Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியாக்கிரகத்தின் கதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் கடந்து விட்டன. தென்னாபிரிக்காவில் வாழ்ந்த சகல இந்தியர்களையும் தனியான ஒரு இனக்குழுவாக வகைப்படுத்தி அவர்கள் பதிவு செய்ய வேண்டியதைக் கட்டாயமாக்குவதற்காக இன ஒதுக்கல் வெள்ளையர் ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கண்டித்து குரலெழுப்புவதற்காக ஜோஹன்னஸ்பேர்க்கில் 1906 செப்டம்பர் 11 இல் காந்தி நடத்திய எதிர்ப்புக் கூட்டமே சத்தியாக்கிரகத்தின் பிறப்பாக அமைந்தது. பின்னர் அந்த அகிம்சை ஆயுதத்தையே இந்தியாவில் காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விடுதலைப் போராட்டத்திலும் காந்தி பயன்படுத்தினார். சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதி தபோ எம்பெகியும் மகாத்மா காந்தியைப் போற்றிப் புகழ்ந்ததுடன் வன்முறை மோதல்கள் நிறைந்த இன்றைய யுகத்தில் காந்தியக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

`சத்தியாக்கிரத்தை நினைவு கூரும்போது நாம் மகாத்மா காந்திக்கு வணக்கம் செலுத்துகின்றோம். அவருக்கு வணக்கம் செலுத்தும்போது நாம் தென்னாபிரிக்காவைக் கௌரவிக்கின்றோம். தென்னாபிரிக்காவில்தான் மனவலிமையைப் பெற்று அகிம்சைப் போராட்ட கோட்பாட்டை காந்தி வகுத்துக் கொண்டர். தென்னாபிரிக்காவில் இனப்பாகுபாட்டை எதிர்ப்பதற்கும் பின்னர் இந்தியாவில் விடுதலையை வென்றெடுப்பதற்கும் காந்தி அகிம்சை ஆயுதத்தையே பயன்படுத்தினார்' என்று கலாநிதி சிங் தெரிவித்தார். தென்னாபிரிக்காவின் விடுதலைக்கான போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பை ஏற்றுக்கொண்டு புகழ்ந்துரைத்த தபோஎம்பெகி `மகாத்மா காந்தி இந்தியாவினதும் தென்னாபிரிக்காவினதும் மகன் என்பதைக் கூறிக்கொள்வதில் நான் பெருமையடைகின்றேன். 1947 இல் இந்தியாவிலும் 1994 இல் தென்னாபிரிக்காவிலும் விடுதலையையும் ஜனநாயகத்தையும் அடைவதற்கான வெற்றிப்பயணத்திற்கு இணையற்ற தலைமைத்துவத்தையும் உத்வேகத்தையும் வழங்கியவர் மகாத்மா காந்தி' என்று குறிப்பிட்டார். நாகரிகங்களின் மோதல் இடம்பெறுவதாக வர்ணிக்கப்படும் இன்றைய யுகத்தில் சத்தியாக்கிரகக் கோட்பாடு தொடர்ந்தும் பொருத்தமானதாக இருப்பதாக இந்தியப் பிரதமர் கூறிய அதேவேளை, காந்தியின் சத்தியாக்கிர வேட்கை நவீன மனித சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான உத்வேகத்தை அளிக்கவேண்டும் என்று தபோ எம்பெகி கேட்டுக்கொண்டார்.

அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அரிதாகக் காணப்படக் கூடிய ஒரு அறப் போராளி என்று வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தியின் சக்தியாக்கிரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிக்கு இட்டுச் சென்ற அரசியல் ஆயுதமாகக் கருதப்படுகின்றது. இன்றும் கூட உண்ணாவிரதப் போராட்டம் எளியவர்களின் ஆயுதமென்று இந்தியாவில் வர்ணிக்கப்படுகின்றது. அதே ஆயுதத்தை கடந்த ஆறு வருடங்களாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு இந்திய இளம் பெண்ணின் நிலை பற்றிய செய்திகளை அறியும் போது சத்தியாக்கிரகத்தின் நூற்றாண்டு நிறைவில் காந்தியின் அந்த ஆயுதத்தின் கதி குறித்து உண்மையில் ஒருகணம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் ஆயுதப்படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து 35 வயதான இரோம் ஷர்மிளா சானு என்ற பெண்மணி 2000 நவம்பர் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். அந்த மாநிலத்தின் மலோம் என்ற நகரில் அந்தத் திகதியில் 10 இளைஞர்களை அசாம் றைபிள் பரா இராணுவத் துருப்புகள் படுகொலை செய்ததையடுத்து படையினருக்கு அளவு கடந்த அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்று மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை தொடருகின்றார். போராட்டத்தை ஆரம்பித்த மூன்று தினங்களில் அவரைக் கைது செய்த பொலிஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டி விளக்கமறியலில் வைத்தனர். மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் ஷர்மிளாவை அன்று முதல் அனுமதித்த பொலிஸார், மூக்குத் துவாரங்களின் ஊடாக குழாய்களைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக நீராகாரங்களைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் படைகளுக்கான விசேட அதிகாரங்கள் சட்டம் மணிப்பூரில் 26 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. பிரிவினை வாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இச்சட்டம் அவசியமானது எனக் கூறும் அரசாங்கம், அதை வாபஸ் பெறப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. அதேவேளை, ஷர்மிளாவின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டு அவர் உயிர் துறப்பதை அனுமதிக்கவும் அரசாங்கம் தயாராயில்லை. மனிதஉரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்துக்கு தார்மீக வலுவை கொடுக்கக்கூடிய நிலைமையை ஷர்மிளாவின் உண்ணாவிரதம் தோற்றுவித்து விடக்கூடாது என்பதில் அரசாங்கம் குறியாக இருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதியுடன் ஷர்மிளாவின் போராட்டம் 6 வருடங்களைப் பூர்த்தி செய்யப் போகிறது. தற்கொலை முயற்சிக் குற்றத்திற்காக கூடுதல்பட்சம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையைத் தான் விதிக்க முடியும். ஒரு வருடம் பூர்த்தியானதும் ஷர்மிளாவை விடுவிக்கும் பொலிஸார் பின்னர் மறுநாளே கைது செய்கின்றனர். இவ்வாறாக விடுதலையும் கைதும் ஆறு வருடங்களாகத் தொடருகிறது. மேற்குறிப்பிட்ட சட்டத்தை நிபந்தனையற்ற முறையில் அரசாங்கம் வாபஸ் பெறுவதாக அறிவிக்காதபட்சத்தில் தனது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று ஷர்மிளா திட்டவட்டமாக அறிவித்து விட்டார். மணிப்பூர் மாநிலத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் இப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை அளித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வருடமும் செய்வதைப் போன்று நேற்று முன்தினம் புதன்கிழமை மணிப்பூர் பொலிஸார் ஷர்மிளாவை விடுதலை செய்தனர். அவரது ஒரு நாள் விடுதலையைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய மனித உரிமைகள் ஆர்வலர் குழுவினர் இம்பால் விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததற்கு மத்தியிலும், ஷர்மிளாவை விமானத்தில் ஏற்றி புதுடில்லிக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

புதுடில்லியில் வந்திறங்கிய ஷர்மிளா நேரடியாக ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செய்தார். `மணிப்பூர் மக்களுக்கு கொடுமைகளைச் செய்யும் இராணுவத்தினருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென்ற எனது கோரிக்கை நிறைவேறாமலேயே நான் சாக வேண்டுமானால், மரணப் படுக்கையில் வீழ்வதற்கு முன்னதாக, மகாத்மா காந்தியின் ஆசீர் வாதங்களைப் பெறவிரும்புகின்றேன்' என்று ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறினார். `நான் காந்தியின் பாரம்பரியத்தை, கோட்பாடுகளை பின்பற்ற விரும்புகின்றேன். இதைத் தியாகம் என்று நீங்கள் அழைக்கக் கூடும். ஆனால், என்னைப் பொறுத்தவரை இது எனது தலையாய கடமை' என்று கூறும் ஷர்மிளாவின் அவலம் சத்தியாக் கிரகம் என்ற போராட்ட ஆயுதத்தைப் பற்றிய இந்திய ஆட்சியாளர் களின் உன்னதமான உச்சாடனங்களுக்கும் அவற்றை நடை முறையில் கடைப் பிடிப்பதற்கும் இடையிலான முரண்பாடுகளை உலகிற்கு பறைசாற்றுகிறதல்லவா?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.