Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்கடத்தல் அராஜகங்களின் பின்னால் அரங்கேறும் நாடகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்கடத்தல் அராஜகங்களின் பின்னால் அரங்கேறும் நாடகங்கள்

கொழும்பில் தமிழ் வர்த்தகர்களும், ஏனையோரும் கடத்தப்படுதல், அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கப்பம் அறவிடல் போன்ற அராஜகங்கள் கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றன. அரச பாதுகாப்புத் தரப்பின் "ஆசீர்வாதத்துடனேயே' இந்தச் சட்டவிரோத அராஜகம் தொடர்ந்து அரங்கேறு கின்றது என்பதே தமிழர் தரப்பின் ஒரே முடிவு.

அதனை மறுத்த அரசுத் தரப்பு, ஆட்கடத்தல் அராஜ கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டு, இந்த அராஜகங்களுக்கு எதிராகத் தலைநகரில் தமிழர்கள் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கும் தடுப்புப் போட்டுக் கொண்டது.

அரசின் உறுதிமொழியை அடுத்து ஆட்கடத்தல் சம் பவங்கள் குறைந்தனவே தவிர, அடியோடு நிற்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் கடந்த வெள்ளியன்று துணிச் சலான கடமையுணர்வு கொண்ட சட்டவிரோத செயற் பாடுகளுக்குத் துணைபோக விரும்பாத பொலிஸ் அதிகாரிகள் சிலரால், இத்தகைய கடத்தல் சூத்திரதாரி ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டிருக் கின்றார். இந்தக் கைதை அடுத்து அம்பலமான உள்வீட்டுத் தகவல்களும், கைது விடயத்தை அரசுத் தரப்பு கையா ளும் விதமும் இவ்விவகாரத்தில் அரசு உயர் மட்டத் தின் "குள்ளநரித்தனம்' குறித்து மேலும் சந்தேகத்தைத் தமிழர் தரப்புக்கு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதே இன்றைய நிலைமையாகும். கடத்தலை அடுத்து பேரம் பேசப்பட்ட 25 லட்சம் ரூபா கப்பப் பணத்தை அறவிடுவதற்காக வந்த நபரே இப்போது கைது செய்யப் பட்டிருக்கின்றார். இதேபோன்ற கடத்தல்களுடன் தொடர்புடைய மூவர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலிட அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் அரசின் பிரதி அமைச்சரான இராதாகிருஷ்ணன், அந்த மூவர் போன்று இவரும் விடு விக்கப்படுவாரா என்று பொலிஸ் மா அதிபரிடமே கேள்வி எழுப்பும் நிலைக்கு பொலிஸ் துறையின் "நியாயச் செயற் பாடு' மேம்பாடு (?) கண்டிருக்கின்றது.

இவ்விடயத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தங் கள் அமைப்பின் உறுப்பினர்தான் என்பதைக் கருணா அணியே ஒப்புக் கொண்டிருப்பதாகக் கொழும்பு ஊட கங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஆனால், அந்தக் கைது தொடர்பாகத் தங்கள் மீது சுமத்தப்படும் ஆள்கடத் தல் மற்றும் கப்பம் அறவிடல் குற்றச்சாட்டுத்தான் அடிப் படை ஏதுமற்றது என்று அந்தக் குழு கூறியிருக்கின்றது.

இதேவேளை, கருணா குழுவைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு அரசின் பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் வேறு ஏதோ பிதற்றி, குட்டைப் போட்டு உடைத்து விட்டிருக்கின்றது.

""கைது செய்யப்பட்ட நபர் ஆட்கடத்தல், கப்பம் அறவிடுதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்தான். ஆனால், அவர் புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நபர்'' என்று வியாக்கியானம் கூறியிருக்கின்றது பாது காப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம்.

ஆக கைதானவர் கருணா குழு உறுப்பினர் என்பதை அக் குழுவே உறுதிப்படுத்துகிறது. அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால், அரசின் பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது. அதேசமயம், அவர் கருணா குழு உறுப்பினர் என்ற தட்டை மாற்றிப் போட்டு அவர் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் என்று கதைவிட முயல்கிறது. "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பாணியில் இந்த இரு தரப்பும் தெரிவிக்கும் கருத்துக்களில் இருந்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்வது மக்களுக்கு அப்படி ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. அவர்கள் அவ்வளவு தூரம் விடயம் புரியாதவர்களும் அல்லர். முக்கிய சந்தேகநபர் சிக்கியுள்ள ஆரம்பக் கட்டத்தி லேயே விவகாரத்தைத் திசை திருப்ப எடுக்கப்படும் இத் தகைய முயற்சிகளையும், போக்குகளையும் பார்க்கும் போது இவ்விடயத்தில் தமக்கு நீதி செய்யப்படும் குற்ற மிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழர்கள் நம்புவதற்கு அடிப்படை ஏதும் இல்லை என்பது துலாம்பரமாகத் தோற்றுகின்றது.

கொழும்பில் கடந்த இரு மாதங்களில் 33 பேர் கடத் தப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 9 பேர் கொலை செய் யப்பட்டிருக்கின்றனர். எஞ்சியோரில் 11 பேர் குறித்து விவரங்கள் எவற்றையும் பெறமுடியாமல் இருக்கிறது என்று, இக்கடத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசியல் பிரமுகர்கள் நிறுவியுள்ள "மக்கள் கண்காணிப்புக் குழு' தெரிவிக்கின்றது. இது தவிரவும், கடத்தப்படாமல் அச்சுறுத்தலுக்கு அடங்கியே கப்பம் செலுத்திய தமிழ் வர்த்தகர்களின் எண்ணிக்கை வேறு. இவர்கள் அனைவரினது விடயங்களில் நீதி நிலை நாட்டப்படும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர் என நம்புவதற்கு இடமேயில்லை.

திரைமறைவில் அரங்கேறும் நாடகங்கள், உண்மையை மூடிமறைக்கச் செய்யப்படும் திரிப்புக்கள், மேலிடத்தின் எதேச்சாதிகாரத் தலையீடுகள் என்பன அதைத்தான் எடுத்தியம்புகின்றன.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.