Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழிந்து போகும் தமிழ் கிராமமான கல்நாட்டிய குளம்

Featured Replies

Kal%201_CI.png

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மனித வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது ஜதார்த்தமே.

இவ்வாறான நிலைகள் மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல பிரதேசங்களிலும் வாழ நிர்ப்பந்தித்திருந்தது.

இவற்றினால் இன்று பல கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி அழிவடைந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது.

வவுனியா அல்நாட்டியகுளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. வட மாகாணத்தின் தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லைக்கிராமமாகவும் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகவும் உள்ள கல்நாட்டியகுளம் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 குடும்பங்கள் செல்வ செழிப்போடு வறுமையும் இடப்பெயர்வும் எதுவென்று தெரியாத வகையில் வாழ்ந்துள்ளனர்.

எனினும் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டில் இப்பகுதியில் இருந்த மக்களின் பாதுகாப்பற்ற வாழ்க்கை காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா உட்பட பல பிரதேசங்களுக்கும் சென்று விட்டநிலையில் இன்று இக் கிராமம் கவனிப்பாரற்று மீள்குடியேற்றம் செய்யப்படாது காணப்படுகின்றது.

தமது கிராமத்திற்கான அடிப்படை வசிதிகள் செய்து தரப்பட்டு மீள்குடியேற்றத்திற்கான உதவிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தாம் மீள் குடியேற ஆவலாக உள்ளதாக தெரிவிக்கும் இக் கிராம மக்கள் தற்போது தாம் அயலவர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையினால் தமது மீள்குடியேற்றம் தொடர்பில் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

இதேவேளை உடைந்த கட்டிடங்களாகவும் காடுகள் படர்ந்த இருப்பிடங்காளகவும் காட்சியளிக்கும் கல்நாட்டியகுளம் கிராமத்தில் மக்கள் குடியேற விருப்பம் தெரிவித்து பல ஆண்டு காலமாகியும் இதுவரை தமக்கான பதில் அளிக்கப்படாமல் காலம் தாழ்த்தபப்டுவதால் இப்பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் மாறி விடுமோ என்ற ஆதங்கத்தையும் அக் கிராமத்தின் வாசிகள் முன்வைக்க தவறவில்லை.

கல்நாட்டினகளம் பாடசாலை மற்றுமு; முன்பள்ளி கட்டிடம் என்பன இக் கிராமத்தை அண்டி அமைக்கப்பட்டுள்ள போதிலும் சன நடமாட்டம் அற்ற இப் பிரதேசத்தில் மாணவாகளi அனுப்புவதில் அஞ்சும் அயல் கிராமத்தவர்கள் தமது பிள்ளைகளை அதிகளவில் வேறு பிரதேச பாடசாலைகளுக்கே அனுப்பி வருவதனால் பாடசாலையில் கணிசமான மாணவர்களே கல்வியை தொடர்ந்து வருவதாகவும் தெரிவிக்கும் கிராமத்தவர்கள் அங்குள்ள முன்பள்ளி கட்டிடம் இன்று பயன்பாடின்றி சனசமூக நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமையினால் எவ்வித அபிவிருத்தியும் காணாது உள்ள இக் கிராமம் காடுகள் படர்ந்த பிரதேசமாக காட்சியளிப்பது வேதனைக்குரியதே.

இப் பகுதியில் உள்ள ஆலயத்தின் திருவிழாவிற்காக ஒன்று கூடி மகிழும் மக்கள் தாம் தமது கிராமத்தில் மீள்குடியேற்றப்படால் தமது வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கையோடு காலங்களை கடத்தி செல்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகளே இவர்களின் மீள்குடியேற்றத்தில் ஆவன செய்யவேண்டியவர்களாக காணப்படுகின்றனர். அதனூடாகவே அழிவடைந்து செல்லும் தமிழ் கிராமத்தை செழிப்புற வைக்க முடியும் என்பது ஜதார்த்தமாகும்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111610/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.