Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் அறவழிப் போராட்டம் அரசின் வாக்குபலத்தையே பலப்படுத்தும்! - என்கிறார் தயான் ஜயதிலக 

[Monday 2014-09-15 18:00]
Dayan-jeyathilake-150.jpg

விரைவில் தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் அறவழிப் போராட்ட அறிவிப்பு அரசாங்கத்தின் வாக்குபலத்தை மேலும் பலப்படுத்தி இலகுவான வெற்றியை உறுதி செய்வதாய் அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார், கலாநிதி தயான் ஜயதிலக. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இந்து பத்திரிகைக்கு ஜனாதிபதி அளித்த செவ்வி, அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி தயான் ஜயதிலக,

 

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பழம்பெரும் அரசியல் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் அறவழிப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்தில் அது தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தெற்கு உட்பட சிங்கள மக்களின் அனுசரணையைப் பெறமுடியாது போகும் நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கும்.

காரணம் எதிர்வரும் ஜனவரிக்குப் பின்னர் ஜனாதிபதிதேர்தல், பாராளுமன்ற தேர்தல் என தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பை கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவைத் தவிர இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிங்களர்வர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அதேபோன்று சாத்திவீகப் போராட்டத்தையும் தெற்கிலுள்ள சிங்களவர்கள் விரும்பமாட்டார்கள். அவ்வாறான நிலையில் இந்த செயற்பாடுகள் மீண்டும் இடம்பெறுமாயின் அரசாங்கம் மீண்டும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு வடக்கு, கிழக்கு முனைகிறது எனப் பிரசாரப்படுத்தும். அதன் மூலம் தனது வாக்குவங்கியை காப்பற்றுவதோடு மட்டுமல்லாது மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்வதாலேயே அதனைக்கட்டுப்படுத்தும் என்பதை முன்னிலைப்படுத்தும். இதன் மூலம் அரசாங்கம் அதிக பெரும்பான்மையைப் பெறுவதோடு இலகுவான வெற்றியையும் உறுதி செய்து கொள்ளும்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு மக்களை வாக்களிக்காது தடுத்து முட்டாள்த்தனமான செயற்பாட்டை மேற்கொண்டனர். அதேபோன்று பழம்பெரும் கட்சியான தமிழரசுக்கட்சியும் இவ்வாறன போராட்டத்தை மேற்கொள்வதால் மீண்டும் அதே தவறையே இழப்பதாய் அமையும். இவ்வாறான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க அத்தேர்தலில் போட்டியிடுவராயின் மீளமுடியாத வீழ்ச்சியடைவார் என்பதும் உறுதியானது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில காரணங்களை முன்வைத்திருக்கின்றபோதும் இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என த இந்து பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட சில காரணங்கள் அவருடைய தனிப்பட்ட காரணங்களா அல்லது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பது தெளிவில்லாதுள்ளது. எனினும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற கூற்று கடந்த காலத்தில் காணப்பட்ட நிலைமைகளில் பாரிய முன்னேற்றத்தையே காட்டுகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்தின் கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது அவசியம் எனக் குறிப்பிட்டிருக்கின்றது. இந்தக் கருத்தானது நல்ல சந்தர்ப்பமொன்று ஏற்பட்டிருக்கின்ற தருணத்தில் அதனை வீணடிப்பதாய் அமைந்துள்ளது. முதலாவதாக ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாகப் பேசுவதற்கு தமக்குள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கலாம். அதன்போது அதற்கு ஜனாதிபதி அளிக்கும் பதிலின் மூலம் அவர் பேச்சுவார்த்தைகளின் கொண்டிருக்கும் அக்கறையை பகிரங்கப்படுத்த முடியும்.

இரண்டாவதாக சர்வதேச கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தமே தேவை எனக் கூறுவதானது சந்தர்ப்பத்தை நழுவிடுவதற்கும் எதிர்காலத்திலும் இதேநிலைமையே தொடர்வதற்கும் காரணமாய் அமைந்துவிடும். சர்வதேச கண்காணிப்பு அவசியம் என கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு நம்பிக்கைக்குரிய நாடுகள் என இந்தியா உட்பட சில நாடுகளை முன்மொழியலாம். அவ்வாறான நிலையில் அரசாங்கத்தரப்பு தனது நம்பிக்கைக்குரிய நாடு என இந்தியாவை முன்மொழியும். இந்த முன்மொழிவுகள் நேரெதிராக இருக்கும் சமயத்தில் துரதிஷ்ட வசமாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையென்பது கேள்விக்குறியாகிவிடும்.

ஆகவே சர்வதேச கண்காணிப்பு அல்லது மத்தியஸ்தம் என்பது தேவையற்றதொன்றாகும். என்ன விடங்கள் பேசுவதென்றாலும் நாட்டின் அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. அந்நிலையில் தேசிய ரீதியில் பக்கச்சார்ப்பற்ற குழுவொன்றின் முன்னிலையில் பேச்சுக்களை முன்னெடுப்பதே சாலச்சிறந்தது. குறிப்பாக சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள், சிரேஸ்ட சட்டத்தரணிகள், போன்றவர்களை உள்ளடக்கிய அனைத்து இனத்தவரும் அடங்கிய குழுவொன்றை அமைத்து அதன் முன்னிலையில் இனப்பிரச்சினை தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

1980களில் இந்த நாட்டின் ஆட்சிப்பீடத்தில் காணப்பட்ட அரசாங்கத்தினைப் போன்ற நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை. அந்த அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் இந்தியாவின் மத்தியஸ்த்தத்திற்கு அல்லது தலையீட்டு வழிவகுத்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் முழு இலங்கைத் தீவையும் ஆட்சிசெய்து வருகின்றமையால் அவ்வாறான நிலையொன்று ஏற்படுவதும் மிகவும் கடினமானதொன்றாகும் என்றார்

http://www.seithy.com/breifNews.php?newsID=116855&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடக்கும்  நாடு ரீதியிலான  எந்தத் தேர்தலானாலும் வெல்லப்போவது ஒரு சிங்களக்கட்சியே. எந்தச் சிங்கள இனவாதக் கட்சி  அரசு அமைத்தாலும் ஈழத் தமிழர்க்களின் நலன்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். இவர் ஏதோ குழந்தைகளுக்குப் பூச்சாண்டி காட்டுவது போல அறிக்கைகளை விடுகின்றார்.

எத்தனையோ பேச்சுவார்த்தைகளைச்  சிங்கள அரசும் தமிழ்ச் சமூகமும்
நடத்தி முடித்திருந்தும் இதுவரை எந்தத் தீர்வும் இல்லை. இதன் அடிப்படையில்தான் தமிழரசுக் கட்சி மூன்றாவது தரப்பாகச் சர்வதேசத்தை  அழைக்கின்றது. சர்வதேச ஒத்துழைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளிலேயே மக்களும் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையில் தயானுக்கு மண்டை கழண்டு போய்விட்டதா அல்லது பயத்தில் பிதற்றுகின்றாரா?

சாத்வீகப் போராட்டம் அல்லது மக்கள் போராட்டம் தமிழ்க் கட்சிகளினால் முன்னெடுக்கப்பட்டால் சிங்கள அரசுகள் ஆட்டம் காணப்போவது உறுதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.