக்கான முன்னாள் ஐ.நா.இணைச்செயலாளரான கலாநிதி தனபால மூன்று ஆதரவு வாக்குகளை மாத்திரம் பெற்று மிகுந்த பின்னடைவான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். இதையடுத்து, தெரிவுப்போட்டியிலிருந்து அவர் விலகுவதாக இலங்கை அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அடுத்த செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளராக இலங்கை அரசாங்கத்தினால் வெகு ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட்ட கலாநிதி தனபாலவே போட்டியிலிருந்து விலகிய முதல் வேட்பாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயோர்க்கில் இருந்து நாடு திரும்பிய கலாநிதி தனபால, போட்டியிலிருந்து விலகியமை ஆசிய வேட்பாளர் ஒருவர் தொடர்பில் கருத்தொருமிப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான முடிவாகும் என்று தெரிவித்திருக்கிறார். `எவருமே தயக்கமின்றி ஏற்றுக் கொள்கின்ற எனது அனுபவத்தையும் தகைமைகளையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லையென்பது இயல்பாகவே ஏமாற்றத்தைத் தருகிறது. பாதுகாப்புச் சபையின் தீர்மானங்கள் திறன்களின் அடிப்படையில் அல்ல, கூடுதலான அளவுக்கு அரசியலை அடிப்படையாகக் கொண்டவையாகவே எனக்குத் தோன்றுகிறது. அதில் உள்ள அரசியல் குறித்து ஆராய்வதற்கு சிறிது காலம் பொறுத்திருப்போம். செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் என்ற வகையில் எனது திறன்களின் மீது கவனத்தைச் செலுத்தி மிகவும் தொழில்சார் முறையில், கண்ணியத்துடன், குறைந்த செலவில் நெறிமுறையின் அடிப்படையில் நாம் பிரசாரங்களை மேற்கொண்டோம். இது விடயத்தில் நான் மிகுந்த திருப்தியடைகின்றேன்' என்றும் கலாநிதி தனபால கூறியிருக்கின்றார்.

உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து ஆதரவைத் தேடும் பிரசாரங்களைச் செய்வதற்கு பெருந்தொகையில் பணத்தைச் செலவிடக்கூடிய நிலையில் இலங்கையின் வேட்பாளர் இருக்கவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்கள் இப்போது கூறுகின்றன. தென்கொரியா, தாய்லாந்து போன்ற ஒப்பீட்டளவில் தனவந்த நாடுகளின் வேட்பாளர்களுடன் கலாநிதி தனபாலவினால் (ஆதரவு தேடும் பணிகளுக்கான செலவுகளைப் பொறுத்தவரை) ஈடுகொடுக்க முடியவில்லை என்பது உண்மையே. பான் கி-மூனை வெற்றிபெறச் செய்வதற்காக ஆபிரிக்க நாடுகளுக்கும் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகளுக்கும் தென்கொரியா கோடிக்கணக்கான டொலர்களை வாரியிறைத்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை சனியன்று செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது. அத்துடன், இந்திய வேட்பாளர் சஷி தரூர் போட்டியில் பிரவேசித்தமையினால்தான் கலாநிதி தனபாலவுக்கு இந்தளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக இலங்கையின் சில வட்டாரங்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. எது எவ்வாறிருப்பினும், வல்லாதிக்க நாடுகளின் நலன்களுக்கு இசைவாகச் செயற்படக்கூடிய ஒருவரை செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்வதில் அதீத கரிசனை காட்டுகின்ற ஒரு மேலாதிக்க அரசியலுக்கு அப்பால் இதில் எதுவுமேயில்லையென்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். செயலாளர் நாயகம் தெரிவுப் போட்டிதொடர்பில் அமெரிக்காவின் ஐ.நா.வுக்கான தூதுவர் ஜோன் பொல்ரன் ஆரம்பம் முதலிருந்து தெரிவித்து வந்த கருத்துகளை இதுவிடயத்தில் நோக்கினால் நிலைமையை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இப்போதும் தெரிவு நடைமுறை துரிதப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்திய வண்ணமே இருக்கிறது.

அதேவேளை, இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் இராணுவ நிலைவரங்கள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் சர்வதேச அபிப்பிராயம் கலாநிதி தனபாலவின் பின்னடைவுக்கு பெருமளவில் பங்களிப்பைச் செய்திருக்கக் கூடும் என்று இலங்கை அவதானிகள் சிலர் கூறுகிறார்கள். இலங்கையின் தற்போதைய நிகழ்வுப் போக்குகளைப் பொறுத்தவரை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் இருப்பதாக கொழும்பு பெருமையுடன் உரிமை கோருகிறது. அவ்வாறானால், சர்வதேச சமூகத்தின் அபிப்பிராயம் கலாநிதி தனபாலவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்ற கருத்து தர்க்கத்துக்கு ஒத்துவருவதாக இல்லையே. இதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் கூறப்போவது என்ன?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.